என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இரு தரப்பினர் மோதல்
- கோவிலில் வழிபாடு நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டு இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர்.
- போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அன்னலட்சுமி புரத்தில் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜை நடத்துவது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த இருதரப்பினர் மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அன்னலட்சுமிபுரத்தை சேர்ந்த ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்களை மற்றொரு தரப்பினர் சரமாரியாக தாக்கினர்.
இதை அறிந்து ஜெயராமனின் மகன் ராமர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்த தாக்குதலில் அந்த கிராமத்தை சேர்ந்த இருளாயி, குமுதம், பவித்ரா, பானுமதி, முருகேசன், மலைசாமி, பூமிநாதன், சந்திரன், அழகர்சாமி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து கமுதி, சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து ராமர் கொடுத்த புகாரின்பேரில் 18-ம் படியான் , சிவகுமார்,வடிவேல், விக்னேஷ்வரன், அஜித்குமார், பூரணம் உள்பட 8 பேர் மீது வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏதேனும் அசம்பாவிகள் நடக்கும் முன் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்