search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pro Kabaddi"

    • புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.
    • எலிமினேட்டர் ஆட்டங்கள் 26-ந் தேதி நடக்கிறது.

    பஞ்ச்குலா:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டியின் 12-வது மற்றும் இறுதிக்கட்ட லீக் ஆட்டங்கள் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், தபாங் டெல்லி, குஜராத் ஜெய்ன்ட்ஸ், ஸ்ட்லர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய 6 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன. பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ், யு மும்பா, உ.பி. யோதாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன.

    புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் புனே-உ.பி. அணிகளும், இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் அரியானா-பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.

    4 நாட்கள் ஓய்வுக்கு பிறகு பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் வருகிற 26-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும். இன்றைய ஆட்டத்தில் உ.பி. அணியை வீழ்த்துவதன் மூலம் புனே அணி முதல் இடத்தை பிடிக்கும்.

    புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த அணியும், 6-வது இடத்தை பிடித்த அணியும் 'எலிமினேட்டர்' ஆட்டத்தில் விளையாடும். இதனபடி டெல்லி-பாட்னா அணிகள் மோதுகின்றன.

    எலிமினேட்டர் 2 போட்டியில் அரியானா குஜராத் அணிகள் மோதுகின்றன. எலிமினேட்டர் ஆட்டங்கள் 26-ந் தேதி நடக்கிறது.

    டெல்லி-பாட்னா இடையேயான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி முதல் அரைஇறுதியில் விளையாடும். புனே அணியுடன் மோத வாய்ப்பு உள்ளது.

    அரியானா-குஜராத் இடையேயான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி 2-வது அரை இறுதியில் விளையாடும். ஜெய்ப்பூர் அணியுடன் மோதும் வாய்ப்பு இருக்கிறது. வருகிற 28-ந் தேதி அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. மார்ச் 1-ந் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.

    • குஜராத் அணி 9 வெற்றி, 8 தோல்வியுடன் 50 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
    • தமிழ் தலைவாஸ் அணி இன்று பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி 'லீக்' போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கியது.

    அதை தொடர்ந்து பெங்களூர், புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடந்தது. 10-வது கட்ட போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    புரோ கபடி 'லீக்'போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது. அந்த அணி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன் 71 புள்ளிகள் பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 18 ஆட்டத்தில் 2 வெற்றி, 16 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 7 வெற்றி, 10 தோல்வியுடன் 40 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    தமிழ் தலைவாஸ் அணி 18-வது போட்டியில் குஜராத் ஜெயின்ட்சை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறது. அந்த அணியிடம் ஏற்கனவே சென்னையில் நடந்த ஆட்டத்தில் 30-33 என்ற கணக்கில் தோற்று இருந்தது. இதற்கு தமிழ் தலைவாஸ் அணி இன்று பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக 4 வெற்றியை பெற்றது. கடந்த ஆட்டத்தில் ஜெய்பூரிடம் தோற்றது. அந்த அணி மீண்டும் எழுச்சி பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர். தமிழ் தலைவாஸ் அணியில் நரேந்தர், அஜிங்கயா பவார், ஹிமான்சு, சாஹர், அபிஷேக் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    குஜராத் அணி 9 வெற்றி, 8 தோல்வியுடன் 50 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்-யு மும்பா அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் 6 வெற்றி, 9 தோல்வி, 2 டையுடன் 43 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. 7-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. மும்பை அணியும் 7-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 40 புள்ளியுடன் 10-வது இடத்தில் இருக்கிறது.

    • ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது.
    • குஜராத் 50 புள்ளியுடன் 6-வது இடத்தில் உள்ளன.

    12 அணிகள் பங்கேற்று உள்ள 10-வது புரோ கபடி 'லீக்' போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

    அதை தொடர்ந்து பெங்களூர், புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடந்தது. 10-வது கட்ட போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    புரோ கபடி 'லீக்' போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்'சுற்றுக்கு தகுதி பெறும்.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது. அந்த அணி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன் 71 புள்ளிகள் பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 17 ஆட்டத்தில் 15 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியாஸ் 45-38 என்ற கணக்கில் டெல்லி அணியையும், அரியானா ஸ்டீலர்ஸ் 34-30 என்ற கணக்கில் குஜராத்தையும் தோற்கடித்தது.

    10-வது லீக் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் உ.பி. யோதா-மும்பை அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி 6 வெற்றி, 8 தோல்வி, 2 டையுடன் 40 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 7-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. உ.பி. யோதா 3 வெற்றி, 12 தோல்வி, 1 டையுடன் 23 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் உள்ளது. மும்பையை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி தெலுங்கு டைட்டன்ஸ்சை வீழ்த்தி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி 10 வெற்றி, 5 தோல்வி, 2 டையுடன் 60 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    புனே அணி 68 புள்ளியு டன் 2-வது இடத்திலும், அரியானா 55 புள்ளியுடன் 4-வது இடத்திலும், பாட்னா 53 புள்ளியுடன் 5-வது இடத்திலும், குஜராத் 50 புள்ளியுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

    • தமிழ் தலைவாஸ் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் உள்ளது.
    • அரியானா ஸ்டீலர்ஸ் அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று உள்ளது.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்று உள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத் தில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி மோதுகின் றன. இரவு 9 மணிக்கு போட்டியில் தமிழ் தலை வாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. கடந்த இரண்டு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்தது. இதனால் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்புமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரியானா ஸ்டீலர்ஸ் அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று உள்ளது.

    • இன்றைய லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் ஆட்டத்தில் மோதுகிறது.
    • 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி.யோத்தாஸ் அணிகள் சந்திக்கின்றன.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஆமதாபாத், பெங்களூரு, புனேயைத் தொடர்ந்து 4-வது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு தொடங்கியது. இங்கு நடந்த முதல் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணி, தமிழ் தலைவாசை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவுடன் களம் இறங்கிய தமிழக தலைவாஸ் அணியினர் தொடக்கத்தில் நன்றாக ஆடினர். எதிரணியை ஒரு முறை ஆல்-அவுட் செய்ததுடன் முதல் பாதியில் 20-21 என்ற கணக்கில் சற்று பின்தங்கி இருந்தனர்.

    ஆனால் பிற்பாதியில் பாட்னா வீரர்களின் கை ஓங்கியது. தலைவாஸ் அணியை இரண்டு முறை ஆல்-அவுட் ஆக்கி பதிலடி கொடுத்ததுடன் மளமளவென புள்ளிகளை திரட்டினர்.

    முடிவில் பாட்னா அணி 46-33 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை தோற்கடித்தது. அதிகபட்சமாக பாட்னா அணியில் சுதாகர் 11 புள்ளிகள் எடுத்து ரைடில் கலக்கினார். தமிழ் தலைவாஸ் தரப்பில் ஹிமான்ஷு 8 புள்ளிகள் எடுத்தார்.

    5-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் நீடிக்கிறது. பாட்னா அணி 3 வெற்றி, 3 தோல்வி என்று 17 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து நடந்த திரில்லிங்கான மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-36 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வென்றது.

    இன்றைய லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி.யோத்தாஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    • பெங்கால் அணி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று முத்திரை பதித்தது.
    • பெங்களூர் அணி 2-வது தோல்வியை தழுவியது.

    அகமதாபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 37-33 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 32-30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்கால் அணி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று முத்திரை பதித்தது. பெங்களூர் அணி 2-வது தோல்வியை தழுவியது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- மும்பை அணிகள் மோது கின்றன. குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை 38-22 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் 34-31 என்ற கணக்கில் பெங்களூரையும் தோற்கடித்து இருந்தது.

    மும்பை அணி முதல் ஆட்டத்தில் 34-31 என்ற கணக்கில் உ.பி. யோதாவை தோற்கடித்தது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. இரு அணிகளும் வெற்றிக் காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழ் தலைவாஸ் அணியில் அஜய்ங்கா பவார், சாஹர் உள்ளிட்ட முன்னிணி வீரர்கள் உள்ளனர்.
    • இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயடன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அகமதாபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன.

    நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத் 38-32 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

    யுமும்பா-உ.பி. யோதா அணிகள் மோதிய ஆட்டத்திலும் பரபரப்பு இருந்தது. இதில் மும்பை 34-31 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது.

    இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னையை தலைமை இடமாக கொண்ட தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தலைவாஸ் அணியில் அஜய்ங்கா பவார், சாஹர் உள்ளிட்ட முன்னிணி வீரர்கள் உள்ளனர்.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயடன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூ அணியை வீழ்த்தி குஜராத் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. பெங்களூர் அணி எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த புனே அணி முதல் முறை யாக சாம்பியன் பட்டம் பெறும் வேட்கையில் உள்ளது.
    • புனேயை வீழ்த்தி 2-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் ஜெய்ப்பூர் அணி இருக்கிறது.

    மும்பை:

    9-வது புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியில் மிகவும் வலுவான அணியான ஜெய்ப்பூர் 'லீக்' ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்தது. அரை இறுதியில் பெங்களூருவை எளிதில் வீழ்த்தியது.

    புனேயை வீழ்த்தி 2-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் ஜெய்ப்பூர் அணி இருக்கிறது. அந்த அணி அறிமுக கபடி போட்டியில் (2014) சாம்பி யன் பட்டம் பெற்றது. 4-வது சீசனில் இறுதி ஆட்டத்தில் (2016) பாட்னா விடம் தோற்றது.

    புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த புனே அணி முதல் முறை யாக சாம்பியன் பட்டம் பெறும் வேட்கையில் உள்ளது. புனே அணி முதல் முறையாக இறுதி போட்டி யில் ஆடுகிறது.

    அரை இறுதியில் தமிழ் தலைவாசை கடும் போராட்ட த்திற்கு பின்னரே வென்றது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 2 முறையும் புனே அணிதான் வெற்றி பெற்று இருந்தது.

    • ஜெய்ப்பூர் அணி 6-வது தோல்வியை தழுவியது.
    • புனே அணி 11-வது வெற்றியை பதிவு செய்தது.

    ஐதராபாத்:

    புரோ கபடி 'லீக்' போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 41-38 என்ற கோல் கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. பெங்கால் அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 48 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 6-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 58 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

    மற்றொரு போட்டியில் புனேரி பல்தான் 39-32 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது. புனே அணி பெற்ற 11-வது வெற்றியாகும். அந்த அணி 64 புள்ளியுடன் முதல்இடத்தில் உள்ளது.

    ஜெய்ப்பூர் அணி 6-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 54 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. இன்று ஓய்வு நாளாகும். நாளைய போட்டியில் குஜராத்-டெல்லி, தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர், அரியானா-பாட்னா அணிகள் மோதுகின்றன.

    • மற்றொரு ஆட்டத்தில் உ.பி. யோத்தா-குஜராத் ஜெய்ன்ட்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.
    • நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 35-33 என்ற புள்ளி கணக்கில் ஐதராபாத்தை தோற்கடித்தது. 10-வது வெற்றியை பதிவு செய்தது.

    ஐதராபாத்:

    9-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 35-33 என்ற புள்ளி கணக்கில் ஐதராபாத்தை தோற்கடித்தது. 10-வது வெற்றியை பதிவு செய்தது.

    மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி அணி 42-30 என்ற புள்ளி கணக்கில் அரியான ஸ்டீலர்சை வீழ்த்தி 8-வது வெற்றியை பெற்றது.

    இன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி), உ.பி. யோத்தா-குஜராத் ஜெய்ன்ட்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    • பெங்கால் வாரியர்ஸ் 36-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது.
    • மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது.

    ஐதராபாத்:

    புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 36-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. பெங்கால் அணி பெற்ற 7-வது வெற்றியாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. பெங்களூர் அணி 10-வது வெற்றியை பெற்றது.

    • இரவு 7.30 மணிக்கு நடக்கும் 42-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வி, ஒரு டையுடன் 10 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது.

    9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் 42-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வி, ஒரு டையுடன் 10 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது.

    கடைசி இரண்டு ஆட்டங்களிலும் தோற்ற தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பாதைக்கு திரும்புமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பல்டன் அணிகளும், இரவு 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பாட்னா பைரட்ஸ்-யு.பி. யோத்தா அணிகளும் மோதுகின்றன.

    ×