search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில்  அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
    X

    புகைப்பட கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்.

    விழுப்புரம் மாவட்டத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

    • விழுப்புரம் மாவட்டத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
    • பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஓன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு முதல்மை-அச்சர் பொறுப்பேற்று, முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு, நடைமுறைப்படுத்திய திட்டங்களான ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல், நகரப் பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திட்டம், முதலமை ச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்து வமனையில் கொரோனா சிகிச்சை பெறும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து புகை ப்படங்கள் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெ ற்றிருந்தன.

    மேலும், தமிக முதல்-அமை ச்சரின் 1 லட்சம் விவசா யிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கொரோனா தடுப்பு ஆய்வுப்பணிகள், திருக்கோவில்களில் நிலையான மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4,000 மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வித்திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான திட்டங்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை அனுமந்தபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    Next Story
    ×