search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mor Kuzhambu"

    சாதத்திற்கு இந்த தயிர் உருண்டை குழப்பு சூப்பரான சைடிஷ். இன்று இந்த தயிர் உருண்டை குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடைந்த தயிர் - 250 மி.லி.

    உருண்டை செய்ய...

    கடலைப்பருப்பு - 100 கிராம்,
    துவரம்பருப்பு - 50 கிராம்,
    காய்ந்தமிளகாய் - 10,
    தனியா - 2 டீஸ்பூன்,
    உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தேவைக்கு,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்.

    அரைக்க...


    தனியா - 2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 6,
    இஞ்சி - 1 துண்டு,
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    மிளகு - 1/2 டீஸ்பூன்,
    அரிசி - 1 டீஸ்பூன்.

    தாளிக்க...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து.



    செய்முறை :

    கடலைப்பருப்பு, துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, துவரம் பருப்பு நன்றாக ஊறியவுடன் தனியா, உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவில் 1 டீஸ்பூன் எண்ணெய், மஞ்சள் தூள், சிறிது உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து கொள்ளவும்.

    அரைக்க கொடுத்தவற்றை ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து வரும் போது அதில் வேக வைத்த உருண்டை, கடைந்த தயிரை ஊற்றி நுரைத்து வரும் பொழுது இறக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தயிர் கலவையில் கொட்டி பரிமாறவும்.

    சூப்பரான தயிர் உருண்டை குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுரைக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரும். மோர்க்குழம்பு செய்யும் போது அதில் சுரைக்காய் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுரைக்காய் - சிறியது 1
    கெட்டித்தயிர் - ஒரு கப்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    முழு உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    சுரைக்காயை தோல், விதை நீக்கி சிறியதுண்டுகளாக வெட்டி வேக வைத்து கொள்ளவும்.

    தயிரை கடைந்து கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, முழு உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடித்கொள்ளவும்.

    கடைந்த தயிருடன் உப்பு, மஞ்சள்தூள், வறுத்த பொடி சேர்த்துக் கரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் மோர்க்கலவை, வேகவைத்த சுரைக்காய் சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

    சுவையான, உடலுக்குக் குளிர்ச்சி தரும் மோர்க்குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று உருளைக்கிழங்கை சேர்த்து மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தனியா - 2 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    அரிசி - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - ¼ கப்
    உருளைக்கிழங்கு - 4
    தயிர் - 1½ கோப்பை
    கொத்தமல்லை தழை - சிறிதளவு
    நீர் - ½ கப்
    துருவிய தேங்காய் - ¼ கப்
    உப்பு - சுவைக்கு

    தாளிக்க :

    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - ½ தேக்கரண்டி
    கறிவேப்பிலை சிறிதளவு
    ஓமம் - ½ தேக்கரண்டி



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், இஞ்சி, கடலைப்பருப்பு, அரிசிபோட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் கடைந்த மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், ஓமம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மோர் கலவையில் கொட்டவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து பல்வேறு சுவையான உணவுகளை செய்யலாம். இன்று மாம்பழத்தை வைத்து மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிப்பும் தித்திப்புமான சிறு மாம்பழங்கள் - 2,
    புளித்த மோர் - 2 கப்,
    அரிசி - ஒரு டீஸ்பூன்,
    சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன்,
    வெந்தயம் - கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    காய்ந்த மிளகாய் - 2,
    தேங்காய் துருவல் - ஒரு கப்,
    தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கப் தண்ணீர் விட்டு மாம்பழங்களை வெட்டிப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.

    மிக்சியில் தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்ததை மோரில் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வெந்து கொண்டுஇருக்கும் மாம்பழங்களுடன் கலக்கவும் (தேவையானால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்).

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானமும் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.

    குழம்பு பொங்கி வரும்போது கீழே இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

    சூப்பரான மாம்பழ மோர்க்குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×