என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் பூச்சொரிதல் விழா
- முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக அம்மனை வலம் வந்தனர்.
- இன்று தேவி கருமாரியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தி.புதுப்பட்டி சக்திபுரம் ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி பூக்குழி திருவிழாவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட 41 அடி நீள பூக்குழியில் ஸ்ரீஅம்மா இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 7 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.
காலை 11 மணிக்கு மேல் 41 அடி உயர மகாசக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக அம்மனை வலம் வந்தனர்.
திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) தேவி கருமாரியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து பக்தர்கள் கஞ்சிக் கலயம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், கஞ்சி கலயத்தை ஸ்ரீஅம்மா எடுத்து அன்னைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. இதையடுத்து பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாலிகயிறு வழங்கப்படுகிறது.
விழாவின் சிறப்பு அம்சமாக 3 நாட்களாக காலை முதல் இரவு வரை கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி பீட நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்