search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poochorithal festival"

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 12-ந்தேதி பூச்சொரிதல் திருவிழா நடைபெற உள்ளது.
    • கோவில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பூச்சொரிதல் திருவிழா நடைபெறும் 12, 13-ந்தேதிகளில் பக்தர்கள் கோவிலுக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் போலீசார் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோவிலின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிக்க வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையினர் சமயபுரத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்லும் வகையில் கூடுதல் பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் புறவழிச்சாலை, மருதூர் பிரிவுரோடு, வி.துறையூர் பிரிவு ரோடு, ஆட்டுச்சந்தை பிரிவுரோடு, சமயபுரம் நால்ரோடு, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பிரிவுரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பணிகளை முறையாக கண்காணித்து சீர் செய்ய வேண்டும்.

    மின்சார வாரிய அலுவலர்கள் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கும், பழுது ஏற்பட்டால் உடனே நிவர்த்தி செய்ய தேவையானயளவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். மருத்துவ துறையினர் திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் நுழைவுவாயில், கோவிலுக்கு செல்லும் கடைவீதி, போலீஸ் நிலையம் அருகில், திருமண மண்டபம் முன்பகுதி மற்றும் தேவையான இடங்களில் 2 நாட்கள் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ முகாமை அமைக்க வேண்டும்.

    இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் அமைத்தல், தேவையான இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி, கூடுதல் முதலுதவி முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நெடுஞ்சாலை துறையினர் சாலையின் இருபக்கங்களிலும் மேடு பள்ளங்கள் இல்லாமல் சீரமைத்து, எளிதாக பக்தர்கள் நடந்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தீயணைப்பு துறை மூலம் தேவையான அளவு தண்ணீர், தீயணைக்கும் உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். எஸ்.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து தரவேண்டும்.

    ஆண்கள், பெண்கள் என தனித்தனியே தற்காலிக கூடுதல் கழிவறை மற்றும் குளியலறை வசதிகள் அமைக்க வேண்டும். பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தண்ணீர் பாக்கெட்டுகள், சுகாதாரமற்ற உணவு பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட சுகாதார பணியாளர்களை கூடுதலாக நியமனம் செய்து சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் அதற்கான அனுமதி பெற்ற இடத்தில், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து தரமான உணவு வகைகள் வழங்குவதை உணவு பாதுகாப்பு துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

    அனுமதி பெறாத இடங்களில் அன்னதானம் கண்டிப்பாக வழங்கக்கூடாது. கோவில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். கோவில் வளாக பகுதியில் கட்டணமில்லா கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி, முடிக்காணிக்கை செலுத்திய பக்தர்கள் குளிப்பதற்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே குளியல் தொட்டி, உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட வசதி செய்து கொடுத்தல் வேண்டும்.

    இந்த விழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடந்திட அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகமும், போலீசாரும், கோவில் நிர்வாகமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) காளியப்பன், போலீசார், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும்.
    • சக்திதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில்.

    சக்திதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாதகடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்புஆகும்.

    இந்த 28 நாட்களில் இக்கோவிலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவும், நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    இப்படி சிறப்புமிக்க இக்கோவிலின் பூச்சொரிதல் விழா வருகிற மார்ச் 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறது. அன்று, அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீனலக்கனத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா தொடங்குகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை காணிக்கையாக கொடுத்து அம்மனை வழிபட்டனர்.
    • இந்த பூத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணியளவில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பூத்தட்டுகளை சுமந்து கோவிலை 3 முறை வலம் வந்தனர். அதன்பிறகு பூக்களை அம்மனுக்கு படைத்து அந்த பூக்களை கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேருக்கு கொண்டு வந்து கொடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து தேரின் முன்பு 21 வாழைத்தண்டுகளில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கப்பட்டு பூத்தேரோட்டம் தொடங்கியது. இதில் கோட்டை மாரியம்மனின் பூத்தேருக்கு முன்பாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன் சாமி பூத்தேர்கள் அணி வகுத்து சென்றன. இந்த பூத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது வழியெங்கும் அமைக்கப்பட்டு இருந்த பூக்காணிக்கை மையங்களில் இருந்து பூக்கள் பெறப்பட்டன.

    அதேபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை காணிக்கையாக கொடுத்து அம்மனை வழிபட்டனர். இந்த காட்சி பக்தர்கள் வெள்ளத்தில் பூத்தேர் மிதந்து வருவதை போன்று இருந்தது. அதைத்தொடர்ந்து மதியம் சுமார் 2 மணியளவில் பூத்தேர்கள் கோவிலை வந்தடைந்தன. அதன்பிறகு பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்மனின் கருவறையில் கொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    • முருகப்பெருமானுக்கு மலர் அபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று மலர்க்காவடி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடந்தது. 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து காலை 8 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் திருவாவடுதுறை ஆதீனம், தருமை ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், தவத்திரு குமரகுருபர சுவாமிகள், பொம்மபுரம் ஆதீனம், சிவப்பிரகாச சுவாமிகள், தம்பிரான் சுவாமிகள், திருக்கோவிலூர் ஆதீனம், மாணிக்கவாசக சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளுரை வழங்கி மலர்க்காவடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் வரவேற்றார்.

    கோவிலில் இருந்து புறப்பட்ட மலர்க்காவடி ஊர்வலம் ஆறுமுகம் நகர், இந்திரியம் தம் தெரு, கீழபஜார் மற்றும் கிரிவல பாதை வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் முருகப்பெருமானுக்கு மலர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உச்சிகால பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், பிரதோஷ குழு தலைவர் முருகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நன்கொடையாளர்கள் புஷ்ப யாகத்திற்காக மொத்தம் 9 டன் மலர்கள் வழங்கினர்கள்.
    • சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புஷ்பயாகம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்ப யாகம் நடந்தது. சுவாமி, தாயார் உற்சவர்கள் பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

    14 வகையான நறுமண மலர்கள் மற்றும் 6 வகையான இலைகளுடன், மலையப்ப சுவாமியுடன், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு புஷ்ப அர்ச்சனையும், வண்ண மலர்கள் மற்றும் இலைகளுக்கு நடுவே சுவாமி, தாயார்களுக்கு புஷ்ப யாகமும் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் முதன்மை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கலந்து கொண்டார்.

    வேத பண்டிதர்கள் ருக்வேதம், சுக்லயஜுர்வேதம், கிருஷ்ண யஜுர்வேதம், சாமவேதம், அதர்வண வேதம், பாராயணம் செய்தனர். முன்னதாக பூக்களை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    15-ம் நூற்றாண்டு முதல் புஷ்பயாகம் நடைபெற்று வருவதாகவும், அதன் பிறகு நிறுத்தப்பட்டு 1980-ம் ஆண்டு முதல் மீண்டும் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நன்கொடையாளர்கள் புஷ்ப யாகத்திற்காக மொத்தம் 9 டன் மலர்கள் வழங்கினர்கள்.

    • இன்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • 6-ந்தேதி ஞாயிறு வசந்தோற்சவம் நடக்கிறது.

    ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோட்டில் பழமை வாய்ந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எப்போதும் கம்பம் நடப்பட்டு இருப்பதால் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடந்து வருகிறது.

    அதேபோல் இந்த ஆண்டும் வழக்கம்போல் நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவில்களின் திருவிழா நேற்று முன் தினம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பூச்சாட்டு விழாவில் பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை கொண்டு வந்து வைத்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது அம்மன் மலர்களின் குவியலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூச்சாட்டு விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் வருகிற 31-ந் தேதி இரவு 12 மணிக்கு பூவோடு பற்ற வைத்தலும், அன்று காலை 5 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அடுத்த மாதம் 1-ந் தேதி இரவு 8 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. 2-ந் தேதி காலையில் செல்லாண்டி அம்மன் கோவிலில் அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 10 மணிக்கு அக்கினி குண்டம் பற்றவைத்தல் நடைபெறுகிறது. இதையடுத்து 3-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அக்கினி குண்டம், மாலை திருத்தேர் உற்சவமும் நடக்கிறது. 4-ந் தேதி உடற்கூறு வண்டி வேடிக்கையும், 5-ந் தேதி இரவு வாணவேடிக்கையுடன் புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி வருதலும், சத்தாபரணமும் நடக்கிறது. 6-ந்தேதி ஞாயிறு வசந்தோற்சவம் நடக்கிறது. அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் 20-ந் தேதி முடிய தினந்தோறும் விடையாற்றி கட்டளைதாரர்கள் நிகழ்ச்சி நடக்கிறது.

    • இன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • பொன்னூஞ்சல் நிகழ்ச்சி அக்டோபர் 4-ந்தேதி நடைபெறுகிறது.

    திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பூதநாயகி அம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 96 கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கும் இந்த கோவிலின் திருவிழா நேற்று பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மருங்கி நாட்டுத் தலைவர்தான் முதலில் பூப்போடுவார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதி கிராம மக்களும் அம்மனுக்கு பூப்போட்டு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று திருவிழாவில் முதல் பூவாக கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் அம்மனுக்கு பூ போட்டார்.

    அதைத்தொடர்ந்து பொதுமக்கள் பலரும் அம்மனுக்கு பூப்போட்டுச் சென்றனர். இதேபோல் வருவாய் துறையினர், போலீசார் சார்பிலும் அம்மனுக்கு பூ போட்டனர். முன்னதாக பூதநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கொண்டு வந்த அந்த பூக்களை அம்மனுக்கு செலுத்தினர். இருப்பினும் கடந்த ஆண்டை விட கிராம மக்களின் வருகை குறைந்திருந்தது.

    திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 27-ந் தேதியில் இருந்து மண்டகப்படி நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொன்னூஞ்சல் நிகழ்ச்சி அடுத்த மாதம்(அக்டோபர்) 4-ந் தேதி நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
    • பூஜைகளை மணிகண்ட சிவம், வல்மீக நாத குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

    திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோவில் 48-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதனையொட்டி வல்மீகநாதர், வாழவந்த அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றது. இதைதொடர்ந்து சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், பாகம்பிரியாள் அம்மன் புஷ்ப பல்லக்கு அலங்காரத்திலும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதனையொட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் அம்மன் சன்னதியில் இருந்து பூத்தட்டு எடுத்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பூஜைகளை மணிகண்ட சிவம், வல்மீக நாத குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சிகளில் சிவகங்கை சமஸ்தான சரக செயல் அலுவலர் செந்தில்குமார், ஆலய கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், வர்த்தக சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் வல்மீகநாதன், பொருளாளர் தங்கராஜ், துணைத்தலைவர் அம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருவெற்றியூர் கிராம மக்கள், வர்த்தக நல சங்கத்தினர் செய்து இருந்தனர். திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஸ், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக அம்மனை வலம் வந்தனர்.
    • இன்று தேவி கருமாரியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தி.புதுப்பட்டி சக்திபுரம் ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி பூக்குழி திருவிழாவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட 41 அடி நீள பூக்குழியில் ஸ்ரீஅம்மா இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 7 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.

    காலை 11 மணிக்கு மேல் 41 அடி உயர மகாசக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக அம்மனை வலம் வந்தனர்.

    திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) தேவி கருமாரியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து பக்தர்கள் கஞ்சிக் கலயம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், கஞ்சி கலயத்தை ஸ்ரீஅம்மா எடுத்து அன்னைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. இதையடுத்து பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாலிகயிறு வழங்கப்படுகிறது.

    விழாவின் சிறப்பு அம்சமாக 3 நாட்களாக காலை முதல் இரவு வரை கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி பீட நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

    • புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சையை ஆண்ட சோழபேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது.

    இந்த சிலையில் கோடை காலங்களில் முத்து, முத்தாக வியர்வை துளிகள் வெளியாகும் என்பது ஐதீகம். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்மனுக்கு பூக்களை தவிர வேறு எந்தவித அபிஷேகமும் செய்வதில்லை. இதனால் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றவை.

    அந்தவகையில், இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா ஆடி 3-வது வெள்ளிக்கிழமையான நேற்று நடந்தது. இதையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து அம்மன் உருவப்படங்களுடன் கூடிய ரதங்கள் புறப்பட்டு தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தன. அங்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அனைத்து ரதங்களும் புறப்பட்டன.

    பக்தர்கள் ஏராளமானோர் பூக்கூடைகளை கொடுத்தனர். இந்த பூக்கூடைகள் அனைத்தும் ரதத்தில் வாங்கி வைக்கப்பட்டன. பின்பு மேளதாளங்கள் முழங்க இந்த ரதங்கள் தஞ்சையில் உள்ள முக்கியவீதிகள் வழியாக சென்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. நேற்று காலை மாரியம்மன்கோவில் தேரோடும் முக்கிய வீதிகளில் அம்மன் ரதங்கள் வலம் வந்தன.

    ரதத்தின் முன்பு பெண்கள், சிறுமிகளின் கோலாட்டம் நடைபெற்றது. பின்பு புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 20-க்கும் மேற்பட்ட வகையான சுமார் 5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, அன்னதான அறக்கட்டளை, கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
    • அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடைபெறுகிறது

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மேலும் இங்குள்ள அம்மனுக்கு பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, மாரியம்மன் கோவில் அன்னதான அறக்கட்டளை, அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம வாசிகள் சார்பில் இந்த பூச்சொரிதல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூ ரதங்கள் மந்திர கோஷங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட பூ ரதங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று மாலை வந்தடைந்தது. இந்த ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் வாகனங்களில் அம்மன் படங்களும் வைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, காமராஜ் மார்க்கெட், கீழவீதி, கீழவாசல், வண்டிக்காரத்தெரு, தொம்பன்குடிசை வழியாக மாரியம்மன்கோவிலை இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்றடையும், பின்னர் அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடைபெறுகிறது

    பூ ரத ஊர்வலத்தை சுக்ர வார வழிபாட்டுக்குழு தலைவர் கேசவன் முன்னிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர், திருக்கயிலாய கந்த பரம்பரை சூரியனார் கோவில் சன்னிதானம் வாமதேவ சிவாக்கிரயோகிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுக்ர வார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, அன்னதான அறக்கட்டளை, ஆலய அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூ ரதங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மேலும் இங்குள்ள அம்மனுக்கு பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, மாரியம்மன் கோவில் அன்னதான அறக்கட்டளை, அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம வாசிகள் சார்பில் இந்த பூச்சொரிதல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூ ரதங்கள் மந்திர கோஷங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்படும் பூ ரதங்கள் தஞ்சை பெரிய கோவிலை வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை வந்தடையும். அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, காமராஜ் மார்க்கெட், கீழவீதி, கீழவாசல், வண்டிக்காரத்தெரு, தொம்பன்குடிசை வழியாக மாரியம்மன்கோவிலை 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை சென்றடையும், பின்னர் அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடைபெறும்.

    பூ ஊர்வல ரதத்தை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா ஆகியோர் முன்னிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர், திருக்கயிலாய கந்த பரம்பரை சூரியனார் கோவில் சன்னிதானம் வாமதேவ சிவாக்கிரயோகிகள் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். 5-ந்தேதி மாலை பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    ×