search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "variety mor kuzhambu"

    சுரைக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரும். மோர்க்குழம்பு செய்யும் போது அதில் சுரைக்காய் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுரைக்காய் - சிறியது 1
    கெட்டித்தயிர் - ஒரு கப்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    முழு உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    சுரைக்காயை தோல், விதை நீக்கி சிறியதுண்டுகளாக வெட்டி வேக வைத்து கொள்ளவும்.

    தயிரை கடைந்து கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, முழு உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடித்கொள்ளவும்.

    கடைந்த தயிருடன் உப்பு, மஞ்சள்தூள், வறுத்த பொடி சேர்த்துக் கரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் மோர்க்கலவை, வேகவைத்த சுரைக்காய் சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

    சுவையான, உடலுக்குக் குளிர்ச்சி தரும் மோர்க்குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து பல்வேறு சுவையான உணவுகளை செய்யலாம். இன்று மாம்பழத்தை வைத்து மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிப்பும் தித்திப்புமான சிறு மாம்பழங்கள் - 2,
    புளித்த மோர் - 2 கப்,
    அரிசி - ஒரு டீஸ்பூன்,
    சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன்,
    வெந்தயம் - கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    காய்ந்த மிளகாய் - 2,
    தேங்காய் துருவல் - ஒரு கப்,
    தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கப் தண்ணீர் விட்டு மாம்பழங்களை வெட்டிப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.

    மிக்சியில் தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்ததை மோரில் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வெந்து கொண்டுஇருக்கும் மாம்பழங்களுடன் கலக்கவும் (தேவையானால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்).

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானமும் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.

    குழம்பு பொங்கி வரும்போது கீழே இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

    சூப்பரான மாம்பழ மோர்க்குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×