என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telugu Titans"

    • தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது.
    • இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 44-29 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் 37-29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்சையும், தபாங் டெல்லி 36-28 என்ற கணக்கில் மும்பை அணியையும் தோற்கடித்தன.

    இந்நிலையில், 2-வது நாளான இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 44-29 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • பாட்னா அணி 42-37 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாசை தோற்கடித்து 3-வது வெற்றியை சுவைத்தது.
    • அதிகபட்சமாக பாட்னா அணியில் தேவாங்க் 11 புள்ளிகள் திரட்டினார்.

    ஐதராபாத்:

    12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா அணி 42-37 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாசை தோற்கடித்து 3-வது வெற்றியை சுவைத்தது.

    அதிகபட்சமாக பாட்னா அணியில் தேவாங்க் 11 புள்ளிகள் திரட்டினார். உ.பி. அணி தரப்பில் ககன் கவுடா 9 புள்ளிகள் எடுத்தார். மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 38-35 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • தெலுங்கு டைட்டன்ஸ் அணி நான்காவது வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.

    இறுதியில், 35-34 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. இது தெலுங்கு டைட்டன்ஸ் அணி பெற்ற நான்காவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஐந்தாவது வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 34-33 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    மற்றொரு போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 40-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    புள்ளிப்பட்டியலில் புனேரி பால்டன் முதல் இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் 2வது இடத்திலும் உள்ளன.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் முதலில் நடந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 31-29 என்ற புள்ளிக்கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 39-39 என சமனில் முடிந்தது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 8-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக ஆடியது.

    இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 31-29 என்ற புள்ளிக்கணக்கில் திரில் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணியை 32-26 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 9-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உபி யோதாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய உ.பி. யோதாஸ் அணி 33-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள உ.பி.யோதாஸ் 7 வெற்றி, 6 தோல்வி, ஒரு டிரா என 43 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

    மற்றொரு போட்டியில் தெலுங்கு டைடன்ஸ் அணி 41- 35 என யு மும்பா அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் உ.பி. யோதாஸ் அணி 8வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உ.பி. யோதாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் இரு அணியினரும் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில் உ.பி. யோதாஸ் அணி 36-33 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 8வது வெற்றியைப் பதிவு செய்ததுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் யுபி யோதாஸ் அணி 9வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் யுபி யோதாஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய யுபி யோதாஸ் புள்ளிகளைக் குவித்தது.

    இறுதியில், யுபி யோதாஸ் அணி 36-33 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணியை வீழ்த்தி 9வது வெற்றியைப் பதிவு செய்தது.

    மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 34-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தபாங் டெல்லி அணி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் 36-32 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி, அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 44-37 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெய்ப்பூர் அணி வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    இதில் சிறப்பாக ஆடிய ஜெய்ப்பூர் அணி 31-28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றதுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 48-36 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் புனேரி பால்டன் அணியின் பிளே ஆப் வாய்ப்பு தகர்ந்தது.

    புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா அணியை 41 -36 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ் அணி. #ProKabaddi #TeluguTitans #PatnaPirates
    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், பாட்னா பைரேஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பாட்னா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 26 - 15 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியினர் அபாரமாக விளையாடினர். ஆனாலும் பாட்னா அணி வீரர்கள் அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து விளையாடினர்.

    இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 41 - 36 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த 8வது வெற்றி ஆகும். இதன்மூலம் பி பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது.

    இந்த தொடரில் மூன்றாவது முறையாக பாட்னா பைரேட்ஸ் அணியை தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.  #ProKabaddi #TeluguTitans #PatnaPirates
    ×