என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வீடியோ: யாரு சொன்னா தமிழ் தலைவாஸ் அணியில தமிழர் இல்லனு.. என்ட்ரி கொடுத்த தென்காசி வீரர்
    X

    வீடியோ: யாரு சொன்னா தமிழ் தலைவாஸ் அணியில தமிழர் இல்லனு.. என்ட்ரி கொடுத்த தென்காசி வீரர்

    • தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகிறது.
    • தமிழ் தலைவாஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

    12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 2-ம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புனேரி பால்டன்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. புனேரி பால்டன் 8 ஆட்டத்தில் 6 வெற்றி, 2 தோல்வி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அரியானா அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது.

    இரவு 9 மணிக்கு நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ் தலைவாஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 8 ஆட்டத்தில் 3 வெற்றி, 5 தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அருள்நந்தா பாபு இணைந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×