என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது
- மாவட்ட உதவி திட்ட அலுவலர் பங்கேற்றார்
பெரம்பலூர்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்டக்கூறின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது.
பெரம்பலூர் ரோவர் மேல்நிலை பள்ளியில் வட்டார வளமையம் சார்பில் நடந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கிவைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, கல்வி ஒருங்கிணைப் பாளர்கள் பாரதிதாசன், சுப்ரமணியன், ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் ஆகியோர் பேசினர். குழு நடனம், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு , நடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாசிரியர்கள் துர்கா, ரூபி, மரகதம் ஆகியோர் முன்னின்று போட்டிகளை நடத்தினர். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் சிறப்பாசிரியர் துர்கா நன்றி கூறினார்.
இதே போல் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை கயல்விழி தலைமையிலும், ஆசிரியர் பயிற்றுநர் குணசேகரன் முன்னிலையிலும், எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் தலைமையிலும், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலைவாணன், ஜனனி ஆகியோர் முன்னிலையி லும்,பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் தலைமையிலும்,
பள்ளியின் தலைமையாசிரியை திருமலைச்செல்வி முன்னிலையிலும் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் ராணிபரிமளா, மகேஸ்வரி மற்றும் தனவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்