search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Photo Exhibition"

    • மானாமதுரை அருகே அரசுத்துறை புகைப்பட கண்காட்சி நடந்தது.
    • அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது? யாரை அணுகி பெறவேண்டும்? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், எம்.கரிசல்குளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடந்தது.

    இதில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன. அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது? யாரை அணுகி பெறவேண்டும்? என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

    • விழுப்புரம் மாவட்டத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
    • பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஓன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு முதல்மை-அச்சர் பொறுப்பேற்று, முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு, நடைமுறைப்படுத்திய திட்டங்களான ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல், நகரப் பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திட்டம், முதலமை ச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்து வமனையில் கொரோனா சிகிச்சை பெறும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து புகை ப்படங்கள் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெ ற்றிருந்தன.

    மேலும், தமிக முதல்-அமை ச்சரின் 1 லட்சம் விவசா யிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கொரோனா தடுப்பு ஆய்வுப்பணிகள், திருக்கோவில்களில் நிலையான மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4,000 மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வித்திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான திட்டங்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை அனுமந்தபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • விழுப்புரம் மாவட்டம் நெய்குப்பி ஊராட்சியில் அரசின் திட்டங்கள் குறித்து புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
    • தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை நெய்குப்பி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஓன்றி யம், நெய்குப்பி ஊராட்சி யில் தமிழக அரசின் சாத னைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

    புகைப்படக் கண்காட்சி யில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொறுப்பேற்று, முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்ப மிட்டு, நடைமுறைப்படுத்திய திட்டங்களான ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல், நகரப் பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திட்டம், முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பெறும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து புகைப் படங்கள் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகை யில் இடம்பெற்றிருந்தன.

    மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கொரோனா தடுப்பு ஆய்வுப் பணிகள், திருக்கோவில் களில் நிலையான மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச் சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர் களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4,000 மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம், உங்கள் தொகுதி யில் முதல்-அமைச்சர் திட்டம், மக்களை தேடி மருத்து வம், இல்லம் தேடிக் கல்வித்திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர் களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு முதல்வரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை நெய்குப்பி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

    ஊட்டியில் புகைப்பட கண்காட்சி தொடங்கியது. இதனை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
    ஊட்டி:

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜான் சல்லீவன் என்பவரால் கடந்த 1819-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. நீலகிரி அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததால், மாவட்டத்தில் வாழ்ந்த ஆதிவாசி மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டது. நீலகிரி கண்டுபிடிக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆவதை நினைவுகூரும் வகையில், ஊட்டி நகரின் பழைய புகைப்பட கண்காட்சி ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்றது. அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் கலந்துகொண்டு, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வரலாறு மற்றும் சுற்றுலா பாடப்பிரிவு எடுத்து படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நீலகிரி மாவட்டத்தின் வரலாறு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கி கூறினார். அப்போது, நீலகிரியை சுற்றுலா மாவட்டமாக மேலும் மேம்படுத்த மாணவ-மாணவிகள் தனியாக இணையதளம் உருவாக்கி, நீலகிரியின் முக்கிய இடங்கள், வரலாறுகள், வனவிலங்குகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அப்போது தான் சுற்றுலா கல்வி, வரலாறு பயிலும் மாணவர்கள் நீலகிரியை தேடி வருவார்கள். நீலகிரி மாவட்டத்தை கண்டுபிடித்த ஜான் சல்லீவனுக்கு ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள நகராட்சி பூங்காவிற்கு, நீலகிரியின் 200-வது ஆண்டு என்ற பெயரிட வேண்டும். இதன் மூலம் ஊட்டிக்கு வரும் வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலா பயணிகள் ஜான் சல்லீவன் குறித்து தெரிந்துகொள்ள முடியும் என்றார். கண்காட்சியில் ஊட்டி புனித ஸ்டீபன் ஆலயம், நகராட்சி மார்க்கெட், ஏரி, குதிரை பந்தய மைதானம், சேரிங்கிராஸ் மற்றும் இருளர், தோடர், பனியர் போன்ற ஆதிவாசி மக்கள், அவர்களது குடிசைகள், ஜான் சல்லீவன் உள்பட பல்வேறு பழமையான புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன. இதனை கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர். புகைப்பட கண்காட்சி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.
    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதனை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங்கரை), சி.வி.ராஜேந்திரன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த புகைப்பட கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த அரசு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் தொடர்பான புகைப்படங்கள், கிருஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் தொடர்பான புகைப்படங்கள், அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் என மொத்தம் 80-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

    அதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், முன்னாள் பால்வள தலைவர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து, முன்னாள் நகராட்சி துணை தலைவர் வெங்கடாசலம், சூளகிரி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஹேம்நாத், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மனோஜ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தர்மபுரி டவுன் பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தர்மபுரி டவுன் பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் மக்கள் நலத்திட்டங்கள், விலையில்லா திட்டங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள், அரசு விழாக்களின் புகைப்படங்கள், தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்படங்கள், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்ற விழாக்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

    கண்காட்சியை ஏராளமான பயணிகள் மற்றும் பஸ் நிலையத்திற்கு வந்து சென்ற பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சதீஷ், ஜனார்த்தனன் மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர். 
    ×