search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "punnainallur mariamman"

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • ஆவணி திருவிழா நடைபெறாததால் தேரோட்டமும் நடத்தப்படவில்லை.

    தஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் மூலஸ்தானம் புற்று மண்ணால் உருவானது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    இந்த ஆண்டு குடமுழுக்கிற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் ஆவணி திருவிழா நடத்தப்படவில்லை. ஆனால் அம்மனுக்கு உகந்த நாளான ஆவணி மாத ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையில் நடை திறப்பதற்கு முன்பே கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நடந்தே வந்தனர். நேரம் செல்ல, செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே இருந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாரியம்மனுக்கு ரத்ன அங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதை காண அதிகளவில் திரண்ட பக்தர்கள் சிரமம் இன்றி அம்மனை தரிசனம் செய்வதற்காக பொதுவழி, சிறப்புவழி என இருவழிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இந்த இருவழிகளின் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர்.

    கோவில் பிரகாரம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. பக்தர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தன்னார்வலர்களும் ஏராளமானோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதுமட்டுமின்றி முடிகாணிக்கை, மாவிளக்கு எடுத்தல் போன்ற பல்வேறு வகையான நேர்த்திக்கடனை செலுத்தினர். அதுமட்டுமின்றி பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    கோவிலுக்கு நடைபயணமாக சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பிறகு தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வழக்கமாக ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறும். ஆனால் ஆவணி திருவிழா நடைபெறாததால் தேரோட்டமும் நடத்தப்படவில்லை.

    • கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது.
    • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

    தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது. மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஆவணி 3-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர்.

    கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதல்நாள் இரவு வந்து கோவிலில் தங்கியிருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு ஆவணிமாதம் ஒவ்வொரு வாரமும் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். முதல் ஞாயிற்றுக்கிழமை மலர்அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தாழம்பூ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    • அம்மனுக்கு ஆவணிமாதம் ஒவ்வொரு வாரமும் சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.
    • கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது.

    தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும்.

    இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது. மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

    இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர்.

    கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதல்நாள் இரவு வந்து கோவிலில் தங்கியிருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு ஆவணிமாதம் ஒவ்வொரு வாரமும் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். முதல் ஞாயிற்றுக்கிழமை மலர்அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று மரிக்கொழுந்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    • இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது.
    • மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

    தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது. மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

    இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த நாட்களில் தேரோட்டம், தெப்ப உற்சவம் போன்றவை நடைபெறும்.

    18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் திருவிழாக்கள் நடைபெறாது. ஆனால் வழக்கம்போல் அம்மனை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர். கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதல்நாள் இரவு வந்து கோவிலில் தங்கியிருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    அம்மன் சன்னதியில் பூக்களால் தோரண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மூலவர் அம்மனுக்கு சம்மங்கி பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்து.

    பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக பொதுவழி, சிறப்புவழி என 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. பக்தர்கள் இந்த 2 வழிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொண்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ராஜகோபுரம், பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது.
    • இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

    மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து பேரானந்தம் அடைவார்கள்.

    இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. 18 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகமும், அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் முடிவு செய்தது. முதல்கட்டமாக மூலவர் கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை திருப்பணி செய்வதற்காக பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நேற்றுமுன்தினம் பாலாலய பூஜைகள் தொடங்கியது. நேற்றுகாலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ராஜகோபுரம், பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. இதையடுத்து கோபுரங்கள், மண்டபங்கள், தரைதளம் உள்ளட்ட கோவிலின் பல்வேறு இடங்களில் புனரமைக்கும் பணி நடைபெறுகிறது. சாமிகளுக்கு பாலாலயம் செய்யப்படாததால் மகாமாரியம்மன் உள்ளிட்ட அனைத்து சாமிகளையும் பக்தர்கள் வழிபாடு செய்யலாம் என கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    • கோவிலுக்கு வெளியே புதிய தரை தளம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
    • இன்று (வெள்ளிக்கிழமை) 2-ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

    தஞ்சையை அடுத்த புன்னநைல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களுள் ஒன்று. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

    இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. பொதுவாக கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்படும். ஆனால் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு 17 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த நிலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடரந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதையடுத்து குடமுழுக்கு நடத்துவதற்காக கோவிலில் திருப்பணிகளை கோவில் நிர்வாகத்தினர் தொடங்கினர். அதன்படி கோவில் கொடிமரத்தின் இருபுறமும் உள்ள மண்டபத்தின் தூண்களில் விரிசல் விழுந்து இருந்ததால் அந்த மண்டபங்களை இடித்து விட்டு புதிய மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டன. அதன்படி 2 புறமும் மண்டபங்கள் இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலுக்கு வெளியே புதிய தரை தளம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் கோவிலில் உள்ள ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் புனரமைக்கும் பணி தொடங்குவதற்கு முன்னதாக பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கால பாலாலய யாக சாலை பூஜை நேற்று மாலை நடைபெற்றது.

    இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர்பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் அதிகாரிகள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 2-ம் கால யாக சாலை பூஜையும், அதை தொடர்ந்து பாலாலயமும் நடைபெறுகிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர் கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 17 ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படாமல் இருந்தது.
    • வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பாலாலயம் நடைபெறுகிறது.

    தஞ்சையை ஆண்ட சோழபேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது.

    இந்த சிலையில் கோடை காலங்களில் முத்து, முத்தாக வியர்வை துளிகள் வெளியாகும் என்பது ஐதீகம். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்மனுக்கு பூக்களை தவிர வேறு எந்தவித அபிஷேகமும் செய்வதில்லை. பிற அபிஷேகத்துக்கான அம்பாளின் வலதுபுறத்தில் வடக்கு நோக்கிய நிலையில் விஷ்ணு துர்க்கை உள்ளது. இந்த விஷ்ணு துர்க்கைக்கும், அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

    மேலும் ஆகம விதிப்படி இந்த கோவிலில் நாள்தோறும் 4 கால பூஜைகள் நடந்து வருகின்றன. மூலவராக விளங்கும் புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும்.

    இந்த கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பல்வேறு திருப்பணிகளுடன் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. பொதுவாக கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.

    ஆனால் 17 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படாமல் இருந்தது. தமிழகஅரசு பல கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலிலும் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

    அவர்களின் எதிர்பார்ப்புபடி குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிகள் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் தொடங்கப்பட்டுள்ளன. கோவிலில் கொடிமரத்தின் இருபுறமும் உள்ள மண்டபங்களின் தூண்கள் விரிசல் விழுந்து இருந்ததால் அந்த மண்டபங்களை இடித்துவிட்டு புதிய மண்டபங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டன. அதன்படி 2 புறமும் உள்ள மண்டபங்கள் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி கோவிலுக்கு வெளியே புதிய தரைத்தளம் அமைப்பதற்கான பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

    வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பாலாலயம் நடைபெறுகிறது. அதன்பிறகு ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள் புனரமைக்கும் பணி தொடங்கப்படும். இந்த பணிகள் எவ்வளவு விரைவில் முடிக்கப்படுமோ அதன்பிறகு குடமுழுக்கு நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிகள் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சையை ஆண்ட சோழபேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது.

    இந்த சிலையில் கோடை காலங்களில் முத்து, முத்தாக வியர்வை துளிகள் வெளியாகும் என்பது ஐதீகம். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்மனுக்கு பூக்களை தவிர வேறு எந்தவித அபிஷேகமும் செய்வதில்லை. இதனால் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றவை.

    அந்தவகையில், இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா ஆடி 3-வது வெள்ளிக்கிழமையான நேற்று நடந்தது. இதையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து அம்மன் உருவப்படங்களுடன் கூடிய ரதங்கள் புறப்பட்டு தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தன. அங்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அனைத்து ரதங்களும் புறப்பட்டன.

    பக்தர்கள் ஏராளமானோர் பூக்கூடைகளை கொடுத்தனர். இந்த பூக்கூடைகள் அனைத்தும் ரதத்தில் வாங்கி வைக்கப்பட்டன. பின்பு மேளதாளங்கள் முழங்க இந்த ரதங்கள் தஞ்சையில் உள்ள முக்கியவீதிகள் வழியாக சென்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. நேற்று காலை மாரியம்மன்கோவில் தேரோடும் முக்கிய வீதிகளில் அம்மன் ரதங்கள் வலம் வந்தன.

    ரதத்தின் முன்பு பெண்கள், சிறுமிகளின் கோலாட்டம் நடைபெற்றது. பின்பு புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 20-க்கும் மேற்பட்ட வகையான சுமார் 5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, அன்னதான அறக்கட்டளை, கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
    • அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடைபெறுகிறது

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மேலும் இங்குள்ள அம்மனுக்கு பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, மாரியம்மன் கோவில் அன்னதான அறக்கட்டளை, அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம வாசிகள் சார்பில் இந்த பூச்சொரிதல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூ ரதங்கள் மந்திர கோஷங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட பூ ரதங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று மாலை வந்தடைந்தது. இந்த ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் வாகனங்களில் அம்மன் படங்களும் வைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, காமராஜ் மார்க்கெட், கீழவீதி, கீழவாசல், வண்டிக்காரத்தெரு, தொம்பன்குடிசை வழியாக மாரியம்மன்கோவிலை இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்றடையும், பின்னர் அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடைபெறுகிறது

    பூ ரத ஊர்வலத்தை சுக்ர வார வழிபாட்டுக்குழு தலைவர் கேசவன் முன்னிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர், திருக்கயிலாய கந்த பரம்பரை சூரியனார் கோவில் சன்னிதானம் வாமதேவ சிவாக்கிரயோகிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுக்ர வார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, அன்னதான அறக்கட்டளை, ஆலய அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூ ரதங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மேலும் இங்குள்ள அம்மனுக்கு பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, மாரியம்மன் கோவில் அன்னதான அறக்கட்டளை, அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம வாசிகள் சார்பில் இந்த பூச்சொரிதல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூ ரதங்கள் மந்திர கோஷங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்படும் பூ ரதங்கள் தஞ்சை பெரிய கோவிலை வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை வந்தடையும். அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, காமராஜ் மார்க்கெட், கீழவீதி, கீழவாசல், வண்டிக்காரத்தெரு, தொம்பன்குடிசை வழியாக மாரியம்மன்கோவிலை 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை சென்றடையும், பின்னர் அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடைபெறும்.

    பூ ஊர்வல ரதத்தை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா ஆகியோர் முன்னிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர், திருக்கயிலாய கந்த பரம்பரை சூரியனார் கோவில் சன்னிதானம் வாமதேவ சிவாக்கிரயோகிகள் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். 5-ந்தேதி மாலை பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • கோவில் உள்புறத்தில் வெல்லக்குளம் உள்ளது.
    • கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், குளத்தில் புனிதநீராடிவிட்டு செல்வர்.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சை-நாகை சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தஞ்சையை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றி 8 திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கிழக்கு புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன்.

    இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பது தனிச்சிறப்பு. இதனால் கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. ஆகம விதிப்படி நாள்தோறும் 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மூலவராக விளங்கும் புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.

    அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் முக்கிய திருவிழா நடைபெறும். ஆடி மாதம் முத்துப்பல்லக்கு, பூச்சொரிதல், திருவிளக்கு பூஜைகள் ஆகியவையும், ஆவணி மாதம் ஆண்டு திருவிழாவும், கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், புரட்டாசி மாதம் தெப்ப உற்சவமும், நவராத்திரி விழாவும், மார்கழியில் லட்சத் திருவிளக்குவிழாவும், மாசி முதல் சித்திரை மாதம் வரை பால்குட விழாவும் நடைபெறும்.

    கோவில் உள்புறத்தில் வெல்லக்குளம் உள்ளது. உடம்பில் கட்டி, பரு ஏற்படுபவர்கள் அம்பாளை வேண்டிக் கொண்டு வெல்லம் வாங்கி வந்து செல்லக்குளத்தில் போடுவர். வெல்லம் தண்ணீரில் கரைவது போல முகப்பரு, கட்டிகளும் கரைந்துவிடும் என்பது நம்பிக்கை. அதேபோல் கோவிலுக்கு வெளியே தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், குளத்தில் புனிதநீராடிவிட்டு செல்வர். அப்படி இல்லையென்றால் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை தலையில் தெளித்து கொண்டு செல்வார்கள்.

    இந்த கோவிலுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமை மட்டுமின்றி ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது ஆடி மாதம் தொடங்கிவிட்டது. ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி பக்தர்கள் அதிகஅளவில் கோவிலுக்கு வருவார்கள். அப்படி வருபவர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராடவும், தண்ணீரை தலையில் தெளித்து கொள்ளவும் ஆசைப்படுவார்கள்.ஆனால் தற்போது தெப்பக்குளம் தண்ணீர் இன்றி காட்சி அளிக்கிறது. கோவில்களில் 80 சதவீதம் அளவுக்கு தூர்வாரும் பணி நிறைவடைந்து இருக்கிறது. மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடித்து, தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

    ×