search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Photo Exhibition"

    • பள்ளிக்கல்வி துறை சார்பில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • வில்லுப்பாட்டு கலைஞர்களுக்கு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் கேடயம் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி இ.சி.ஈ ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் , பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ராமலிங்கம் நடுநிலைப் பள்ளியின் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் யு.எஸ்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் தனிநபர் நடனம், ஜோடி நடனம், டேய் ப்ளூ, மைம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து பண்பொழி மாரியம்மாளின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பங்கேற்ற மாணவ -மாணவிகளுக்கும், வில்லுப்பாட்டு கலைஞர்களுக்கும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.
    • 25 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட வருகை தந்தனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலையை அடுத்துள்ள மேனேந்தல் மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால பொதுவாழ்வு மற்றும் அரசியல் பயணம் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

    இதில் 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை காண வரும் மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கும் வகையில் அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது.

    மிசா காலத்தில் மு.க. ஸ்டாலின் சிறையில் பட்ட துன்பங்களை காணும் வகையில் சிறைச்சா லைக்குள் அவரை போலீ சார் தாக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்.

    மாணவ- மாணவிகள் மற்றும் குழந்தைகள் கண்காட்சியை பார்வையிட்ட பிறகு பொழுது போக்கு வதற்காக மைதானத்தில் ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவு ஸ்டால்கள், குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    கண்காட்சியை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், இந்த புகைப்பட கண்காட்சி வருங்கால இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும்போது வாரிசு அரசியலுக்கு இடமில்லை. உழைப்பால் உயர்ந்தவர் முதல்வர் என்பது தெரிகிறது என்றார்.

    அமைச்சர் மூர்த்தி கூறுகையில், 10 நாட்கள் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட உள்ளனர். இன்று மாலை 5 மணி அளவில் நடிகர் வடிவேல் பார்வையிட உள்ளார். 25-ந் தேதி மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை காண வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி மதுரை வடக்கு, மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடை பெறுகிறது என்றார்.

    திறப்பு விழாவில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி எம்.எல்.ஏ. மணிமாறன், எம்.எல்.ஏ. க்கள் சோழவந்தான் வெங்கடேசன், புதூர் பூமிநாதன், முன்னாள் அமைச்சர் பொன்.முத்து ராமலிங்கம், உயர்மட்ட செயல் திட்ட குழு உறுப்பி னர் குழந்தைவேல்,மாநில தீர்மானக் குழு உறுப்பினர் அக்ரி.கணேசன்.

    பொதுக்குழு உறுப்பினர் உசிலை சரவண குமார், மகிழன், அவைத் தலைவர்கள் பாலசுப்ர மணியன், ஒச்சுபாலு, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி, வக்கீல் கலாநிதி, இளைஞரணி மாநில இணைச்செயலாளர் ஜி.பி. ராஜா, மாணவரணி அமைப்பாளர் மருது பாண்டி.

    பகுதி செயலாளர்கள் சசிகுமார், ஈசுவரன், கிருஷ்ணபாண்டி, ஒன்றிய சேர்மன் வீரராகவன், வேட்டையன், இளைஞரணி மூவேந்திரன், வைகை மருது, மதி வெங்கட், அரசு வக்கீல் ஸ்ரீதர், பேரூர் தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ரேணுகா ஈசுவரி, மண்டல தலைவர்கள் வாசுகி சசிகுமார், முகேஷ் சர்மா, கவுன்சிலர்கள் வக்கீல் குட்டி என்ற ராஜரத்தினம், கருப்புசாமி, ரோகிணி பொம்மதேவன் மற்றும் அமெரிக்கன் கல்லூரி, யாதவா் கல்லூரி, லேடி டோக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட வருகை தந்தனர்.

    • மதுரையில் வருகிற 19-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சி நடக்கிறது.
    • இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை ஊமச்சிகுளத்தில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    வருகிற 19-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி மதுரை ஊமச்சிகுளம் மேனேந்தலில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த நெடிய பயணம் குறித்த புகைப்படங்களும், மிசா போன்ற அடக்குமுறை காலத்தில் அவர் பங்கேற்ற போராட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெறுகின்றன.

    மேலும் மதுரையில் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை காண பள்ளி மாணவர்கள் வருகை தரும் போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த புகைப்பட கண்காட்சி பிற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக இருக்கின்ற வகையில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், தலைமை தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் குழந்தைவேல், தீர்மான குழு செயலாளர் அக்ரி.கணேசன், அவைத்த லைவர்கள் ஒச்சுபாலு, பாலசுப்பிரமணியன், பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாநில தலைமை குழு உறுப்பி னர்கள் தனசெல்வம், ஆறு முகம், மாமன்ற குழு தலை வர் ஜெயராமன், ஒன்றிய சேர்மன்கள் வீரராகவன், மணிமேகலை, வேட்டையன், வக்கீல் கலாநிதி, இளைஞர் அணி ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் மருதுபா ண்டி, சசிகுமார், ஈஸ்வ ரன், கிருஷ்ணா பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வம், பேரூர் தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ஜெயராமன், ரேணுகா ஈஸ்வரி, கவுன்சிலர்கள் காளிதாஸ், ரோகிணி பொம்மதேவன், இளைஞர் அணி மூவேந்திரன், மதி வெங்கட், சிங்கை சே.ம.பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழியக்கம் - விஐடி பல்கலைக்கழகம் சார்பில் நடக்கிறது
    • வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைக்கிறார்

    வேலூர்:

    தமிழியக்கம் - விஐடி பல்கலைக்கழகம் இணைந்து பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் புகைப்படக்கண்காட்சி வேலூர் வி.ஐ.டி. அண்ணா அரங்கில் நாளை மறுதினம் சனிக்கிழமை நடக்கிறது. வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைக்கிறார்.

    11-ந் தேதி மற்றும் 12-ந் தேதி ஆகிய 2 நாட்களும் காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியினை பார்வையிடலாம். அன்பழகனின் நூற்றாண்டு விழாவை நினைவு கூறும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், பேராசிரியர் அன்பழகனின் இளமைக்கால புகைப்படங்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனான புகைப்படங்கள், பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உள்ள புகைப்படங்கள், பேராசிரியர் அன்பழகன் அமைச்சராக பதவியேற்ற நிகழ்வுகள், பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் பேராசிரியரின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

    பேராசிரியரின் வாழ்க்கை முழுவதும் மேற்கொண்ட லட்சியப் பயணத்தின் பதிவுகளாகவும் 75 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாறுகளை காட்சிப்படுத்தும் விதமாகவும் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

    11-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு விழாவிற்கு விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தலைமை தாங்குகிறார், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருத்தினராக பங்கேற்கிறார்.

    கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி முதன்மை விருத்தினராக பங்கேற்கிறார். மாநிலங்களவை உறுப்பினரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர், வைகோ விழாப் பேருரையாற்றுகிறார்.

    வாழ்த்துரை—சட்டமன்ற உறுப்பினர்கள் அ. பெ. நந்தகுமார் (அணைக்கட்டு), ப. கார்த்திகேயன் (வேலூர்), அ. வெற்றியழகன் (வில்லிவாக்கம்), மேயர் சுஜாதா, ஜெயரஞ்சன் ஆகியோர் வாழ்த்தி ேபசுகின்றனர்.

    • நாம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரா்கள் ஏராளமாக உள்ளனா்.
    • 100 சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

    திருப்பூர் :

    மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சாா்பில் திருப்பூரில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் தொடா்பான புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சி தொடங்கியது. திருப்பூா், கருவம்பாளையத்தில் உள்ள ஏ வி எஸ். மஹாலில் நடைபெற்ற இக்கண்காட்சிதொடக்க விழாவில், தருமபுரி மத்திய தகவல் தொடா்பகத்தின் கள விளம்பர அலுவலா் பிபின் எஸ்.நாத் வரவேற்புரையாற்றினாா்.

    சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:- தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரா்கள் ஏராளமாக உள்ளனா்.

    நமது நாட்டுக்காக போராடியவா்கள் பலரை நாம் அறியாமல் இருந்தோம். தியாகிகளின் வரலாறு மற்றும் தியாகங்கள் குறித்து நாம் அறிந்து கொள்ள இத்தகைய கண்காட்சிகள் அவசியமாகும். இந்த கண்காட்சி மாணவா்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

    இதைத்தொடா்ந்து பள்ளி, கல்லூரி அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற 14 மாணவா்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மத்திய அரசின் நலத்திட்டங்களின்கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ. 4.50 லட்சம் வழங்கப்பட்டது. 3 மாணவா்களின் கல்விக் கடனுக்காக ரூ.65.07 லட்சம் வழங்கப்பட்டது.

    இந்தக் கண்காட்சியில் திருப்பூா் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த சுமாா் 100 சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்திய அஞ்சல் துறை, கனரா வங்கியின் சுயவேலைவாய்ப்பு நிறுவனம், காச நோய் தடுப்பு, பொது சுகாதாரத் துறை சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி 5-ந் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரையில் நடக்கிறது. பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இலவசமாகப் பாா்வையிடலாம்.

    கண்காட்சி தொடக்க விழாவில் திருப்பூா் மாநகராட்சி துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலெக்ஸாண்டா், அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா், மத்திய மக்கள் தொடா்பக தொழில்நுட்ப உதவியாளா் சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு
    • 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து சென்றனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக, வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி தமிழ்நாடு என்ற அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி,

    உணவுத் திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அதன்நிறைவு விழா நேற்று நடந்தது. திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி ஆகியோர், சிறப்பாக அரங்குகள் அமைத்த துறைகளுக்கு கேடயங்களும், கலை பண்பாட்டுத் துறை சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்திய கலைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.

    அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

    கண்காட்சியை கடந்த 10 நாட்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திமக்கள் தொடர்பு அலுவலர் மோகன், உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் ஜனார்த்தனன் செய்திருந்தனர்.

    • சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினர்களாக வால்டைர், பேராசிரியர் ரகுரதி பாண்டியன்,சுகுபாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நமது நாட்டின் விடுதலைக்கு ஆற்றிய பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சி, விளக்கக் கூட்டம் நடைபெற்றது. உடற்கல்வி இயக்குனர் கணேசன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமை தாங்கி பேசினார்.

    சிறப்பு விருந்தினர்களாக வால்டைர், கலசலிங்கம் கல்லூரி பேராசிரியர் ரகுரதி பாண்டியன் மற்றும் சுகுபாலா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கணேசன், குருநாதன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாணவர்கள் திலிப் குமார், இளங்கோ சிங், மாதேஷ், தினேஷ், மாடசாமி, சூர்யா, ஜாஹிர் கான், சுந்தர், சுடர்மணி, சூர்யா, முகமது புர்கான் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் புஷ்பராணி, குமாரி செல்வி, சிவக்குமார், மகேஷ் ராஜா உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கணினி அறிவியல் துறைத் தலைவர் குருநாதன் நன்றி கூறினார்.

    • சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது.
    • இந்த கண்காட்சியை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பார்வையிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் சார்பில் சுதந்திர தின அமிர்த பெருவிழா 3 நாட்கள் நடந்து வருகிறது. இதில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சியில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

    சிவகங்கையில் விடுபட்ட, அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் சிலரின் புகைப்படங்களை சேர்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் எம்.எல்.ஏ. வழங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் செல்வமணி, கோபி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
    • இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், குன்னமலை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

    இப்புகைப்படக் கண்காட்சியில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

    இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.

    • சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி புகைப்பட கண்காட்சி நடைபெற்றது
    • நடிகை ஹேமமாலினி எம்.பி. தொடங்கிவைத்தார்

    திருச்சி

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளி–நாட்டு விமான சேவை–கள் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களை அதிக அள–விலான பயணிகள் பயன்ப–டுத்தி வருகிறார்கள்.

    இங்கு இந்தியாவின் பெரு–மையை பறைசாற்றும் வகையில் பல்வேறு விதமான புகைப்படம் மற்றும் வீடியோ கண்காட்சிகளை அமைத்து பொது மக்களுக்கு இந்தி–யாவின் பெருமை குறித்து அறியும் வகையில் விமான நிலைய ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

    அந்த வகையில் இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டே–லின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை திருச்சி–யில் இருந்து விமான மூலம் சென்னை செல்ல இருந்த மாநிலங்களவை உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான ஹேமமாலினி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகள் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, துணைப் பொது மேலாளர் கோபால–கிருஷ்ணன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரிசிங் நயல், முனைய மேலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெருமையை அறியும் வகையில் புகைப்படங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பய–ணிகள் அனைவரும் பார்த்து ரசித்தனர்.

    • பிரதம மந்திரி முத்ரா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
    • இந்த வரலாறை பார்த்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரி மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் இன்று அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

    இன்று முதல் மூன்று நாட்கள் வரை நடைபெறும் இந்த கண்காட்சியை கல்யாணசுந்தரம் எம்.பி, துரை சந்திரசேகரன் எம். எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருச்சி மத்திய மக்கள் தொடர்பகம் கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் வரவேற்றார். இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வாழ்த்துரை வழங்கினார்.

    இந்த கண்காட்சியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்து சுதந்திரப் போராட்டப் போராட்டத்தில் பங்குபெற்ற ஏ.வி. ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி, வாணியம்மாள், சொர்ணம்மாள், கணபதி, வாட்டாகுடி இரணியன் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறு குறித்து அவர்களின் புகைப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது.

    இதேபோல் பிரதம மந்திரி முத்ரா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

    இந்த வரலாறை பார்த்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரி மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டனர். மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொண்டனர். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் சத்தியா, முன்னாள் கவுன்சிலர் வீரையன், ஒன்றிய செயலாளர் முரசொலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய மக்கள் தொடர்பகம் ஆனந்த பிரபு நன்றி கூறினார்.

    • திருப்புல்லாணி அரசு பள்ளியில் புகைப்பட கண்காட்சி-கருத்தரங்கம் நடந்தது.
    • தலைமையாசிரியர் சண்முகநாதன் தலைமை தாங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் கோவில்கள் அறிவோம் என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

    தலைமையாசிரியர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். 8-ம் வகுப்பு மாணவர் முகம்மது சகாபுதீன் வரவேற்றார். ஓவிய ஆசிரியர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கோவில்களின் சிறப்புகளை அறிந்து மாணவர்கள் அவற்றை பாதுகாக்கவேண்டும் என மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுரு கருத்தரங்க அறிமுக உரையில் கேட்டுக் கொண்டார்.

    கருத்தரங்கத்தில் ஆலயம் பற்றி பைரோஸ், குடைவரைக் கோவில்கள் பற்றி திவாகரன், கற்றளிகள் பற்றி ஹரிதா ஜீவா, பள்ளிப்படைக் கோவில்கள் பற்றி கனிஷ்கா, மாடக்கோவில்கள் பற்றி பூஜாஸ்ரீ, கோவில் காப்புக் காடுகள் பற்றி மகாஸ்ரீ ஆகியோர் பேசினர்.

    6-ம் வகுப்பு மாணவி சுபா நன்றி கூறினார். 8-ம் வகுப்பு மாணவிகள் தீபிகாஸ்ரீ, வித்யா தொகுத்து வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் முகம்மதுகாமில், செல்வக்கண்ணன், சாம்ராஜ், யோகேஷ்வரன், முகேஷ் பிரியன் ஆகியோர் செய்தனர்.

    ×