search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Philippines"

    பிலிப்பைன்சில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquake
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், பிலிப்பைன்சில் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #PhilippinesEarthquake
    பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியாகினர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquake
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
     
    ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில், பூமிக்கடியில் 59 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. இதனால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.



    நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அதன்பின்னர் சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

    இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பைகால் பகுதியில் 16 பேரும், கிழக்கு விசாயாஸ் பகுதியில் 6 பேரும் என மொத்தம் 22 பேர் பலியாகி உள்ளனர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquake
    கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்காக இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிய 15 ஆயிரம் இந்தியர்கள் கனடா நாட்டு குடியுரிமை பெற்று இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. #Canadiancitizenship
    மும்பை:

    கனடா நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக கனடா நாட்டு தூதரகத்தின் மூலம் விண்ணப்பித்து வருகிறார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக 3 விதமான தேர்வுகள் நடத்திய பின்பே அனுமதி வழங்கப்படுகிறது.

    இதில் தனியார் நிறுவனங்கள் மூலம் விண்ணப்பித்து தேர்வு எழுதுகிறார்கள். ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் இதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகிறார்கள்.

    இதற்காக முதலில் நிரந்தர குடியுரிமை (பி.ஆர்) பெற வேண்டும். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிய 15 ஆயிரம் இந்தியர்கள் கனடா நாட்டு குடியுரிமை பெற்று இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது கடந்த 2017-ம் ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம் ஆகும்.

    கனடா குடியுரிமை பெறுவதில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் தான் முதலிடத்தில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தை இந்தியர்கள் பிடித்துள்ளனர்.

    இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டினர் 15,600 பேருக்கு கனடா குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. #Canadiancitizenship
    பாங்காக்கில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். #MissUniverse #CatrionaElisaGray
    பாங்காக்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடந்தது. அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 94 பெண்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று இறுதி சுற்று போட்டி நடைபெற்றது. அதில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவருக்கு தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் அழகி டெமி லெய்க் நீல்- பீட்டர்ஸ் கிரீடம் அணிவித்தார்.

    தென் ஆப்பரிக்காவை சேர்ந்த டாமரின் கிரீன், வெனிசுலாவை சேர்ந்த ஸ்தெபானி குட்டரெஸ் ஆகியோர் 2-வது இடங்களை பிடித்தனர்.

    இந்த போட்டியில் இந்தியா சார்பில் நேகல் சுதாசமா கலந்து கொண்டார். அவரால் முதல் 20 இடங்களுக்குள் கூட வரமுடியவில்லை.  #MissUniverse #CatrionaElisaGray

    பிலிப்பைன்ஸ் நாட்டில் செபு தீவில் பெய்த பலத்த மழையினால் நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டத்தில் 4 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Philippines #Landslide
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில், இந்த ஆண்டின் மிக வலுவான புயல் என்று சொல்லப்படக்கூடிய ‘மங்குட்’ புயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலத்த பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது. அதன் பாதிப்பில் இருந்து பிலிப்பைன்ஸ் இன்னும் மீளவில்லை.

    இந்த நிலையில் அங்குள்ள செபு தீவில் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் தரை மட்டமாகின.



    இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

    இதுபற்றி அந்தப் பிராந்திய போலீஸ் அதிகாரி டிபோல்டு சினாஸ், நிருபர்களிடம் பேசும்போது, “நிலச்சரிவு காரணமாக, சுண்ணாம்பு குவாரி பகுதியில் அமைந்திருந்த 20 முதல் 24 வீடுகள் வரை மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டன. வீடுகளில் இருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்” என்றார்.

    நாகா நகரத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களின் அழுகையும், ஓலமும் தங்களுக்கு கேட்டதாக மீட்பு படையினர் கூறினர்.

    நாகா நகர கவுன்சிலர் கார்மேலிங் குரூஸ், தனியார் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ நிலச்சரிவில் 50 முதல் 80 பேர் வரை சிக்கி இருக்கக்கூடும் என கருதுகிறோம். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது” என்று கூறினார்.

    நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பால் நாகா நகரம் சோகத்தில் மூழ்கி உள்ளது. #Philippines #Landslide  
    பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் கடுமையாக தாக்கியதில் இரண்டு மீட்புப்படை வீரர்கள் உள்பட 64 பேர் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Mangkhut
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது.

    மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் அந்நாட்டின் பாகுபோ நகரம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.  மீட்பு பணிகளை பிலிப்பைன்ஸ் அரசு முடுக்கிவிட்டுள்ளது.

    அதில் 2 மீட்புப்படை வீரர்கள் பலியாகினர். இவர்கள் தவிர பலர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

    புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Mangkhut
    பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் உருவான மங்குட் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டு வலுவாக ஹாங்காங் மற்றும் தெற்கு சீன பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. #Manghkut #TyphoonMangkhut
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது.

    இதனால் மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. மழை கொட்டியதால் ஆங்காங்கே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. பலத்த காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார வினியோகம் தடைபட்டது. வீடுகள் இருளில் மூழ்கின. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    மீட்பு பணிகளை பிலிப்பைன்ஸ் அரசு முடுக்கிவிட்டுள்ளது. மலைப்பகுதி களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாகுபோ நகரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதில் 2 மீட்புப்படை வீரர்கள் பலியாகினர். இவர்கள் தவிர பலர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

    மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால் சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. ‘மங்குட்’ புயல் தாக்குதலில் ககாயன் மாகாண தலைநகர் துகுயகராபோ நகரில் உள்ள அனைத்து கட்டிடங்களும் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.

    மங்குட் 5-ம்பிரிவு புயல் என வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ‘ஹையான்’ புயல் போன்று அதிக திறன் கொண்டது. இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய புயல்களில் இது சக்தி வாய்ந்தது.

    பிலிப்பைன்ஸ் கடற்பரப்பை கடந்து வலுவாக மங்குட் புயல் தெற்கு சீன பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. 
    பிலிப்பைன்சில் மங்குட் புயல் தாக்கியதையடுத்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. #Mangkhut
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ என்ற புயல் இன்று கடுமையாக தாக்கியது. இது இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த புயல் என கருதப்படுகிறது. புயல் காரணமாக பிலிப்பைன்சின் வடக்கு கடற்கரை பகுதியில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.  மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. மின்சாரம் தடைபட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    காற்று கடுமையாக வீசுவதால் சேதம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ‘மங்குட்’ புயல் 4-வது ரகம் என கணிக்கப்பட்டுள்ளது. இது ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்களில் கடும் சேதத்தை விளைவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் ‘கையான்’ என்ற சூப்பர் புயல் பிலிப்பைன்சை தாக்கியது. அதில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.


    இதேபோன்று இந்த ‘மங்குட்’ புயலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இப்புயலினால் 40 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இங்கு ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

    ‘மங்குட்’ புயல் பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது. அது இன்று மாலை ஹாங்காங் பகுதியில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Mangkhut
    சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புடைய 60 சொகுசு கார் மற்றும் பைக்குகள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறி, புல்டோசர் மூலம் அவற்றை நொறுக்கும் பணியை பிலிப்பைன்ஸ் அரசு மேற்கொண்டது.
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் அதிபராக உள்ள ரோட்ரிகோ டுடெர்டே பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். போதை கடத்தலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட, ஐநா சபை கண்டனம் தெரிவித்தற்கு. ஐ.நா சபை தலைவரின் மண்டையை உடைக்க வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

    இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கேகேயான் மாகாணத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த வாகனங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டன.

    லம்போர்கினி, போர்ஸ்ச், மெர்ர்சீடெஸ் பென்ஸ், ஹார்லே டேவிட்சன் ஆகிய பிரசித்தி பெற்ற கம்பெனிகளின் வாகனங்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டது. பொதுவெளியில் வரிசையாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது புல்டோசர் ஏறி நசுக்கியது. 

    இந்த காட்சியை அதிபர் டுடெர்டே ஹாயாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. (video courtesy Mail Online)


    உள் நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்கும் என ஐ.நா. அதிகாரிக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே மிரட்டல் விடுத்துள்ளார். #Philippines #Duterte
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே, சர்வாதிகார போக்கு உடையவர். தன்னை எதிர்க்க கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பொதுவெளியில் நேரடியாக மிரட்டல் விடுக்கும் மனோபாவம் கொண்டவர்.

    அங்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த மரியா லூர்தஸ் செரினோ, அதிபர் ரோட்ரிகோ துதர்தேவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து அவருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தார்.

    இதனால் அவரை தன்னுடைய எதிரி என்று கூறிய ரோட்ரிகோ துதர்தே, அவரை தலைமை நீதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஓட்டெடுப்பு நடத்தி மரியா லூர்தஸ் செரினோவை பதவி நீக்கம் செய்தனர். இது குறித்து வேதனை தெரிவித்த பிலிப்பைன்சுக்கான ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் மூத்த அதிகாரியான கார்சி-சயான் “ரோட்ரிகோ துதர்தே, மரியா லூர்தஸ் செரினோவுக்கு எதிராக பொதுவெளியில் மிரட்டல்கள் விடுத்ததே, அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம்” என குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் ரோட்ரிகோ துதர்தே, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது, தன் மீது கார்சி-சயான் முன்வைத்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், “அவரிடம் (கார்சி-சயான்) சொல்லுங்கள், என் நாட்டின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று, இல்லையென்றால் அவர் நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்கும்” என கூறினார்.

    மேலும், “அவர் ஒன்றும் சிறப்பான நபர் இல்லை. அவருடைய பதவியை நான் அங்கீகரிக்கவில்லை” என்றும் தெரிவித்தார்.   #Philippines #Duterte #tamilnews 
    தென் சீனக்கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சோதனை செய்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக தேவையான தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிலிப்பைன்சிஸ் தெரிவித்துள்ளது.
    மணிலா:

    சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தங்களுக்குரியது என உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது.

    அதே சமயம் தென் சீனக்கடல் பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக உரிமை கோரும் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் சீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘எச்-6கே’ ரக குண்டு வீச்சு விமானம் உள்பட பல்வேறு போர் விமானங்களை தென் சீனக்கடல் பகுதியில் தரை இறக்கி சோதனையில் ஈடுபட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆழ்ந்த கவலை தெரிவித்து உள்ள பிலிப்பைன்ஸ், இதற்காக சீனா மீது தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது. பிலிப்பைன்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்சின் நிலைப்பட்டை உறுதி செய்யும் விதமாக சீனாவுக்கு எதிராக தேவையான தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், நாட்டின் இறையாண்மைக்கு சொந்தமான பிரதேசங்கள் மற்றும் பகுதிகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பிலிப்பைன்ஸ் பாதுகாக்கும் என்பதை உறுதிபட தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 
    ×