search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Potato Recipes"

    குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 2,
    வெங்காயம், கேரட் - தலா ஒன்று,
    சீஸ் - 4 க்யூப்ஸ்,
    கோஸ் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
    பிரெட் தூள் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:


    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    இந்த மசாலா ஆறியதும் அதனுடன் துருவிய சீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    இந்த மசாலாவை வட்டமாக தட்டி, பிரெட் தூளில் புரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

    சூப்பரான சீஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான டோஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாவிற்கு...


    மைதா - அரை கப்,
    ஓமம் - 1/4 டீஸ்பூன்,
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - 1/2 டீஸ்பூன்,
    தண்ணீர் - தேவைக்கு.

    பூரணத்திற்கு...

    உருளைக்கிழங்கு - 1,
    வெங்காயம் - 1,
    பச்சைமிளகாய் - 2,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு - சிறிது,
    மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
    கடலை மாவு - 1 டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - 1/2 டீஸ்பூன்,
    பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து கையில் பிடிக்கும் பதம் வந்ததும் ஓமம், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள்  தூள், உப்பு, கடலை மாவு, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திக் கல்லில் நீளவாக்கில் தேய்த்து கொள்ளவும். தேய்த்த மாவின் உள்பக்கம் கத்தியால் 3  பாகங்களாக கீறி விடவும். பிறகு பூரணத்தை நீளவாக்கில் உருட்டி மாவின் நடுவில் வைத்து மூடி சாக்லெட்டாக ரெடி செய்து சூடான எண்ணெயில்  போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு டோஃபி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாதம், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் உருளைக்கிழங்கு பொடிமாஸ். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 200 கிராம்
    மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
    துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
    எலுமிச்சம்பழம் - 1
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    பொடிப்பதற்கு :

    மிளகாய் வற்றல் - 4
    உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி
    பெருங்காயம் - 1 துண்டு

    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
    கடலைபருப்பு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு வேக வைத்துக் கொள்ளவேண்டும். வெந்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

    பொடிப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் மூன்றையும் சிறிது எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் மசித்த உருளைக்கிழங்கை சிறிது மஞ்சள்தூள் உப்புடன் சேர்த்து பிரட்ட வேண்டும்.

    அடுத்து அதில் துருவிய இஞ்சி, பொடித்து வைத்துள்ள பொடி இரண்டையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்தபின் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவேண்டும்.

    கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.

    உருளைக்கிழங்கு பொடிமாஸை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.. பொரியலாகவும் பயன்படுத்தலாம்.

    அதனுடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி ருசிக்கலாம்.

    அருமையான பருத்தி பால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மதியம் பள்ளிக்கு கொடுத்தனுப்ப சுவையான வித்தியாசமான உணவு செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 2
    சீரகம் - கால் டீஸ்பூன்
    கோதுமை மாவு - 2 கப்
    மஞ்சள் தூள் -  கால் சிட்டிகை,
    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு
    கேரட் - 1
    குடைமிளகாய் - 1
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    உருளைக்கிழங்கு - 2



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கோதுமை மாவில் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பின் கேரட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    இப்போது மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்கி இறக்க வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் போட்டு நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.

    இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை தேய்த்து அதனை சுருட்டி பரிமாற வேண்டும். வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா வைத்த பின், அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம்.

    சுவையான உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - ஒன்று,
    உருளைக்கிழங்கு - 2,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    உருளைக்கிழங்கைத் தோல் சீவி குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.

    வேக வைத்த உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    குடைமிளகாயின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டுச் சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் குடைமிளகாயைச் சேர்த்து லேசாக நிறம் மாறாமல் வதக்கவும். குடைமிளகாய் நன்றாக வேகக்கூடாது.

    உருளைக்கிழங்கு நன்கு பொன்னிறமாக வதங்கியதும் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா ரெடி.

    குறிப்பு: குடமிளகாயை மற்ற காய்கறிகளைப் போல் அதிக நேரம் சமைக்காமல் லேசாக வதக்கினால் அதன் சத்துகள் முழுவதுமாகக் கிடைக்கும்.

    இந்தப் பொரியல் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற சைடிஷ். மிளகுத்தூளுக்குப் பதிலாக, சாம்பார் பொடி சேர்த்து இதைச் செய்து எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதங்களுக்கு சைடிஷ்ஷாகப் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து சப்ஜி செய்தால் அருமையாக இருக்கும். இந்த சப்ஜி சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    பன்னீர் - 200 கிராம்
    தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
    வெங்காயம் - 2
    சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    தக்காளி - 3
    ஏலக்காய் - 3
    சீரகம் - அரை தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிது
    கரம்மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    பன்னீரை சிறுத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயை கீறி வைக்கவேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு பன்னீர், உருளைக்கிழங்கு, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவேண்டும்.

    உருளைக்கிழங்கு வெந்ததும் கரம்மசாலா தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

    சுவையான ஆலு பன்னீர் சப்ஜி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து சூப்பரான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    முட்டை - 4
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 4
    உருளைக்கிழங்கு - 2
    கறிவேப்பிலை
    வெங்காயம் - 1
    வெண்ணெய் - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி, உப்பு கலந்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்..

    நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு ஆம்லெட் போல் வேக விடவும்.

    இப்பொழுது ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு வேக விட்டு எடுத்து தட்டில் வைத்து முக்கோணமாக கேக் வெட்டுவது போல் வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஹனி சில்லி பொட்டேடோ. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 250 கிராம்,
    உப்பு - 1 டீஸ்பூன்,
    தண்ணீர் - 2 கப்,
    அரிசி மாவு - 5½ டீஸ்பூன்,
    மைதா, எண்ணெய் - தலா 5 டீஸ்பூன்,
    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
    வெள்ளை எள் - 3½ டீஸ்பூன்,
    நறுக்கிய பூண்டு - 3 பல்,
    பச்சைமிளகாய் - 3,
    வெங்காயம் - 1/2,
    குடைமிளகாய் - 1/4,
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
    ரெட் சில்லி சாஸ், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
    டொமேட்டோ கெட்சப், தேன் - தலா 2 டீஸ்பூன்,
    கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன் தண்ணீர்,
    ஸ்பிரிங் ஆனியன் - சிறிது.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளமாக நறுக்கிய கொள்ளவும்.

    ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    குடைமிளகாய், ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 10 நிமிடம் வேகவைத்து வடித்துக் கொள்ளவும்.

    இந்த உருளைக்கிழங்குடன் அரிசி மாவு, மைதா தலா 1 டீஸ்பூன் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.

    மற்றொரு கிண்ணத்தில் மீதியுள்ள அரிசி மாவு, மைதா, உப்பு சேர்த்து தண்ணீர்  ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

    இந்த மாவில் உருளைக்கிழங்கை முக்கியெடுத்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    வெறும் கடாயில் 2½ டீஸ்பூன் எள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சைமிளகாய், எள் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கிய பின்னர் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, சர்க்கரை, சோயாசாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள், டொமேட்டோ கெட்சப், தண்ணீர்  ஊற்றி கொதித்ததும், கரைத்த கார்ன்ஃப்ளார் கலவை ஊற்றி கெட்டியானதும் ஸ்பிரிங் ஆனியன், வறுத்த உருளைக்கிழங்கு, தேன் சேர்த்து கிளறி கடைசியாக வறுத்த எள்ளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

    சூப்பரான ஹனி சில்லி பொட்டேடோ ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான பொட்டேடோ ஸ்மைலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ,
    பிரெட் க்ரம்ஸ் - 3½ டீஸ்பூன்,   
    கார்ன் ஃப்ளார் - 3 டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
    பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு,
    செடார் சீஸ் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

    ஸ்மைலி செய்ய...

    ஸ்பூன் - 1,
    ஸ்ட்ரா - 1,
    ரவுண்ட் கட்டர்- 1.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    பிசைந்த மாவில் பெரிய உருண்டையாக எடுத்து அதை நன்றாக உருட்டி கொள்ளவும்.

    பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தேய்த்து நடுவில் மாவை வைத்து மூடி சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போல தடியாக தேய்க்க வேண்டும்.

    பின்னர் ரவுண்ட் கட்டர் கொண்டு வெட்டி ஸ்ட்ரா கொண்டு கண்கள் போல் இரண்டு ஓட்டை போட வேண்டும்.

    அடுத்து வாய்க்கு ஸ்பூனால் வரைய வேண்டும்.

    இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்க வேண்டும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து ஸ்மைலிகளை போட்டு பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப் உடன் பரிமாறவும்.

    சூப்பரான பொட்டேடோ ஸ்மைலி ரெடி.

    குறிப்பு: ஸ்மைலிகளை சிப்லாக் பேக் அல்லது பாக்ஸில் போட்டு மூடி ஃப்ரீசரில் வைத்து தேவைப்படும் பொழுது எடுத்து அதிக சூடான எண்ணெயில்  பொரித்தெடுத்து கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு அதிக அளவு கால்சியத்தை கொண்டிருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனி சுவையான உருளைக்கிழங்கு புட்டு செய்முறை பற்றி பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் - அரை மூடி
     
    தாளிக்க :

    கடுகு - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    சின்ன வெங்காயம் - 10
    நல்லெண்ணெய் - தாளிக்க தேவையான அளவு


     
    செய்முறை :

    முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தோலுரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் தேவையான அளவு உப்பினைச் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

    வாணலியில் தேவையான அளவு நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கினைச் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறவும்.

    இரண்டு நிமிடங்கள் கழித்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

    சுவையான உருளைக்கிழங்கு புட்டு தயார்.

    இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று உருளைக்கிழங்கை சேர்த்து மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தனியா - 2 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    அரிசி - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - ¼ கப்
    உருளைக்கிழங்கு - 4
    தயிர் - 1½ கோப்பை
    கொத்தமல்லை தழை - சிறிதளவு
    நீர் - ½ கப்
    துருவிய தேங்காய் - ¼ கப்
    உப்பு - சுவைக்கு

    தாளிக்க :

    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - ½ தேக்கரண்டி
    கறிவேப்பிலை சிறிதளவு
    ஓமம் - ½ தேக்கரண்டி



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், இஞ்சி, கடலைப்பருப்பு, அரிசிபோட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் கடைந்த மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், ஓமம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மோர் கலவையில் கொட்டவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×