என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி - மும்பை அணி அதிர்ச்சி தோல்வி
Byமாலை மலர்22 Dec 2018 7:12 PM GMT (Updated: 22 Dec 2018 7:12 PM GMT)
புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7-வது வெற்றியை ருசித்தது. #ProKabaddi #UPYoddha #UMumba
கொல்கத்தா:
6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 124-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, முன்னாள் சாம்பியன் யு மும்பாவை (மும்பை அணி) எதிர்கொண்டது. திரிலிங்கான இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7-வது வெற்றியை ருசித்தது. இதில் ஒரு கட்டத்தில் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் உ.பி.யோத்தா வீரர் பிரசாந்த் குமார் ராய் 2 பேரை அவுட் செய்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். தங்களது கடைசி லீக்கில் ஆடிய மும்பை அணி 22 ஆட்டங்களில் 15 வெற்றி, 5 தோல்வி, 2 டை என்று 86 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-23 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை சாய்த்தது. 10-வது வெற்றியை பதிவு செய்த பெங்கால் அணி இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi #UPYoddha #UMumba
6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 124-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, முன்னாள் சாம்பியன் யு மும்பாவை (மும்பை அணி) எதிர்கொண்டது. திரிலிங்கான இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7-வது வெற்றியை ருசித்தது. இதில் ஒரு கட்டத்தில் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் உ.பி.யோத்தா வீரர் பிரசாந்த் குமார் ராய் 2 பேரை அவுட் செய்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். தங்களது கடைசி லீக்கில் ஆடிய மும்பை அணி 22 ஆட்டங்களில் 15 வெற்றி, 5 தோல்வி, 2 டை என்று 86 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-23 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை சாய்த்தது. 10-வது வெற்றியை பதிவு செய்த பெங்கால் அணி இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi #UPYoddha #UMumba
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X