search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியை, பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, நடிகர் தாமு மற்றும் முதல்வர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமு பங்கேற்றார்.
    • மாணவ-மாணவிகள் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் சார்பில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ''எதிர்காலம்? மேற்படிப்பிற்கான பயணம்...'' என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் வரவேற்றார். டீன் மாரிசாமி உள்பட பலர் பேசினர்.

    சிறப்பு விருந்தினராக சினிமா நடிகரும், பலகுரல் கலைஞர் மற்றும் அப்துல்கலாமின் சீடருமான தாமு கலந்து கொண்டார். இவர் 2021-ம் ஆண்டிற்கான சிறந்த கல்வி சேவைக்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் நடிகர் தாமு பேசியதாவது:-

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசிய இதே கல்லூரி மேடையில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை விதைக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதற்கான அறிவை தேட ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது ஆகும்.

    ஆசிரியர்கள் 2-வது பெற்றோர்கள். அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். ஆன்லைன் கேம்ஸ், வீடியோ கேம்ஸ் போன்றவைகளில் கவனம் செலுத்தக்கூடாது.

    உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக்கும் அதீத சக்தி இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. ''கனவு காணுங்கள்'' என்ற அப்துல்கலாமின் வார்த்தைகளை நனவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பி.எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியில் கல்லூரி முதல்வர் சுந்தரராஜ், கல்வி இயக்குநர் கோபால்சாமி, பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திருப்பரங்கிரிராஜன், பி.எஸ்.ஆர். கல்வியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், அனைத்து கல்லூரிகளின் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சயின்ஸ் மற்றும் ஹூமானிட்டிஸ் துறைத்தலைவர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.

    Next Story
    ×