search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீர வணக்க நிகழ்ச்சி
    X

    வீர வணக்க நிகழ்ச்சி

    • வீர வணக்க நிகழ்ச்சி நடந்தது
    • விசிக தெற்கு ஒன்றிய சார்பில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விசிக தெற்கு ஒன்றிய சார்பாக மாவீரர் தினத்தை முன்னிட்டு வீர வணக்க நிகழ்ச்சி மற்றும் ஒன்றிய கலந்தாய் கூட்டம் வானதிரையின் பட்டினம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட அமைப்பாளர் செ.க. குமார் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்திற்கு முன்னிலையாளர்களாக மஞ்சுளா இளங்கோவன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் பூமா கொளஞ்சியப்பன், ஒன்றிய துணை செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் சி. பி. ராஜா கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் தலைமையில் சட்ட நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விசிகவினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×