என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » plus 1 exam
நீங்கள் தேடியது "plus 1 exam"
பிளஸ்-1 பொதுத் தேர்வில் மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் 90.85 சதவிகித தேர்ச்சி பெற்று 21 வது இடத்தை பிடித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருவள்ளூர்:
பிளஸ்-1 பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 344 பள்ளிகளில் 42 ஆயிரத்து 349 பேர் தேர்வு எழுதினர். இதில் 38 ஆயிரத்து 473 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 17 ஆயிரத்து 219 மாணவர்களும்.21 ஆயிரத்து 254 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் 90.85 சதவிகித தேர்ச்சி பெற்று 21 வது இடத்தை பிடித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். பிளஸ்1 பொதுத் தேர்வு இந்த ஆண்டு முதல் தேர்வு என்பதால் அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பள்ளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் எ.சுந்தர வல்லி தெரிவித்தார்.
பிளஸ்-1 பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 344 பள்ளிகளில் 42 ஆயிரத்து 349 பேர் தேர்வு எழுதினர். இதில் 38 ஆயிரத்து 473 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 17 ஆயிரத்து 219 மாணவர்களும்.21 ஆயிரத்து 254 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 86.49 சதவீதமும், மாணவிகள் 94.71 சதவிகத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் 90.85 சதவிகித தேர்ச்சி பெற்று 21 வது இடத்தை பிடித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். பிளஸ்1 பொதுத் தேர்வு இந்த ஆண்டு முதல் தேர்வு என்பதால் அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பள்ளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் எ.சுந்தர வல்லி தெரிவித்தார்.
வைரஸ் காய்ச்சலால் பிளஸ்-1 தேர்வில் 3 பாடங்களில் தோல்வியடைந்த சென்னை மாணவியை மறுதேர்வு எழுத ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை:
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பாலபவன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-1 படித்த ஷாரோன் நிவேதிதா என்பவரின் தந்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது மகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் பிளஸ்-1 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் தோல்வியடைந்துவிட்டார். எனவே தோல்வியடைந்த பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத எனது மகளை அனுமதிப்பதுடன், அதே பள்ளியில் பிளஸ்-2 படிப்பை தொடரவும் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பள்ளி நிர்வாகம் தரப்பில், ‘சி.பி.எஸ்.இ. விதிமுறைகளின்படி 2 பாடங்களில் தோல்வி அடைந்தால் மட்டுமே மறுதேர்வு எழுத முடியும்’ என்றும், ‘காய்ச்சலால் தான் தோல்வியடைய நேரிட்டது’ என்று மாணவி தரப்பிலும் வாதிடப்பட்டது. நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அந்த மாணவி தோல்வியடைந்த பாடங்களுக்கு நடைபெறும் மறுதேர்வுகளில் எழுத அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பாலபவன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-1 படித்த ஷாரோன் நிவேதிதா என்பவரின் தந்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது மகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் பிளஸ்-1 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் தோல்வியடைந்துவிட்டார். எனவே தோல்வியடைந்த பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத எனது மகளை அனுமதிப்பதுடன், அதே பள்ளியில் பிளஸ்-2 படிப்பை தொடரவும் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பள்ளி நிர்வாகம் தரப்பில், ‘சி.பி.எஸ்.இ. விதிமுறைகளின்படி 2 பாடங்களில் தோல்வி அடைந்தால் மட்டுமே மறுதேர்வு எழுத முடியும்’ என்றும், ‘காய்ச்சலால் தான் தோல்வியடைய நேரிட்டது’ என்று மாணவி தரப்பிலும் வாதிடப்பட்டது. நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அந்த மாணவி தோல்வியடைந்த பாடங்களுக்கு நடைபெறும் மறுதேர்வுகளில் எழுத அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X