search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "priyanka"

    மாநில சீனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னை வீராங்கனை லட்சுமி பிரியங்கா சாம்பியன் பட்டம் பெற்றார்.
    மாநில சீனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி கரூரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னை வீராங்கனை லட்சுமி பிரியங்கா சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இறுதிப் போட்டியில் 21-12, 21-6 என்ற கணக்கில் ஜெர்லின் அணிகாவை (மதுரை) வீழ்த்தினார். இவரது சகோதரர் சங்கர் முத்துசாமி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்தை பிடித்தார். அவர் 21-17, 10-21, 10-21 என்ற கணக்கில் சதீஷ்குமாரிடம் (கோவை) தோற்றார்.

    சிறந்த வீரருக்கான விருது சங்கர் முத்துசாமிக்கும், சிறந்த வீராங்கனைக்கான விருது லட்சுமி பிரியங்காவுக்கும் வழங்கபட்டது. இருவரும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். சங்கர் முத்துசாமியும், லட்சுமி பிரியங்காவும் முகப்பேரில் உள்ள பயர்பால் அகாடமியில் பயிற்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
    விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது தானும், பிரியங்காவும் மகிழ்ச்சி அடையவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். #Prabhakaran #RahulGandhi #Priyanka
    ஹம்பர்க்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். ஹம்பர்க் நகரில் உள்ள புசிரியஸ் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு நிகழ்வில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். எனது பாட்டி, தந்தை ஆகியோரை பயங்கரவாதத்துக்கு பறிகொடுத்து இருக்கிறேன். இந்த வன்முறையை வெல்வதற்கும், அதை கடந்து வருவதற்கும் ஒரே வழி, மன்னிப்பு மட்டுமே. வன்முறைக்கு எதிர்வினை ஆற்றாமல் இருப்பதை பலவீனம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மன்னிப்புதான் வலிமையானது.



    எனது தந்தை 1991-ம் ஆண்டு கொல்லப்பட்டார். எனது தந்தையின் சாவுக்கு காரணமானவரும் சில ஆண்டுகளுக்குப்பின் கொல்லப்பட்டார். உடனே எனது சகோதரிக்கு தொலைபேசியில் அழைத்து, ‘நம் தந்தையின் சாவுக்கு காரணமாக இருந்தவர் கொல்லப்பட்டு விட்டார். ஆனாலும் என் மனம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. என்னுடைய இதயம் ஒருவித பதற்றத்துடனே இருக்கிறது’ என்றேன்.

    அதற்கு பிரியங்காவும், ‘சரியாக சொன்னாய், எனக்கும் மகிழ்ச்சி ஏற்படவில்லை’ என்றுதான் கூறினார். இவ்வாறு, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது நானும், பிரியங்காவும் மகிழ்ச்சி அடையவில்லை.

    அதற்கு காரணம், பிரபாகரனின் குழந்தைகள் இருக்கும் இடத்தில் என்னை வைத்து பார்த்தேன். எனது தந்தையை இழந்தபோது நான் கதறி கண்ணீர் விட்டது போன்றுதான் அந்த குழந்தைகளும் கதறும் என்று உணர்ந்தேன். வன்முறையை எதிர்த்து போரிட அகிம்சையால் மட்டுமே முடியும்.

    என்னை பற்றி பிரதமர் மோடி வெறுக்கத்தக்க கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஆனால் நான் அவரிடம் அன்பை மட்டுமே காட்டுகிறேன்.

    நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது நான் அவரை கட்டிப்பிடித்ததை எனது கட்சியை சேர்ந்த சிலர்கூட விரும்பவில்லை. ஆனால் வெறுப்புக்கு பதிலாக வெறுப்பையே காட்டுவது முட்டாள்தனமானது. எந்த பிரச்சினைக்கும் இது தீர்வாகாது.

    வேலையில்லா திண்டாட்டத்தை மிகப்பெரும் பிரச்சினையாக பார்க்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். இந்த பிரச்சினையை முதலில் உணர்ந்து கொண்டால்தான் அதற்கான தீர்வுகளை காண முடியும்.

    தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களை வளர்ச்சி திட்டங்களில் இருந்து பா.ஜனதா அரசு புறக்கணித்து வருகிறது. இது மிகப்பெரும் ஆபத்தில் முடியும். 21-ம் நூற்றாண்டில் மக்களுக்கான பார்வையை மறுப்பது, அவர்களை ஒதுக்குவது என்பது விபரீதத்தை ஏற்படுத்தி விடும்.

    உலகின் எந்த பகுதியிலும் பெருவாரியான மக்களை வளர்ச்சித்திட்டங்களில் இருந்து ஒதுக்கிய போது, கிளர்ச்சிக்குழுக்களே உருவாகி இருக்கின்றன. இதற்கு உதாரணம்தான் ஐ.எஸ். அமைப்பு.

    இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பெண்கள் வாழ இந்தியா தகுதியற்ற நாடு என்னும் கருத்தை ஏற்கமாட்டேன். பெண்களை, ஆண்கள் சமமாக பார்க்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.  #Prabhakaran #RahulGandhi #Priyanka #tamilnews 
    சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்க இருந்த பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அதில் இருந்து விலகினார். தற்போது அதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது. #PriyankaChopra
    சல்மான்கான் - பிரியங்கா சோப்ராவை ஜோடியாக வைத்து ‘பாரத்’ என்ற இந்தி படம் தயாராவதாக அறிவித்தனர். இந்த படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.13 கோடி சம்பளம் பேசி இருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென்று படத்தில் இருந்து விலகி விட்டார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். 

    பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசும் காதலிக்கின்றனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியானது. இதற்காகவே சல்மான்கான் படத்தில் இருந்து அவர் விலகியதாக கூறப்பட்டது. 

    பிரியங்கா சோப்ராவை படக்குழுவினர் கண்டித்தனர். அவருக்கு பதில் கத்ரினா கைப்பை தேர்வு செய்துள்ளனர். கத்ரினாவை வரவேற்று சல்மான்கானும் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவை புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். 



    இந்த படத்தில் நடிப்பதற்காகவே அவர் பாரத் படத்தில் இருந்து விலகியது தெரிய வந்துள்ளது. பிரியங்கா சோப்ரா நடிக்கும் ஹாலிவுட் படத்துக்கு ‘ஹவ்பாய் நிஞ்சா விக்கிங்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் கதாநாயகனாக கிறிஸ் பிராட் நடிக்கிறார். இவர் ஜூராசிக் வேல்ட், த கார்டியன் ஆப் த கேலக்ஸி, அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பிரியங்கா சோப்ரா ஏற்கனவே ‘எ கிட் லைக் ஜேக்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.
    டி.வி. நடிகை பிரியங்கா நேற்று தற்கொலை செய்துக் கொண்டதற்கு காரணமாக அவருக்கு, குழந்தை பெற தடை விதிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #Priyanka
    டி.வி. நடிகை பிரியங்கா நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ‘குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது என்று தொலைக்காட்சி நடிகைகளுக்கு கட்டுப்பாடு போடப்படுவதாகவும் பிரியங்காவும் அதுபோன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்’ என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்காவின் தோழிகள் சிலர் கூறியதாவது, ‘தற்போதைய சூழலில் உச்சத்தில் நடித்து வரும் பல நடிகைகள் குழந்தை பெற்றுக் கொள்வதை வாய்ப்புக்காக தள்ளிப்போடுகிறார்கள்.

    நடிக்க வரும்போது எந்தக் கேரக்டரில் நடிக்க வருகிறார்களோ அதைப் பொறுத்து இத்தனை வருடங்களுக்கு நான் தாய்மை அடையமாட்டேன் என்கிற ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார்கள்.

    ஒருவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அவர் தாய்மை அடைந்து வயிறு பெரியதாகத் தெரிய ஆரம்பித்தால் அந்தக் கதாபாத்திரத்துக்கு சரியாக இருக்காது. அதனால் தான் இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது.

    இதுபோன்ற ஒப்பந்தங்கள் கட்டாயம் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். தற்போது சீரியல்களில் நடித்துவரும் நடிகைகளுக்கும் இதுபோன்ற மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். தொடர்களில் நடிக்கும் நடிகைகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. டிவி தொடர்பான சங்கங்கள் இதற்கு மனிதாபிமான அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    ‘வம்சம்’ தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. #Priyanka
    ‘வம்சம்’ தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா. டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இவர், என் இனிய தோழியே, சபீதா உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

    சென்னை வளசரவாக்கத்தில் வெங்கடேஸ்வரா பெருமாள் நகர் சிவன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் வசித்து வந்தார்.

    பிரியங்காவின் வீட்டில் வேலை செய்யும் தீபா என்ற பெண் இன்று காலை 6.30 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டி பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது பிரியங்கா படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தகிரி, நரசிம்மமூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். பிரியங்காவின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிரியங்காவுக்கும், கூடைப்பந்து பயிற்சியாளரான அருண்பாலா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

    இதன் காரணமாகவும், குழந்தை இல்லாத ஏக்கத்திலும் பிரியங்கா மனம் உடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரது கணவர் அருண்பாலாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.



    அருண்பாலாவும், பிரியங்காவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அருண்பாலா கூடைப்பந்து பயிற்சியாளர் என்பதால் பள்ளிகளில் அது தொடர்பான விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

    அப்போது அவருக்கு பலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி தான் பிரியங்காவுக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு அருண்பாலா வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.

    பிரியங்கா நடிகையான பின்னர் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே இருவரும் பிரிந்துள்ளனர். முறைப்படி விவாகரத்து பெறுவதற்காக வக்கீல்களுடன் ஆலோசனையும் நடத்தி உள்ளனர்.

    பிரியங்காவை பிரிந்த பின்னர் அருண்பாலா வளசரவாக்கம் வீட்டுக்கு வருவதில்லை. நண்பர் ஒருவருடன் தங்கி உள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகமாகி உள்ளது. இதுவே பிரியங்காவை தற்கொலைக்கு தூண்டி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    பிரியங்கா ஏற்கனவே ஒருமுறை பிளேடால் கைகளில் வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கும் பிரியங்கா கோபப்பட்டு வந்துள்ளார். கடுமையான மனஅழுத்தத்தாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதுபோன்று காரணங்களாலேயே பிரியங்கா உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 
    ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பான வரும் வம்சம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். #Priyanka
    தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியங்கா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொடரில் நெடுந்தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா.

    திருமணமாகிய பிரியங்கா வளசரவாக்கத்தில் அவரது கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    பிரியங்காவின் உடலை மீட்ட வளசரவாக்கம் போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Priyanka

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, தன்னுடைய தம்பிக்கு நெகிழ்ச்சியுடன் பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார். #PriyankaChopra
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறார். இதற்காக ஹாலிவுட்டில் தங்கி இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்போது இந்தியா திரும்பியுள்ளார். இம்முறை அவர் இந்தியாவில் கூடுதல் நாட்கள் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.

    மும்பையில் தனது தம்பி சித்தார்த் சோப்ராவின் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில், ஹாய் ப்ரோ, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீ சிறந்த மனிதனாக மாறி இருக்கிறாய். உன்னை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். நீ அப்பாவை அதிகமாக நினைவுப்படுத்திகிறாய். உன்னுடைய இரக்க குணத்திற்கு நன்றி’ என்று பதிவு செய்திருக்கிறார்.



    பிரியங்கா சோப்ரா தற்போது தி ஸ்கை இஸ் பிங்க் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ஆயிஷா சவுத்திரி என்னும் 13 வயது சிறுமியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கிறது. இதில் ஆயிஷாவின் அம்மாவாக பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். ஆயிஷாவாக சைரா வாசிம் நடிக்க உள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், ஹாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளார். #PriyankaChopra
    ஆயிஷா சவுத்திரி என்னும் 13 வயது சிறுமி நுரையீரல் தொடர்பான பல்மனரி ஃபைப்ரோசிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். ஆனால் தனது சுயமுன்னேற்ற உரைகளால் நாடு முழுவதும் பிரபலம் ஆனார்.

    துரதிருஷ்டவசமாக தனது 18 வது வயதில் மறைந்த ஆயிஷாவின் வாழ்க்கை இந்தியில் படமாக உள்ளது. இதில் ஆயிஷாவின் அம்மாவாக பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். படத்துக்கு த ஸ்கை ஈஸ் பின்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆயிஷாவாக சைரா வாசிம் நடிக்க உள்ளார். 



    பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், ஹாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சோப்ரா அம்மா வேடத்தில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
    பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பயன்படுத்தும் கைப்பையின் விலை, ஒரு கார் விலையை விட அதிகம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. #PriyankaChopra
    இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா குவான்டிகா டி.வி தொடர் மூலம் ஹாலிவுட் பட வாய்ப்புகள் பெற்று உலக அளவில் பிரபலமாகி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

    அமெரிக்காவில் உள்ள நடிகர்-நடிகைகள், பாடகர்கள், விளையாட்டு வீரர்களுடன் நெருக்கமாகி விருந்து, கொண்டாட்டம் என்று அதிக நாட்கள் அந்த நாட்டிலேயே இருக்கிறார்.

    சமீபத்தில் அவரிடம் நேரில் சென்று பேசி வற்புறுத்தி சல்மான்கானுடன் பரத் என்ற படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்கு ரூ.12 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறார். அந்த தொகையை கொடுக்க படக்குழுவினரும் சம்மதித்து உள்ளனர்.

    உலக புகழ் பெற்ற அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுடன் பிரியங்கா சோப்ராவுக்கு நெருக்கம் ஏற்பட்டு இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ் 10 வயது குறைந்தவர். பணம், புகழ் என்று ஆடம்பரமாக வாழும் பிரியங்கா சோப்ரா இப்போது விலை உயர்ந்த கைப்பைகளுடன் நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார்.

    ஒரு வாரத்தில் மட்டும் அவர் கையில் மூன்று வெவ்வேறு கைப்பைகள் வைத்து இருந்தார். ஒரு பை சிமெண்ட் நிறத்தில் இருந்தது. அந்த பையின் விலை ரூ.4.50 லட்சம். இன்னொரு நாள் விமான நிலையத்தில் வெறொரு கைப்பையுடன் சென்றார். அதன் விலை ரூ.4.50 லட்சம். மற்றொரு நாள் பூப்போட்ட கைப்பை ஒன்றை வைத்து இருந்தார். அதன் விலை ரூ.4 லட்சம் என்று மதிப்பிட்டனர்.

    குறைந்த பட்சமாக குறிப்பிட்ட ஒரு காரின் விலை ரூ.3.5 லட்சத்துக்கும் இன்னொரு கார் ரூ.3.6 லட்சத்துக்கும் கிடைக்கிறது என்றும் அதைவிட விலை உயர்ந்த கைப்பைகளை பிரியங்கா சோப்ரா பயன்படுத்துகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

    பிரியங்கா சோப்ராவின் கைப்பைகளைப் பற்றித்தான் இந்தி பட உலகில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
    ×