என் மலர்
நீங்கள் தேடியது "Pro Kabaddi"
- புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த புனே அணி முதல் முறை யாக சாம்பியன் பட்டம் பெறும் வேட்கையில் உள்ளது.
- புனேயை வீழ்த்தி 2-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் ஜெய்ப்பூர் அணி இருக்கிறது.
மும்பை:
9-வது புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் மிகவும் வலுவான அணியான ஜெய்ப்பூர் 'லீக்' ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்தது. அரை இறுதியில் பெங்களூருவை எளிதில் வீழ்த்தியது.
புனேயை வீழ்த்தி 2-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் ஜெய்ப்பூர் அணி இருக்கிறது. அந்த அணி அறிமுக கபடி போட்டியில் (2014) சாம்பி யன் பட்டம் பெற்றது. 4-வது சீசனில் இறுதி ஆட்டத்தில் (2016) பாட்னா விடம் தோற்றது.
புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த புனே அணி முதல் முறை யாக சாம்பியன் பட்டம் பெறும் வேட்கையில் உள்ளது. புனே அணி முதல் முறையாக இறுதி போட்டி யில் ஆடுகிறது.
அரை இறுதியில் தமிழ் தலைவாசை கடும் போராட்ட த்திற்கு பின்னரே வென்றது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 2 முறையும் புனே அணிதான் வெற்றி பெற்று இருந்தது.
- ஜெய்ப்பூர் அணி 6-வது தோல்வியை தழுவியது.
- புனே அணி 11-வது வெற்றியை பதிவு செய்தது.
ஐதராபாத்:
புரோ கபடி 'லீக்' போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 41-38 என்ற கோல் கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. பெங்கால் அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 48 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 6-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 58 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
மற்றொரு போட்டியில் புனேரி பல்தான் 39-32 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது. புனே அணி பெற்ற 11-வது வெற்றியாகும். அந்த அணி 64 புள்ளியுடன் முதல்இடத்தில் உள்ளது.
ஜெய்ப்பூர் அணி 6-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 54 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. இன்று ஓய்வு நாளாகும். நாளைய போட்டியில் குஜராத்-டெல்லி, தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர், அரியானா-பாட்னா அணிகள் மோதுகின்றன.
- மற்றொரு ஆட்டத்தில் உ.பி. யோத்தா-குஜராத் ஜெய்ன்ட்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.
- நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 35-33 என்ற புள்ளி கணக்கில் ஐதராபாத்தை தோற்கடித்தது. 10-வது வெற்றியை பதிவு செய்தது.
ஐதராபாத்:
9-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 35-33 என்ற புள்ளி கணக்கில் ஐதராபாத்தை தோற்கடித்தது. 10-வது வெற்றியை பதிவு செய்தது.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி அணி 42-30 என்ற புள்ளி கணக்கில் அரியான ஸ்டீலர்சை வீழ்த்தி 8-வது வெற்றியை பெற்றது.
இன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி), உ.பி. யோத்தா-குஜராத் ஜெய்ன்ட்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.
- பெங்கால் வாரியர்ஸ் 36-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது.
- மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது.
ஐதராபாத்:
புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 36-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. பெங்கால் அணி பெற்ற 7-வது வெற்றியாகும்.
மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. பெங்களூர் அணி 10-வது வெற்றியை பெற்றது.
- இரவு 7.30 மணிக்கு நடக்கும் 42-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
- தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வி, ஒரு டையுடன் 10 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது.
9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் 42-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வி, ஒரு டையுடன் 10 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது.
கடைசி இரண்டு ஆட்டங்களிலும் தோற்ற தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பாதைக்கு திரும்புமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பல்டன் அணிகளும், இரவு 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பாட்னா பைரட்ஸ்-யு.பி. யோத்தா அணிகளும் மோதுகின்றன.
- தமிழ் தலைவாஸ் தொடக்க ஆட்டத்தில் குஜராத்துடன் 31-31 என்ற கணக்கில் ‘டை’ செய்தது.
- அரியானா தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி இருந்தது.
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி அரியானாவுடன் இன்று மோதல்பெங்களூர்:
9-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 12-வது 'லீக்' ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.
தமிழ் தலைவாஸ் தொடக்க ஆட்டத்தில் குஜராத்துடன் 31-31 என்ற கணக்கில் 'டை' செய்தது. அரியானாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது.
அரியானா தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி இருந்தது. இதனால் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
- ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
- 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் போட்டியை நேரில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள புரோ கபடி லீக் 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மட்டும் கைவிடப்பட்ட இந்த போட்டி, கடந்த ஆண்டு பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கபடி ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 9-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் உள்ள கண்டீவாரா உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 26-ந் தேதி வரை இங்கு முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது. அடுத்த இரண்டு சுற்று லீக் ஆட்டங்கள் புனே, ஐதராபாத்தில் நடக்கிறது. நவம்பர் 8-ந் தேதி வரை நடைபெறும் லீக் போட்டி அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. எஞ்சிய லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று, இறுதிப்போட்டி அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கபடி திருவிழாவில் நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி, 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், முன்னாள் சாம்பியன்களான பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா மற்றும் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை கழற்றி விட்டு விட்டு, தேவையான வீரர்களை விலைக்கு வாங்கியதுடன் அணியை வலுவாக தயார்படுத்தி கோதாவில் குதிக்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றை எட்டும். லீக்கில் முதல் 2 இடங்களை பெறும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி, அதில் வெற்றி காணும் 2 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் போட்டியை நேரில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருப்பதுடன் வீரர்களுக்கும் இது புதிய உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தொடர்ந்து சறுக்கலை சந்தித்த தமிழ் தலைவாஸ் அணி இந்த முறை நட்சத்திர ரைடர் பவன்குமார் செராவத் தலைமையில் களம் இறங்குகிறது.
தொடக்க நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் நவீன் குமார் தலைமையிலான நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி, சுரிந்தர் சிங் தலைமையிலான முன்னாள் சாம்பியன் யு மும்பாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மற்ற ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8.30 மணி) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-உ.பி.யோத்தா (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.
போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
கொச்சி:
6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டி கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி சென்னையில் தொடங்கியது.
இதில் 12 அணிகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் 22 லீக் ஆட்டங்களில் மோதின. 12 நகரங்களில் ‘லீக்‘ ஆட்டங்கள் நடந்தன. நேற்று முன் தினத்துடன் ‘லீக்‘ ஆட்டம் முடிவடைந்தன.
‘ஏ’ பிரிவில் குஜராத் பார்சுன் (93 புள்ளி), மும்பை (86 புள்ளி), தபாங் டெல்லி (68 புள்ளி) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. புனேரி பல்தான் (52 புள்ளி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (43 புள்ளி), அரியானா ஸ்டீலர்ஸ் (42 புள்ளி) ஆகியவை 4 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.
‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ் 78 புள்ளியுடன் முதல் இடத்தையும், பெங்கால் வாரியர்ஸ் 69 புள்ளியுடன் 2-வது இடத்தையும், உ.பி. யோதா 57 புள்ளியுடன் 3-வது இடத்தையும் பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் (55 புள்ளி), தெலுங்கு டைட்டன்ஸ் (51 புள்ளி), தமிழ்தலைவாஸ் (42 புள்ளி) ஆகிய அணிகள் 4 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.
2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ‘பிளே ஆப்’ சுற்று கொச்சியில் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது.
இரவு 8 மணிக்கு நடை பெறும், ‘எலிமினேட்டர்-1’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த மும்பை ‘பி’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்த உ.பி. யோதா அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.
இரவு 9 மணிக்கு நடை பெறும் ‘எலிமினேட்டர் 2’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்த டெல்லி ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோது கின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘எலிமினேட்டர்3’ ஆட்டத்துக்கு தகுதி பெறும் தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.
31-ந்தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த குஜராத்- ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
தோல்வி அடையும்அணி ‘குவாலி பையர் 2’ ஆட்டத்தில் விளையாடும் ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் ஆடும்.
எலிமினேட்டர்3’ ஆட்டம் 31-ந்தேதி இரவு 9 மணிக்கு நடக்கிறது. ‘குவாலிபையர் 2’ ஆட்டம் ஜனவரி 3-ந்தேதியும் இறுதிப்போட்டி ஜனவரி 5-ந்தேதியும் நடக்கிறது. #ProKabbadi
6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 124-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, முன்னாள் சாம்பியன் யு மும்பாவை (மும்பை அணி) எதிர்கொண்டது. திரிலிங்கான இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7-வது வெற்றியை ருசித்தது. இதில் ஒரு கட்டத்தில் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் உ.பி.யோத்தா வீரர் பிரசாந்த் குமார் ராய் 2 பேரை அவுட் செய்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். தங்களது கடைசி லீக்கில் ஆடிய மும்பை அணி 22 ஆட்டங்களில் 15 வெற்றி, 5 தோல்வி, 2 டை என்று 86 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-23 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை சாய்த்தது. 10-வது வெற்றியை பதிவு செய்த பெங்கால் அணி இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi #UPYoddha #UMumba
6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் நடந்த 74-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 45-27 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை சாய்த்து 7-வது வெற்றியை ருசித்தது. ஒரு கட்டத்தில் 15-16 என்று நெருங்கி வந்த தமிழ் தலைவாஸ் அணி பிற்பாதியில் இரண்டு முறை ஆல்-அவுட் ஆனதால் பின்தங்கி போனது. பாட்னா அணியில் கேப்டன் பர்தீப் நார்வல் ரைடு மூலம் 13 புள்ளிகள் சேர்த்தார்.
இதன் மூலம் தொடக்க லீக்கில் தமிழ் தலைவாசிடம் அடைந்த தோல்விக்கும் அந்த அணி பழிதீர்த்துக் கொண்டது. 13-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 8-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39-35 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் யு மும்பாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
இன்றைய ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi #PatnaPirates #TamilThalaivas