search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "problem"

    • கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கதவு திறக்காமல் போன விவகாரம்...
    • விரைவில் விசாரணை தொடங்க உள்ளது

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலையத் திலிருந்து பல்வேறு வெளிநா–டுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.அதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்குவதற்கு தயாரானார்கள். ஆனால் விமானத்தில் கதவுகள் திறக் கப்படவில்லை. ஊழி–யர்கள் முயற்சி செய்தும் கதவை திறக்க முடியவில்லை. தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.இதற்கிடையே விமானத் திற்குள் சிக்கிக்கொண்ட பயணிகள் பெரும் அவ–திக்கு ஆளானார்கள். பின்னர் உடனடியாக இது பற்றி தொழில்நுட்ப வல்லு–நர்களுக்கு தகவல் தெரி–விக்கப்பட்டது. அவர்கள் வந்து சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கதவை திறந்தனர். அதன் பிறகே பயணிகள் வெளியே வர முடிந்தது.இந்த விவகாரம் தொடர் பாக விமான நிலைய ஆணையக் குழுவின் சார் பில் விசாரணைக்கு உத்தர–விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த விமான நிலைய ஆணைய குழுவினர் விசாரணையை தொடங்குவார்கள் என்று தெரிகிறது.

    • 5 முறை சமாதான கூட்டம் நடத்தியும் பலனில்லை
    • கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் பழமை வாய்ந்த பட்டவையா மற்றும் கொம்புக்கார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெற்ற நிலையில் அப்போது இருந்தே கோவிலில் வழிபாடு மற்றும் திருவிழா கொண்டாடுவதில் கோயில் உரிமைக்காரர்களான தானான், சின்னத்தானான் வகையறாக்களுக்கும் சிவந்தான், ஏகன் வகையறாக்களுக்கும் பிரச்சனை நிலவி வந்தது.இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு பட்டவையனார் கோவில் வளாகத்தில் கல்வெட்டு வைக்க முயன்ற சிவந்தான் கரைகாரர்களுக்கும், அதைத்தடுக்க முயன்ற தாணான் கரைகாரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளாக மாறியது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டதில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் தாண ன் மற்றும் சிவந்தான் கரைகளைச் சேர்ந்த 8 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி மற்றொரு தரப்பை சேர்ந்த மக்கள் அன்னதானத்திற்காக வெட்டி வைத்திருந்த காய்கறிகளை சாலையில் கொட்டி கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அறந்தாங்கி- பட்டுக்கோட்டை நெடுஞ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.இக்கோயில் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே, ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் 2 சமாதான கூட்டமும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு சமாதான கூட்டமும் நடைபெற்றது, இந்நிலையில் மீண்டும் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. பல்வேறு வகையில் பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன் , ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி மற்றும் கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவ லர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் இருதரப்பு சமாதான கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றதுஇந்த சமாதான கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் கோயில் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

    • இருவருக்குமிடையே இட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • தகராறில் மணிமாறன் அவரது மகன் உள்ளிட்டோர் பிரகலாதனை தாக்கியுள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரகலாதன் என்பவருக்கும் இடையே இட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    நேற்று மணிமாறன் அந்த இடத்தில் இருந்த வேலியை அகற்றியுள்ளார் . இதில் மணிமாறன் மற்றும் பிரகலாதன் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த தகராறில் மணிமாறன் அவரது மகன் உள்ளிட்டோர் சேர்ந்து பிரகலாதனை கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர் .

    இதில் பலத்த காயமடைந்த அவர் சீர்காழி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் பாகசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • நாங்குநேரி, திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 248 குடியிருப்புக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • இந்த திட்டம் தொடங்கி 20 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் 80 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 45 ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு, பா.ஜனதா ராதாபுரம் தெற்கு ஒன்றிய ஊடக பிரிவு தலைவர் காமராஜ் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பற்றாக்குறை

    நாங்குநேரி, திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 248 குடியிருப்புக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நெல்லை தாமிரபரணியில் தொடங்கி இந்த திட்டம் பத்தமடை, சிங்கிகுளம், ராதாபுரம், வடக்கன்குளம் ,ஆவரைகுளம், நாங்குநேரி, திசையன்விளை பேரூராட்சி உட்பட 15 நீரேற்றும் நிலையங்களை கொண்டுள்ளது.

    ஒரு நீரேற்று நிலையத்திற்கு எலக்ட்ரீசியன், காவலாளி, ஆபரேட்டர்கள் பணியாற்ற வேண்டும். இந்த திட்டம் தொடங்கி 20 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் 80 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 45 ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ரூ.7 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    குடிநீர் வினியோகம் பாதிப்பு

    சமீபத்தில் ஒப்பந்தம் எடுத்த ஒரு நிறுவனம் 45 பணியாளர்கள் இருந்த இடத்தில் 15 பணியாளர்களாக குறைத்துவிட்டது. இதனால் பல பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களில் பம்பு ஆபரேட்டர்கள் இல்லாமல் நீர் விநியோகிப்பதில் கடும் சிக்கல் நிலவி வருகிறது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தான் இந்த திட்டத்தின் கீழ் வரக்கூடிய அனைத்து கிராமங்களுக்கும் தங்கு தடையின்றி தாமிரபரணி குடிநீர் வழங்க முடியும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.
    • அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் ஆகியன குறித்து இருத்தல் கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெ க்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், 2021-2023 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் கூடவுள்ளது. இதனையொட்டி திருவாரூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொதுபிரச்சனைகள் மற்றும் குறைகள் குறித்து மனுக்களை வழங்கலாம்.

    மனுவினை தமிழில் எழுதி தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை– 600009 என்ற முகவரிக்கு ஐந்து நகல்களை அக் 7ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    எழுதப்படும் மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பலஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.

    மனுக்கள் ஒரேயொரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொருதுறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.

    மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    ஆனால் மனுவில் தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் ஆகியன குறித்து இருத்தல் கூடாது.

    சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்.

    ஒரே மனுதாரர் பல மனுக்களைஅனுப்பி இருந்தாலும், குழு முக்கிய த்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    மனுதாரர் முன்னிலையில் குழுக்கூட்டத்தில் கலந்துகொ ள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.

    இது குறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாள் குறித்த தகவல் தனியாக அனுப்பப்படும். 7.10.22-க்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வி ற்கு எடுத்துக் கொள்ளப்படாது.

    இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • வீட்டின் எதிரில் தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
    • மணிவாசகத்தை, மருமகன் சுசீந்திரன் கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு அழகு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 65). கோவில்அர்ச்சகர். இவர் நேற்றிரவு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மணிவாசகத்தின் மகள் தமிழ்மாலா, மருமகன் சுசீந்தரன் இருவரும் வீட்டின் எதிரில் தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்பொழுது திடீரென நடந்து சென்று கொண்டிருந்த மணிவாசகத்தை, மருமகன் சுசீந்திரன் கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிவாசகத்தை அருகில் இருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குபதிவு செய்து சுசீந்தரனை கைது செய்தனர்.

    • கோவிலில் வழிபாடு நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டு இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அன்னலட்சுமி புரத்தில் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜை நடத்துவது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது.

    நேற்று முன்தினம் நடந்த இருதரப்பினர் மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அன்னலட்சுமிபுரத்தை சேர்ந்த ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்களை மற்றொரு தரப்பினர் சரமாரியாக தாக்கினர்.

    இதை அறிந்து ஜெயராமனின் மகன் ராமர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்த தாக்குதலில் அந்த கிராமத்தை சேர்ந்த இருளாயி, குமுதம், பவித்ரா, பானுமதி, முருகேசன், மலைசாமி, பூமிநாதன், சந்திரன், அழகர்சாமி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து கமுதி, சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வழக்குப்பதிவு

    இதுகுறித்து ராமர் கொடுத்த புகாரின்பேரில் 18-ம் படியான் , சிவகுமார்,வடிவேல், விக்னேஷ்வரன், அஜித்குமார், பூரணம் உள்பட 8 பேர் மீது வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏதேனும் அசம்பாவிகள் நடக்கும் முன் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    டி.களத்தூர் கிராமத்தில் சீராக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் கிராமத்தின் மேற்கு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால், ஆத்திரமடைந்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று காலை துறையூர்-திருச்சி சாலையில் டி.களத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் ஆலத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி வெங்கடேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, இனிவரும் காலங்களில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில், ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏமூர் நடுப்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று கொண்டார். கூட்டத்தில், கரூர் அருகே ஏமூர் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அங்கு அமைக்கப்பட்ட 3 ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு அந்த தொட்டியில் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் வற்றிவிட்டதால் பொதுமக்கள் வயல்வெளியிலுள்ள கிணறுகள் உள்ளிட்டவற்றுக்கு அலைந்து திரிந்து குடிநீர் பிடித்து வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கொடுத்த மனுவில், கரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் 1,250 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த நவம்பர் மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கல்வி அதிகாரியிடம் கேட்ட போது, அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்டவற்றின் கீழ் பட்ஜெட் ஒதுக்கீடு பெற தவறியதால் தாமதம் ஏற்படுவதாக கூறுகிறார். இதனால் வீட்டு வாடகை செலுத்துவது, மளிகை சாமான் வாங்குவது உள்ளிட்டவற்றுக்கு பணம் இல்லாமல் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத சம்பளத்தை வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கொடுத்த மனுவில், அமராவதி ஆற்றின் குறுக்கே கோயம்பள்ளி-மேலப்பாளையத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலப்பணிகள் நடந்தன. 70 சதவீத பணிகள் நிறைவடைந்த போதும், மீதிப்பணியை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டனர். எனவே அதனை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வீரராக்கியம் ரெயில்வேகேட் அடிக்கடி மூடப்படுவதால், அங்குள்ள ஊர்களுக்கு பொதுமக்கள் தடையின்றி செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் வேலை செய்யும் செவிலியர் உதவியாளர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் செவிலியர் உதவியாளருக்கான 2 ஆண்டு டிப்ளமோ படிப்பினை படித்து முடித்து விட்டு தான் மருத்துவமனைகளில் வேலை செய்கிறோம். எனினும் நாங்கள் படித்த படிப்பின் சான்றிதழ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினால் ஏற்று கொள்ளாத நிலை உள்ளது. இதனால் அரசு வேலை உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகிறோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மத அடையாள கோவில் கட்டப்படுகிறது. மத அடையாளங்கள் அரசு அலுவலகங்களில் இருக்க கூடாது என்கிற உத்தரவினை மீறும் வகையில் உள்ளது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட சமநீதி கழகத்தினர் மனு கொடுத்தனர்.

    மண்மங்கலம் நடையனூரை சேர்ந்த முன்னாள் நிலஅளவை துறை ஊழியர் அர்ச்சுனன் (வயது 55) அளித்த மனுவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டு பணிநீக்கம் செய்து விட்டனர். இது குறித்து விசாரித்து மீண்டும் எனக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில், குடும்பர், பண்ணாடி என அழைக்கப்பட்ட பிரிவினை ஒன்று சேர்த்து தேவேந்திர குலவேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ஆண்டாண்டு காலமாக தாங்கள் விவசாயம் செய்து வருவதை காட்டும் விதமாக நெற்பயிருடன் வந்து தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தினர் சிலரும் மனு கொடுத்தனர்.

    தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு மடக்குகோல் மற்றும் கருப்பு கண்ணாடி, மடக்கு சக்கர நாற்காலி மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி என ரூ.26,150 மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும் தேசிய அளவில் தமிழக அணியில் இடம் பெற்று புனேயில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்ற தனியார் பள்ளி மாணவர்களை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி குமரேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி லீலாவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மணப்பாறை:

    மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட முத்தன்தெரு பகுதியில், கஜா புயல் பாதிப்புக்கு பின்பு இன்னும் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று காலை மணப்பாறை பஸ் நிலையம் அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடும்படி கூறினர்.

    ஆனால் பொதுமக்கள், ‘எங்கள் பகுதியில் குடிநீர் வருவதே இல்லை. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே நகராட்சியில் இருந்து அதிகாரிகள் வந்து உரிய உத்தரவாதம் அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம்’ என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் இதுபற்றி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆணையர் சுதா, பொறியாளர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் முத்தன் தெரு பகுதிக்கு உடனே சென்று குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் உடனடியாக நகராட்சி அதிகாரிகள் குடிநீர் வழங்குவதற்கான பணியை தொடங்கினர்.
    வேளச்சேரி-செயிண்ட் தாமஸ் வரை பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்பு பணி 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் 500 மீட்டர் நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. #FlyingTrainProject
    சென்னை:

    சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் சேவை தற்போது நடந்து வருகிறது. பறக்கும் ரெயிலில் தினமும் 50 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் பறக்கும் ரெயில் திட்டத்தை வேளச்சேரி- செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன.

    தெற்கு ரெயில்வே, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து பறக்கும் ரெயில் திட்டத்துக்கான நில ஆர்ஜித பணிகளில் ஈடுபட்டு வந்தது.

    நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் இடையே பிரச்சனைகள் உருவானது. நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் பணம் கேட்டு குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    2017-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பு படி சதுர அடிக்கு ரூ.3,151 வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சதுர அடிக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கேட்டு வந்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள், குடியிருப்பு வாசிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 40 சதவீதம் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் அதிகாரிகள் மீண்டும் குடியிருப்பு வாசிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற வியாழக்கிழமை இந்த பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

    பறக்கும் ரெயில் திட்டம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2004-ல் திருவான்மியூர் வரை நீட்டிக்கப்பட்டது. 2007-ல் வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது.

    வேளச்சேரி-செயிண்ட் தாமஸ் வரை பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்பு பணி 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் 500 மீட்டர் நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    நிலம் கையகப்படுத்துவது குறித்து குடியிருப்புவாசிகளிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. வருகிற வியாழக்கிழமை இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #FlyingTrainProject
    குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக கூறி டி.எம்.சி. காலனி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையம் டி.எம்.சி. காலனியில் நூற்றுக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குழாயில் வரும் குடிநீருடன் அடிக்கடி சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நீரையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்றும் குடிநீர் குழாயில் வந்த குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று இரவு திடீரென திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதிக்கு வரும் குடிநீரில் இதுபோல அடிக்கடி சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இதுமட்டுமின்றி எங்கள் பகுதியில் சாக்கடைகள் தூர்வாரப்படவில்லை.

    இதனால் கொசுப்புழுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. எங்கள் பகுதியில் பெரும்பாலானவர்கள் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் எங்கள் பகுதியை சுகாதாரமாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சுகாதாரமான குடிநீர், சுத்தமான சாக்கடை வசதிகளை செய்து தரவில்லை என்றால் நாங்கள் மாநகராட்சி துப்புரவு பணியில் ஈடுபடாமல் வேலை நிறுத்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து அங்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×