search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "performance"

    • சேலம் மாவட்டம் ஆத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு 4 உலக சாதனை படைத்த கலை அருவி நாட்டிய பள்ளி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு 4 உலக சாதனை படைத்த கலை அருவி நாட்டிய பள்ளி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெட் கிராஸ் சங்க தலைவர் ஜோ கலைஞரின் நாட்டிய பள்ளி ஆசிரியை கிளாடி ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியை ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா மணிகண்டன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் சத்திய பிரியா, ரெட்கிராஸ் அபி, கவிஞர் சரண், சுகுமார், வணிகர் சங்க கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி குழந்தைகள் பாரதியின் பாடல்களுக்கு நாட்டியம் ஆடி அனனவரயும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். இதில் 100-க்கனக்கான மாணவிகள் பங்கேற்றனர்.

    • சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை சுற்றுலா பிரச்சார ஊர்தியை மாநகராட்சி மேயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 100 மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிப் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற தூய்மை சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு முதல் நிகழ்ச்சியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைக்கான உறுதிமொழி கலெக்டர் கார்மேகம் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை சுற்றுலா பிரச்சார ஊர்தியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் , துணை மேயர் சாரதா தேவி, மண்டல க்குழுத்தலைவர்கள் எஸ்.டி. கலையமுதன், அசோகன், மாநகர பொறியாளர் ரவி, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும், மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோகுல்நாத் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 100 மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து தூய்மை சுற்றுலா மேற்கொள்ளும் வகையில் 4 மண்டலங்களுக்கு தனிதனியாக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் 25 மாணவ- மாணவியர்களை கலந்து கொள்ள செய்து, குப்பைகளை பிரிக்கும் செயல்முறை பணிகளையும், வீடு வீடாக பிரித்த நிலையில் குப்பைகளை பெறும் பணிகளையும், நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று நேரடியாக மாணவ- மாணவியர்களுக்கு தூய்மை குறித்தும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரிப்பது குறித்தும், குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் முறைக்குறித்தும் நேரடியாக எடுத்துரைக்கப்பட்டது.

    இதையடுத்து அஸ்தம்பட்டி மண்டலம் சங்கர் நகர் பகுதியில் வீடு வீடாக பிரித்த நிலையில் குப்பைகளை பார்வையிடும் நிகழ்ச்சி, காக்காயன்காடு நுண் உயிரி உரம் தயாரிக்கும் நிலையம் பார்வையிடும் நிகழ்ச்சியில் மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 25 மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    மாணவர்களுக்கு ஆசிரியர் மதிப்பெண் வழங்குவது போல், மோடி ஆட்சியில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு மதிப்பெண் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் மார்க் போட்டு இருக்கிறார். #RahulGandhi #Modi #ReportCard
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி 4 ஆண்டுகளை நிறைவு செய்ததை, அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

    இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி ஆட்சியை விமர்சித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். மாணவர்களுக்கு ஆசிரியர் மதிப்பெண் வழங்குவது போல், மோடி ஆட்சியில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு மதிப்பெண் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் மார்க் போட்டு இருக்கிறார்.



    விலைவாசியை கட்டுப்படுத்துதல், வேளாண்மை, வெளிநாட்டு கொள்கை உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டதை குறிக்கும் வகையில் அந்த துறைகளுக்காக மோடிக்கு ‘எப்‘ கிரேடு வழங்கி இருக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தும் வகையிலான கோஷங்களை முன்வைப்பதில் மோடி சிறந்து விளங்குவதாக கூறி அதை கேலி செய்யும் வகையில், அதற்காக அவருக்கு ராகுல் காந்தி ‘ஏ பிளஸ்’ கிரேடு வழங்கி இருக்கிறார்.  #RahulGandhi #Modi #ReportCard
    ×