search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரதநாட்டிய"

    • சேலம் மாவட்டம் ஆத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு 4 உலக சாதனை படைத்த கலை அருவி நாட்டிய பள்ளி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு 4 உலக சாதனை படைத்த கலை அருவி நாட்டிய பள்ளி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெட் கிராஸ் சங்க தலைவர் ஜோ கலைஞரின் நாட்டிய பள்ளி ஆசிரியை கிளாடி ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியை ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா மணிகண்டன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் சத்திய பிரியா, ரெட்கிராஸ் அபி, கவிஞர் சரண், சுகுமார், வணிகர் சங்க கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி குழந்தைகள் பாரதியின் பாடல்களுக்கு நாட்டியம் ஆடி அனனவரயும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். இதில் 100-க்கனக்கான மாணவிகள் பங்கேற்றனர்.

    வாழப்பாடியில் பரதநாட்டிய அரங்கேற்ற கலை விழா நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோவில் தேரோட்டத்தையொட்டி, லதா நாட்டியாலயா இசைப்பள்ளி சார்பில், வாழப்பாடியில் முதன்முறையாக பரதநாட்டியம் மற்றும் குரலிசை, இசைக்கருவிகள் அரங்கேற்ற விழா நடைபெற்றது.

    விழாவிற்கு, பரதநாட்டிய இசைப்பள்ளி ஆசிரியை லதா வெங்கடேஷ் வரவேற்றார். வாழப்பாடி வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி. சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.

    வாழப்பாடி இன்ஸ்பெக்டர்கள் உமாசங்கர், தனலட்சுமி, இலக்கிய பேரவை செயலர் சிவ.எம்கோ, அரசு மருத்துவர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில், பரதநாட்டியம், குரலிசை, இசைக்கருவிகளை வாசித்து, குழந்தைகள் அரங்கேற்றம் செய்தனர்.

    முறையாக பயிற்சி பெற்று நேர்த்தியாக அரங்கேற்றம் செய்த குழந்தைகளுக்கு, சென்றாய பெருமாள் கோவில் நிர்வாகிகள் ராஜேந்திரன், வெங்கடாசலம், தாண்டவராயன், கலியமூர்த்தி மற்றும் ஆசிரியர் சீனிவாசன், மா. கணேசன், கடலூர் மாவட்ட ஆரிய வைசிய மகாசபை நிர்வாகி வினோத்குமார், தனுஷா ஆகியோர், வளர் கலைமணி விருது மற்றும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். முன்னதாக வாழப்பாடி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சலங்கை பூஜை நடைபெற்றது.

    இவ்விழாவில், காங்கிரஸ் பிரமுகர் அத்தனூர்பட்டி ராஜா, பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமாரி சரவணன், சிங்கிபுரம் விவசாயக் கூட்டமைப்பு தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை லதா நாட்டியாலயா இசைப்பள்ளி பயிற்றுநர் லதா வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    ×