search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "U Mumba"

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புதுடெல்லி:

    11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அதிரடி ஆட்டத்தில் இறங்கியது. இறுதியில் இந்தப் போட்டியில் 35-30 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வென்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

    மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 33-27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி யு மும்பா அணி வெற்றி பெற்றது.

    • முதலில் நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் மற்றும் தபாங் டெல்லி மோதின.
    • இதில் பாட்னா பைரட்ஸ் 44-30 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

    ஐதராபாத்,

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் 44-30 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 39-37 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • யு மும்பா அணி ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று வரை ஐதராபாத்தில் நடைபெற்றது.

    இந்நிலையில், இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் இன்று உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் தொடங்கியது.

    இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் உ.பி. யோதாஸ்-யு மும்பா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 35-33 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 39-23 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது அரியானா ஸ்டீலர்ஸ் அணி.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் யு மும்பா அணி 6-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் யு மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடினர்.

    இறுதியில், யு மும்பா அணி 40-34 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. இது யு மும்பா அணி பெற்ற 6-வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் யு மும்பா அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை 35-32 என்ற புள்ளிக்கணக்கில் யுபி யோதாஸ் அணி வீழ்த்தி 4வது வெற்றியைப் பதிவு செய்தது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் முதலில் நடந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 31-29 என்ற புள்ளிக்கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 39-39 என சமனில் முடிந்தது.

    • ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.
    • முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இந்நிலையில், இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் இன்று தொடங்கியது.

    இதையடுத்து இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் யு மும்பா - புனேரி பால்டன் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இறுதியில் இந்த ஆட்டத்தில் 43-29 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி பெற்றது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் டெல்லி, உ.பி. அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி, உ.பி. யோதாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த போட்டி 32-32 என்ற புள்ளிக்கணக்கில் சமனில் முடிந்தது. உபி யோதாஸ் அணி 4வது இடத்தில் உள்ளது.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா அணிகளுக்கு இடையிலான போட்டியும் 22-22 என சமனில் முடிந்தது.

    இதன்மூலம் யு மும்பா அணி 2வது இடத்துக்கு முன்னேறியது.

    புள்ளிப்பட்டியலில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா 15வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

    இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய அரியானா 37-26 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி 15-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    மற்றொரு போட்டியில் யு மும்பா அணி 47-31 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் உ.பி.யோதாஸ் அணி 12-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் உ.பி.யோதாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே உ.பி. அணி அதிரடியாக ஆடியது.

    இறுதியில், உ.பி.யோதாஸ் 59-23 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது.

    மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா அணி 43-37 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுவாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா, டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    புனே:

    12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும், 3வது கட்ட லீக் ஆட்டங்கள் புனேவிலும் நடைபெற்றன.

    கடந்த 2 மாதமாக நடந்து வந்த இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிந்தன. லீக் ஆட்டங்களின் முடிவில் 6 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    புள்ளிப்பட்டியலில் 3 முதல் 6 இடங்களைப் பிடித்த உ.பி. யோதாஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில், புனேவில் இன்று நடைபெறும் நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் உ.பி. யோதாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ்-யு மும்பா அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    புள்ளிப்பட்டியலில் 7 முதல் 12 இடங்களைப் பிடித்த தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் பாட்னா பைரேட்ஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.

    இதற்கிடையே, பிளே ஆப் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. முதல் பிளே ஆப் ஆட்டத்தில் உபி யோதாஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய பாட்னா அணி 31-23 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், உபி யோதாஸ் அணிகளும், 2வது அரையிறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மோத உள்ளன.

    புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் 1 சுற்றில் மும்பை அணியை 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது உ.பி. யோதா அணி. #ProKabbadi #UMumba #UpYodha
    கொச்சி:

    6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டி கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் 22 லீக் ஆட்டங்களில் மோதின. 12 நகரங்களில் ‘லீக்‘ ஆட்டங்கள் முடிவடைந்தன.

    இதில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்சுன் (93 புள்ளி), மும்பை (86 புள்ளி), தபாங் டெல்லி (68 புள்ளி) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    இதேபோல், ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ் 78 புள்ளியுடன் முதல் இடத்தையும், பெங்கால் வாரியர்ஸ் 69 புள்ளியுடன் 2-வது இடத்தையும், உ.பி. யோதா 57 புள்ளியுடன் 3-வது இடத்தையும் பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், கொச்சியில் இன்று இரவு 8 மணிக்கு எலிமினேட்டர் 1 ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஏ பிரிவில் 2வது இடம் பிடித்த மும்பையும், ‘பி’ பிரிவில் 3-வது இடம் பிடித்த உ.பி. யோதா அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே உ.பி. யோதா அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அவர்களுக்கு ஈடுகொடுத்து யு மும்பா அணியும் விளையாடியது. ஆனாலும், ஆட்டத்தின் முதல் பாதியில் 18 - 15 என்ற புள்ளிக்கணக்கில் உபி யோதா அணி முன்னிலை பெற்றது. 

    இறுதியில், உ.பி. யோதா அணி 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    இதில் வெற்றி பெற்ற உ.பி. அணி ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. தோற்ற மும்பை அணி போட்டியில் இருந்து வெளியேறியது. #ProKabbadi #UMumba #UpYodha
    ×