search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டமன்ற மனுக்கள் குழு விரைவில் ஆய்வு- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன்.

    சட்டமன்ற மனுக்கள் குழு விரைவில் ஆய்வு- கலெக்டர் தகவல்

    • அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.
    • அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் ஆகியன குறித்து இருத்தல் கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெ க்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், 2021-2023 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் கூடவுள்ளது. இதனையொட்டி திருவாரூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொதுபிரச்சனைகள் மற்றும் குறைகள் குறித்து மனுக்களை வழங்கலாம்.

    மனுவினை தமிழில் எழுதி தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை– 600009 என்ற முகவரிக்கு ஐந்து நகல்களை அக் 7ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    எழுதப்படும் மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பலஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.

    மனுக்கள் ஒரேயொரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொருதுறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.

    மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    ஆனால் மனுவில் தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் ஆகியன குறித்து இருத்தல் கூடாது.

    சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்.

    ஒரே மனுதாரர் பல மனுக்களைஅனுப்பி இருந்தாலும், குழு முக்கிய த்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    மனுதாரர் முன்னிலையில் குழுக்கூட்டத்தில் கலந்துகொ ள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.

    இது குறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாள் குறித்த தகவல் தனியாக அனுப்பப்படும். 7.10.22-க்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வி ற்கு எடுத்துக் கொள்ளப்படாது.

    இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×