search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pro Kabaddi"

    • தமிழ் தலைவாஸ் தொடக்க ஆட்டத்தில் குஜராத்துடன் 31-31 என்ற கணக்கில் ‘டை’ செய்தது.
    • அரியானா தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி இருந்தது.

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி அரியானாவுடன் இன்று மோதல்பெங்களூர்:

    9-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 12-வது 'லீக்' ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் தொடக்க ஆட்டத்தில் குஜராத்துடன் 31-31 என்ற கணக்கில் 'டை' செய்தது. அரியானாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது.

    அரியானா தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி இருந்தது. இதனால் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    • ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
    • 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் போட்டியை நேரில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள புரோ கபடி லீக் 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மட்டும் கைவிடப்பட்ட இந்த போட்டி, கடந்த ஆண்டு பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கபடி ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 9-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் உள்ள கண்டீவாரா உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 26-ந் தேதி வரை இங்கு முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது. அடுத்த இரண்டு சுற்று லீக் ஆட்டங்கள் புனே, ஐதராபாத்தில் நடக்கிறது. நவம்பர் 8-ந் தேதி வரை நடைபெறும் லீக் போட்டி அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. எஞ்சிய லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று, இறுதிப்போட்டி அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கபடி திருவிழாவில் நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி, 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், முன்னாள் சாம்பியன்களான பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா மற்றும் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை கழற்றி விட்டு விட்டு, தேவையான வீரர்களை விலைக்கு வாங்கியதுடன் அணியை வலுவாக தயார்படுத்தி கோதாவில் குதிக்கின்றன.

    இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றை எட்டும். லீக்கில் முதல் 2 இடங்களை பெறும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி, அதில் வெற்றி காணும் 2 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் போட்டியை நேரில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருப்பதுடன் வீரர்களுக்கும் இது புதிய உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    தொடர்ந்து சறுக்கலை சந்தித்த தமிழ் தலைவாஸ் அணி இந்த முறை நட்சத்திர ரைடர் பவன்குமார் செராவத் தலைமையில் களம் இறங்குகிறது.

    தொடக்க நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் நவீன் குமார் தலைமையிலான நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி, சுரிந்தர் சிங் தலைமையிலான முன்னாள் சாம்பியன் யு மும்பாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மற்ற ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8.30 மணி) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-உ.பி.யோத்தா (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    புரோ கபடி லீக் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாளை பிளேஆப் சுற்று தொடங்குகிறது.#ProKabbadi

    கொச்சி:

    6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டி கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி சென்னையில் தொடங்கியது.

    இதில் 12 அணிகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் 22 லீக் ஆட்டங்களில் மோதின. 12 நகரங்களில் ‘லீக்‘ ஆட்டங்கள் நடந்தன. நேற்று முன் தினத்துடன் ‘லீக்‘ ஆட்டம் முடிவடைந்தன.

    ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்சுன் (93 புள்ளி), மும்பை (86 புள்ளி), தபாங் டெல்லி (68 புள்ளி) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. புனேரி பல்தான் (52 புள்ளி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (43 புள்ளி), அரியானா ஸ்டீலர்ஸ் (42 புள்ளி) ஆகியவை 4 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ் 78 புள்ளியுடன் முதல் இடத்தையும், பெங்கால் வாரியர்ஸ் 69 புள்ளியுடன் 2-வது இடத்தையும், உ.பி. யோதா 57 புள்ளியுடன் 3-வது இடத்தையும் பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் (55 புள்ளி), தெலுங்கு டைட்டன்ஸ் (51 புள்ளி), தமிழ்தலைவாஸ் (42 புள்ளி) ஆகிய அணிகள் 4 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ‘பிளே ஆப்’ சுற்று கொச்சியில் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது.

    இரவு 8 மணிக்கு நடை பெறும், ‘எலிமினேட்டர்-1’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த மும்பை ‘பி’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்த உ.பி. யோதா அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    இரவு 9 மணிக்கு நடை பெறும் ‘எலிமினேட்டர் 2’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்த டெல்லி ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோது கின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘எலிமினேட்டர்3’ ஆட்டத்துக்கு தகுதி பெறும் தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

    31-ந்தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த குஜராத்- ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    தோல்வி அடையும்அணி ‘குவாலி பையர் 2’ ஆட்டத்தில் விளையாடும் ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் ஆடும்.

    எலிமினேட்டர்3’ ஆட்டம் 31-ந்தேதி இரவு 9 மணிக்கு நடக்கிறது. ‘குவாலிபையர் 2’ ஆட்டம் ஜனவரி 3-ந்தேதியும் இறுதிப்போட்டி ஜனவரி 5-ந்தேதியும் நடக்கிறது. #ProKabbadi

    புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7-வது வெற்றியை ருசித்தது. #ProKabaddi #UPYoddha #UMumba
    கொல்கத்தா:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 124-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, முன்னாள் சாம்பியன் யு மும்பாவை (மும்பை அணி) எதிர்கொண்டது. திரிலிங்கான இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7-வது வெற்றியை ருசித்தது. இதில் ஒரு கட்டத்தில் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் உ.பி.யோத்தா வீரர் பிரசாந்த் குமார் ராய் 2 பேரை அவுட் செய்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். தங்களது கடைசி லீக்கில் ஆடிய மும்பை அணி 22 ஆட்டங்களில் 15 வெற்றி, 5 தோல்வி, 2 டை என்று 86 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-23 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை சாய்த்தது. 10-வது வெற்றியை பதிவு செய்த பெங்கால் அணி இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi  #UPYoddha #UMumba

    புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி, தமிழ் தலைவாசை சாய்த்து 7-வது வெற்றியை ருசித்தது. #ProKabaddi #PatnaPirates #TamilThalaivas
    ஆமதாபாத்:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் நடந்த 74-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 45-27 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை சாய்த்து 7-வது வெற்றியை ருசித்தது. ஒரு கட்டத்தில் 15-16 என்று நெருங்கி வந்த தமிழ் தலைவாஸ் அணி பிற்பாதியில் இரண்டு முறை ஆல்-அவுட் ஆனதால் பின்தங்கி போனது. பாட்னா அணியில் கேப்டன் பர்தீப் நார்வல் ரைடு மூலம் 13 புள்ளிகள் சேர்த்தார்.

    இதன் மூலம் தொடக்க லீக்கில் தமிழ் தலைவாசிடம் அடைந்த தோல்விக்கும் அந்த அணி பழிதீர்த்துக் கொண்டது. 13-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 8-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39-35 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் யு மும்பாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

    இன்றைய ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.  #ProKabaddi #PatnaPirates #TamilThalaivas 
    புரோ கபடி லீக் போட்டியின் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் பாட்னாவை வீழ்த்தி 5-வது வெற்றியை தமிழ் தலைவாஸ் பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். #ProKabbadi #TamilThalaivas
    அகமதாபாத்:

    6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் 7-வது கட்ட ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

    சென்னை நகரை மையமாக கொண்ட அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி நேற்றைய 12-வது ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை எதிர்கொண்டது. இதில் தமிழ் தலைவாஸ் 27-23 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

    அந்த அணி பெற்ற 4-வது வெற்றியாகும். நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஆட் டத்தில் தெலுங்கு டைட்டன்சிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றி, 7 தோல்வி, 1 டையுடன் 25 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் கடைசி இடத்தில் இருக்கிறது.

    தமிழ் தலைவாஸ் அணி 13-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்சை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கிறது.

    பாட்னாவை வீழ்த்தி 5-வது வெற்றியை தமிழ் தலைவாஸ் பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். சென்னையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 42-26 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் இருக்கிறது.

    அஜய் தாகூரின் ரைடு மற்றும் மன்ஜித் சில்லாரின் டேக்கிளை பொறுத்துதான் தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. அஜய் தாகூர் 117 ரைடு புள்ளிகளுடன் இந்த சீசனில் 4-வது இடத்தில் உள்ளார். மஞ்சித் சில்லார் 40 டேக்கிள் புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    பாட்னா பைரேட்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 33 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது. பர்தீப் நர்வால் அந்த அணியின் நட்சத்திர வீரராக இருக்கிறார்.

    நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெய்ண்ட்ஸ் அணி 26-29 என்ற கணக்கில் தபாங் டெல்லியிடம் தோற்றது. இதன் மூலம் குஜராத் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியுடன் 32-32 என்ற கணக்கில் ‘டை’ செய்து இருந்தது. 2-வது ஆட்டத்தில் அரியானாவிடம் 25-32 என்ற கணக்கில் அரியானாவிடம் தோற்றது. அதன் பிறகு அந்த அணி விளையாடிய 9 ஆட்டங்களிலும் தோற்கவில்லை. 8 ஆட்டத்தில் வெற்றி பெற்று ஒன்றில் டை செய்தது.

    தற்போது அரியானாவுக்கு அடுத்தப்படியாக டெல்லியிடம் குஜராத் அணியிடம் வீழ்ந்து 2-வது தோல்வியை தழுவி இருக்கிறது. அந்த அணி 8 வெற்றி, 2 தோல்வி, 2 டையுடன் 48 புள்ளிகள் பெற்று ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தில் இருக்கிறது.

    டெல்லி அணி 5 வெற்றி, 5 தோல்வி, 1 டையுடன் 33 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    குஜராத் அணி 13-வது ஆட்டத்தில் யு மும்பாவை இன்று இரவு 9 மணிக்கு எதிர்கொள்கிறது. #ProKabbadi #TamilThalaivas
    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரியானா அணியை 42- 34 என்ற கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. #ProKabaddi #BengaluruBulls #HaryanaSteelers
    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ரெய்டுகளை எடுத்து வந்தனர். இதையடுத்து, சிறிது வித்தியாசத்தில் அரியானா அணியை விட பெங்களூரு அணி முன்னிலை வகித்து வந்தது.

    ஆட்டத்தின் இறுதியில் பெங்களூரு அணி சிறப்பாக செயல்பட்டதால், 42 -  34 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் பெங்களூரு அணி தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

    மற்றொரு லீக் ஆட்டத்தில் யுபி யோதா மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின. இதில் யுபி யோதா அணி 29-23 என்ற கணக்கில் புனேவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் யுபி யோதா அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. #ProKabaddi #BengaluruBulls #HaryanaSteelers
    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா அணி அபார வெற்றி பெற்றது. #ProKabaddi #UMumba #TeluguTitans
    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், யு மும்பா அணியும் மோதின. 

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே யு மும்பா அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அந்த அணியின் புள்ளிகள் உயர்ந்து வந்தது.

    யு மும்பா அணியினரின் ஆட்டத்துக்கு முன்னால் தெலுங்கு டைட்டன்ஸ் அணியினர் திணறினர். ஆட்டத்தின் இறுதியில் யு மும்பை அணி சிறப்பாக செயல்பட்டதால், 41- 20 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைடன்சை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் யு மும்பா அணி தனது 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. #ProKabaddi #UMumba #TeluguTitans
    ‘புரோ கபடி லீக் போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக செயல்படும்’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் கே.பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்தார். #TamilThalaivas #Bhaskaran
    சென்னை:

    6-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி தொடங்குகிறது. பல்வேறு இடங்களில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 5-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன், மும்பை (ஏ பிரிவு), பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி.யோத்தா ஆகிய 12 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.



    லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். சென்னையில் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த சீசனுக்கான புரோ கபடி லீக் போட்டிக்கான தமிழ் தலைவாஸ் அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர், பயிற்சியாளர் கே.பாஸ்கரன், அணியின் தூதுவர் நடிகர் விஜய் சேதுபதி, தலைமை செயல் அதிகாரி வீரென் டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டு சீருடையை அறிமுகம் செய்து வைத்தனர். இதில் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய சீருடையுடன் போஸ் கொடுத்தனர்.

    தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர் (கேப்டன்), அனில் குமார், அமித் ஹூடா, மன்ஜீத் ஷில்லார், ஜஸ்பிர்சிங், சுகேஷ் ஹெக்டே, சுர்ஜீத் சிங், சுனில், அருண், தர்ஷன், கோபு, அதுல், பிரதாப், ஜெயசீலன், அபிநந்தன் சண்டேல், ஆனந்த், விமல் ராஜ், ஜா மின் லீ, சான் சிக் பார்க் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    விழாவில் பங்கேற்ற தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் கே.பாஸ்கரன் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறுகையில், ‘ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கபடி அணி தங்கப்பதக்கத்தை தவற விட்டது எதிர்பாராததாகும். ஈரானுக்கு எதிரான அரைஇறுதியில் நமது ஆட்டம் சரியாக அமையவில்லை. வீரர்களின் ஆட்டம் எடுபடாமல் போவது எப்போதாவது நடக்கத்தான் செய்யும். அதே நேரத்தில் 2010-ம் ஆண்டு முதலே ஈரான் அணி ஆசிய விளையாட்டு போட்டிக்காக தீவிரமாக தயாராகி சிறப்பாக செயல்பட்டதை மறுக்க முடியாது. ஆசிய விளையாட்டு போட்டியில் நடந்த தவறு மீண்டும் நடக்காது. வருங்காலங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன். தமிழ் தலைவாஸ் அணியில் சீனியர் மற்றும் இளம் வீரர்கள் போதுமான அளவில் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய அணியில் 5 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடங்களில் தான் போட்டியில் சறுக்கியது. அஜய் தாகூர் ஆட்டம் இழந்தால், அதன் பிறகு அணியை வழிநடத்த அனுபவம் மிக்க வீரர்கள் இல்லாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. ஆனால் இந்த முறை அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். இதனால் இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி மிகச்சிறப்பாக செயல்படும்’ என்று தெரிவித்தார்.

    தமிழ் தலைவாஸ் அணியின் தூதுவரும், நடிகருமான விஜய் சேதுபதி பேசுகையில், ‘நமது பாரம்பரிய ஆட்டமான கபடி வேகம், விவேகம் நிறைந்ததாகும். மக்களின் மனம் கவர்ந்த இந்த போட்டிக்கு நாம் எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமானதாகும். தமிழ் தலைவாஸ் அணியின் தூதுவராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட்டை தாண்டி கபடி புதிய உச்சத்தை எட்டும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.  #TamilThalaivas #Bhaskaran
    6-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் மும்பையில் 30-ம் தேதி நடக்கவுள்ளது.#prokabaddi #auction
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உள்பட 12 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் நடக்கிறது. வீரர்கள் ஏலப்பட்டியலில் மொத்தம் 422 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இதில் ஈரான், வங்காளதேசம், ஜப்பான், கென்யா, மலேசியா, இலங்கை உள்பட 14 வெளிநாடுகளை சேர்ந்த 58 வீரர்களும் அடங்குவார்கள். 87 பேர் வருங்கால கபடி கதாநாயகர்கள் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்கள். கடந்த சீசனில் ஆடிய 21 வீரர்களை அந்தந்த அணிகள் தக்க வைத்து கொண்டு இருக்கின்றன.

    தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாகூர், அமித் ஹூடா, சி.அருண் ஆகிய 3 வீரர்களை தன்வசம் தக்கவைத்து இருக்கிறது.#prokabaddi #auction
    ×