search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Haryana Steelers"

    • இத்தொடரில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • 2-வது இடத்தை பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    ஐதராபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான் சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 28-25 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்தது.

    முதல் முறையாக கோப்பையை வென்ற புனே அணிக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

    புனே அணி கேப்டன் அஸ்லம் மிக மதிப்புமிக்க வீரராக தேர்வு பெற்றார். அவர் 142 ரைடு புள்ளிகளும், 23 டேக்கிள் புள்ளிகளும் பெற்றார். அவருக்கு ரூ.20 லட்சம் கிடைத்தது.

    இந்தத் தொடரில் அதிக ரைடு புள்ளிகளை டெல்லி கேப்டன் அகமாலிக் பெற்றார். அவர் மொத்தம் 228 புள்ளிகளை எடுத்தார். சிறந்த ரைடராக தேர்வு பெற்ற அகமாலிக்குக்கு ரூ.15 லட்சம் பரிசு தொகை கிடைத்தது.

    வீரர்களை மடக்கி பிடிப்பதில் சிறந்த வீரராக புனே வீரர் முகமது ரேசா தேர்வு பெற்றார். அவர் 97 புள்ளிகள் பெற்றார். அவருக்கு ரூ.15 லட்சம் கிடைத்தது.

    • நேற்று நடந்த இறுதிப்போட்டியில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
    • இதில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

    ஐதராபாத்:

    10-வது புரோ கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

    லீக் சுற்று முடிவில் புனேரி பால்டன் (96 புள்ளி), நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92 புள்ளி) ஆகிய அணிகள் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.

    தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் முறையே 3 முதல் 6 இடங்களை பிடித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு நுழைந்தன. வெளியேற்றுதல் சுற்றில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லியையும், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறின.

    முதலாவது அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை சாய்த்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

    விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் புனேரி பால்டன் அணி 28-25 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் முறையாக புனேரி பால்டன் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

    புரோ கபடியில் தமிழ்தலைவாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் (சமன்) முடிந்தது. #ProKabaddiLeague
    கொல்கத்தா:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய 127-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை சந்தித்தது. இதில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்த வண்ணம் இருந்தன. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 16-14 என்று கணக்கில் சற்று முன்னிலை பெற்றது.

    இதையடுத்து பிற்பாதி ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் 20-20 என்று சமநிலை வந்த பிறகு அரியானாவின் கை கொஞ்சம் (26-23) ஓங்கியது. இதன் பின்னர் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்கூர், அடுத்தடுத்த ரைடுகளில் புள்ளிகளை அள்ளினார். ஒரு முறை 3 பேரை அவுட் செய்து, ஆல்-அவுட் ஆக்கி அணியை நிமிர வைத்தார். தலைவாஸ் அணி வெற்றியை நோக்கி பயணித்த நிலையில் கடைசி நிமிடத்தில் 2 புள்ளி முன்னிலை கண்டிருந்தது.

    இந்த சமயத்தில் ரைடுக்கு சென்ற அஜய் தாக்கூர், நேரத்தை கடத்தும் நோக்கில் யாரையும் அவுட் செய்ய முயற்சிக்காமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தார். அதுவும் தங்கள் பகுதி வீரர்களை நோக்கி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அரியானா வீரர்கள் ஓடிச்சென்று அவரை அப்படியே மடக்கி தூக்கி தங்கள் பக்கம் இழுத்தனர். இதனால் திகைத்துபோன அஜய் தாக்கூர் பரிதாபமாக வெளியேறினார். இதன் பின்னர் அரியானா வீரர் விகாஸ் கன்டோலா ரைடு மூலம் ஒரு புள்ளி எடுத்து, திரிலிங்கான ஆட்டத்தை 40-40 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தார். அத்துடன் ஆட்ட நேரமும் முடிவுக்கு வந்தது. 25 முறை ரைடுக்கு சென்று அதில் 17 புள்ளிகளை சேர்த்து அணிக்கு வலுவூட்டிய அஜய் தாக்கூர் இறுதி கட்டத்தில் செய்த தவறினால் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

    இத்துடன் இந்த சீசனில் தமிழ் தலைவாசின் போட்டி முடிவுக்கு வந்தது. ‘பி’ பிரிவில் அங்கம் வகித்த தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 13 தோல்வி, 4 டை என்று மொத்தம் 42 புள்ளிகள் எடுத்து கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு நடையை கட்டியது. கடந்த ஆண்டு அறிமுகம் ஆன தமிழ் தலைவாஸ் அணி, முதலாவது சீசனிலும் ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. ‘ஏ’ பிரிவில் குஜராத், மும்பை, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு ‘பி’ பிரிவில் பாட்னா பைரட்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

    இன்றைய லீக் ஆட்டங்களில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.  #ProKabaddiLeague #HaryanaSteelers #TamilThalaivas
    புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை 47 - 37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ்அணி. #ProKabaddi #GujaratFortunegiants #HaryanaSteelers
    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் குஜராத் அணியினர் வீறு கொண்டு ஆடினர். இதனால் அரியானா அணி வீரர்களின் போராட்டம் வீணானது.

    இறுதியில், அரியானா அணியை 47 - 37 என்ற கணக்கில் குஜராத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இது அந்த அணியின் 14வது வெற்றி ஆகும். இதன்மூலம் ஏ பிரிவில் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளது. #ProKabaddi #GujaratFortunegiants #HaryanaSteelers
    புரோ கபடி லீக் போட்டியில் டெல்லியில் இன்று நடைபெற்ற இண்டர்ஜோன் ஆட்டத்தில், பரபரப்பான கடைசி நிமிடத்தில் அரியானா அணியை 30 -29 என்ற கணக்கில் வீழ்த்தி உபி யோதா அணி வெற்றி பெற்றது. #ProKabaddi #HaryanaSteelers #UPYoddha
    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

    புதுடெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உபி யோதா அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனாலும், தொடர்ந்து யுபி யோதா அணி சில புள்ளிகளில் முன்னிலை வகித்து வந்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் சளைக்காமல் போராடினர். ஒரு கட்டத்தில் ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது இரு அணிகளும் சமனிலை வகித்தன. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியில், அரியானா அணியை 30 - 29 என்ற கணக்கில் உபி யோதா அணி வீழ்த்தி நான்காவது வெற்றியை பதிவுசெய்தது.

    நேற்றைய ஆட்டத்தில் அரியானா அணி கடைசி நிமிடத்தில் பாய்ண்ட் எடுத்து பெங்கால் அணியை வீழ்த்தியது நினைவிருக்கலாம். #ProKabaddi #HaryanaSteelers #UPYoddha
    புரோ கபடி லீக் போட்டியில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தின் பரபரப்பான கடைசி கட்டத்தில் பெங்கால் அணியை 35 -33 என்ற கணக்கில் வீழ்த்தி அரியானா அணி வெற்றி பெற்றது. #ProKabaddi #HaryanaSteelers #BengalWarriors
    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

    புதுடெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 19 - 12 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் இறுதி வரை இரு அணி வீரர்களும் சளைக்காமல் ஆடினர். கடைசி கட்டம் வரை ஆட்டம் பரபரப்பாக சென்றது.

    இறுதியில், ஆட்டம் முடியும் கடைசி நிமிடத்தில் அரியானா அணி வீரர்கள் அபாரமாக ஆடி பாய்ண்ட் எடுத்தனர். இதனால் அரியானா அணி 35 - 33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அரியானா அணி ஆறாவது வெற்றியை பெற்றது. #ProKabaddi #HaryanaSteelers #BengalWarriors
    புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. #ProKabaddi #PuneriPaltan #HaryanaSteelers
    புனே:

    6-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) புனேரி பால்டன் அணி 35-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. முதல் பாதியில் 8-23 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த புனே அணி பிற்பாதியில் வியப்புக்குரிய வகையில் ஆடி பிரமாதப்படுத்தியது. புனே அணியில் அதிகபட்சமாக சந்தீப் நார்வல் 7 புள்ளிகள் சேர்த்தார். 17-வது லீக்கில் ஆடிய புனே அணிக்கு இது 7-வது வெற்றியாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்களூரு புல்ஸ் 34-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. இன்றைய ஆட்டங்களில் புனேரி பால்டன்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.
    புரோ கபடி லீக் போட்டியில் குஜராத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்திய குஜராத் அணி தனது பத்தாவது வெற்றியை பெற்றதுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. #ProKabaddi
    அகமதாபாத்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. குஜராத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே குஜராத் அணியினர் சிறப்பாக விளையாடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 21 - 15 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் குஜராத் அணியினரின் கையே ஓங்கியது. ஆனாலும், குஜராத் அணிக்கு அரியானா அணி வீரர்கள் நெருக்கடி தந்தனர்.

    இறுதியில், குஜராத் அணி 40 - 31 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குஜராத் அணி பத்தாவது வெற்றியை பெற்றதுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. #ProKabaddi 
    புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது. #ProKabaddi
    மும்பை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. தற்போது இண்டர் ஜோன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    மும்பையில் இன்று  நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 19 - 15 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா அணி முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் அரியானா அணி பொறுப்புடன்  விளையாடியது. ஆனாலும், தமிழ் தலைவாஸ்  அணியும் சளைக்காமல் புள்ளிகளை எடுத்தது.

    இறுதியில், பரபரப்பான கட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 32 - 32 என்ற புள்ளிகள் எடுத்து சமனில் முடிந்தது.

    இந்த போட்டியில் விளையாடிய அரியானா அணி வீரர் விகாஸ் கண்டோலா, 100 ரெய்டு பாயிண்ட்டுகள் எடுத்த பட்டியலில் இணைந்தார்.

    இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு அணியை 32 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மும்பை அணி ஒன்பதாவது வெற்றியை பெற்றது. #ProKabaddi 
    புரோ கபடி லீக் போட்டியில் உபியில் நேற்று நடந்த ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்திய ஜெய்ப்பூர் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
    லக்னோ:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உபி மாநிலத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. முதல் பாதியில் அரியானா அணி 20 - 18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜெய்ப்பூர் அணி சிறப்பாக ஆடியது.

    இறுதியில், அரியானா அணியை 38 - 32 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi 
    புரோ கபடி தொடரில் நேற்றைய ஆட்டங்களில் அரியானா, உ.பி. யோத்தா அணிகள் வெற்றி பெற்றன. #ProKabaddi2018 #PKL2018 #Haryana #Patna
    பாட்னா:

    6-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

    இந்த நிலையில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா -தபாங் டெல்லி அணிகள் மோதின. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்ததால் 3 நிமிடங்கள் இருக்கும் போது 35-35 என்ற புள்ளி கணக்கில் சமநிலை ஏற்பட்டது. அதன் பிறகு கடைசி நிமிடங்களில் அபாரமாக ஆடிய உ.பி.யோத்தா அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. உ.பி. அணியில் ஸ்ரீகாந்த் ஜாதவ் 12 புள்ளிகளும், பொறுப்பு கேப்டன் பிரசாந்த் குமார் ராய் 11 புள்ளிகளும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். 7-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பதிவு செய்த 3-வது வெற்றி இதுவாகும்.

    இதைத் தொடர்ந்து நடந்த இன்னொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 43-32 என்ற புள்ளி கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. பாட்னா கேப்டன் பர்தீப் நார்வால் ரைடு மூலம் 14 புள்ளிகள் சேர்த்த போதிலும் பலன் இல்லை. பாட்னாவுக்கு விழுந்த 4-வது அடி இதுவாகும்.

    போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளைய ஆட்டங்களில் புனேரி பால்டன்-குஜராத் பார்ச்சுன் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரியானா அணியை 42- 34 என்ற கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. #ProKabaddi #BengaluruBulls #HaryanaSteelers
    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ரெய்டுகளை எடுத்து வந்தனர். இதையடுத்து, சிறிது வித்தியாசத்தில் அரியானா அணியை விட பெங்களூரு அணி முன்னிலை வகித்து வந்தது.

    ஆட்டத்தின் இறுதியில் பெங்களூரு அணி சிறப்பாக செயல்பட்டதால், 42 -  34 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் பெங்களூரு அணி தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

    மற்றொரு லீக் ஆட்டத்தில் யுபி யோதா மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின. இதில் யுபி யோதா அணி 29-23 என்ற கணக்கில் புனேவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் யுபி யோதா அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. #ProKabaddi #BengaluruBulls #HaryanaSteelers
    ×