என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "people protest"
- குழந்தைகள் மற்றும் பெண்கள் வந்து செல்லும் இடத்தில் மதுபானக்கடை வைத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்
- மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-செந்துறை சாலையில் பெட்ரோல் பங்க் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் தனியார் மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் வந்து செல்லும் இடத்தில் மதுபானக்கடை வைத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்று அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே செட்டியார்குளம், அம்மன்குளம், பொதுமக்கள் சார்பில் அப்பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மதுபானக்கடை அமைக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த நேரிடும் என்றும் மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
- பழனி நகராட்சி குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
- எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழனி நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டனர்.
பழனி:
பழனி நகராட்சியில் 1வது வார்டுக்கு உட்பட்ட பெரியப்பா நகர் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது போலீஸ் பாதுகாப்புடன் செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதைய டுத்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழனி நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்ட னர்.
அப்போது பழனி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் மீட்டிங்கில் இருப்பதாகவும், பிறகு வருமாறும் தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து அதிகாரிகளை சந்தித்து விட்டுதான் செல்வோம் என்று கூறி பழனி நகராட்சி அலுவலக வாயிலிலேயே காத்திருந்த னர்.
நீண்ட நேரம் ஆகியும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை சந்திக்க மறுத்ததாக கூறி ஆவேச மடைந்த பொதுமக்கள், நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தெரிவித்ததாவது:-
பழனி பெரியப்பா நகரில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதியில் தற்போது 5ஜி அலைக்கற்றைக்கான கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. குடியிரு ப்புகள் மட்டுமின்றி மருத்து வமனை, அங்கன்வாடி உள்ளிட்டவை உள்ள பகுதியில் அமைக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ள நிலையில் அதை மீறி டவர் அமைக்கப்படுவதாகவும், இதனால் ஏற்படும் கதீர்வீச்சு காரணமாக கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்பட பலரும் பாதிக்கப்படுவர்.
மேலும் தற்போது அமை க்கப்படும் கோபுரமானது முதல் முப்பது அடி உயரத்திற்கு மட்டுமே அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து ஆரம்பம் முதலே பலமுறை தங்களது எதிர்ப்பை தெரிவித்தும், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே செல்போன் டவர் அமை க்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்ததாக கூறினர்.
தங்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் செய்தால் விரைவில் கடுமையான போராட்டத்தில் ஈடு படப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளை சந்திக்க வைப்பதாக கூறியதை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
- பொங்கல் விழா கொண்டா டிய போது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
- சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் வைகை அணை போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே வைகைஅணை முதலக்க ம்பட்டி இந்திராநகர் காலனியை சேர்ந்தவர் அஜித்குமார்(29). இவருக்கும் கர்ணன் மற்றும் பால முருகன் ஆகியோரிடையே பொங்கல் விழா கொண்டா டிய போது தகராறு ஏற்பட்டது.
இதில் அவர்கள் 2 பேரும் தன்னை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக போலீசில் புகார் அளித்தார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் வைகை அணை போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி டி.எஸ்.பி ராமலிங்கம் தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் அஜித்குமாரை தாக்கியதாக 2 பேர் மீது வழக்குபதிவு செய்து கர்ணனை கைது செய்தனர்.
- சுற்றுலா பஸ்சை குறிப்பிட்ட அனுப்பாததால் கோவிலுக்கு செல்லமுடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
- சுற்றுலா பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் அப்பகுதியினர் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் உருவானது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகில் உள்ள பொம்மனாங்கோட்டை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்ேடார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
கடந்த 20-ந்தேதி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான 2 சுற்றுலா பஸ்களை வாடகைக்கு பேசிஇருந்தனர். இதற்காக பாதி பணத்தை அட்வான்சாக பெற்றுக்கொண்ட சுற்றுலா நிறுவனம் சம்பவத்தன்று குறிப்பிட்ட நேரத்தில் பஸ்சை அனுப்பாமல் இருந்துள்ளனர்.
மேலும் மற்றொரு சுற்றுலா பஸ்சை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பி உள்ளனர். இதனால் கோவிலுக்கு செல்லமுடியாமல் அவர்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் இன்று அவ்வழியாக வந்த அதேசுற்றுலா பஸ்சை அப்பகுதி பெண்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பஸ் உரிமையாளர் இங்கு வந்தால்தான் இந்த பஸ்சை விடுவிப்போம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டடது. போலீசார் பலமுறை தெரிவித்தும் அவர்களுடன் வாக்குவாதத்தில் அப்பகுதியினர் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் உருவானது.
- குடியிருப்பு பகுதியில் தனி நபர்ஒருவர் பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனி அமைக்க கட்டிடப் பணிகளை செய்து வருகிறார்
- அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு நுழைவுவாயில் சோணை கருப்பசாமி கோவில் பின்புறம் குடியிருப்பு பகுதியில் தனி நபர்ஒருவர் பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனி அமைக்க கட்டிடப் பணிகளை செய்து வருகிறார்.
இதனால் குடிநீர் மற்றும் காற்று மாசுபட்டு பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று கூறி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனிஅமைக்க ஏற்பாடு செய்து வருபவர் மாசு ஏற்படாத வண்ணம் வேறு தொழில் தொடங்கட்டும். குடியிருப்பு பகுதியில் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம் தொடங்கினால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். எனவே வேறு பகுதியில் இதனை அமைக்க வேண்டும்.
இதற்கு தீர்வு காணப்படாவிட்டால் அப்பகுதி மக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.
- தாதநாயக்கன்பட்டியில் வெடிமருந்து ஆலை அமைக்க கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி:
பழனி அருகே உள்ள தாதநாயக்கன்பட்டியில் வெடிமருந்து ஆலை அமைக்க கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி அருகே உள்ள தாதநாய க்கன்பட்டி கிராமப்பகுதியில் வெடிமருந்து ஆலை அமைக்க தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு பாப்பம்பட்டி, கரடிக்கூட்டம், சித்திரை க்குளம், தாதநாயக்கன்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய த்தின் மூலம் வெடிமருந்து ஆலை அமைப்பது தொட ர்பான கருத்துகேட்பு கூட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் மண்டப த்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிைல வகித்தனர். கூட்டத்தில் பாப்பம்பட்டி, தாதநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்ேவறு கிராமமக்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், இயற்கை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆலை அமைப்பது தொடர்பாக கிராமமக்களி டம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது கிராமமக்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்டடோர் ஆலை அமைய உள்ள இடத்திற்கு அருகே உள்ள பழமை வாய்ந்த ஐவர் மலை, கோவில்கள் மற்றும் விவசாய நிலம் ஆகியவை உள்ளது. இங்கு வெடிமருந்து தயாரிப்பு ஆலை அமை ந்தால் நிலம், நீர், காற்று மாசடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே ஆலை அமைக்க கூடாது என அவர்கள் தெரிவித்தனர். மேலும் ஆலை அமைய எதிர்ப்பு தெரிவித்து மனுக்களையும் அளித்தனர்.
- விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரம்.
- விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட கோரி கிராம மக்கள் போராட்டம்.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையும் என்று மத்திய அரசு அறிவித்தது. பரந்தூர் விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள விமான நிலையத்திற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து விளை நிலங்கள், நீர் நிலைகள், குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஏகனாபுரம், நெல்வாய் கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 117வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட் தேவையா எனவும், விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கூறி முழக்கமிட்டனர்.
- வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில்20சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது . அதனை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார்.
- ஆக்கிரமிப்பை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில்20சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது . அதனை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். மேலும் அந்த நிலத்துக்கு வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் அவர் மனு கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த கல்வார்பட்டி கிராம மக்கள் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் தாசில்தார் சக்திவேலன் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
மேலும் கிராம மக்கள் உடன் சேர்ந்து வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.
- அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்ற முயன்றனர். இதற்கு சீரகம்பட்டியைச் சேர்ந்த ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- சீரகம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு நில க்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலுக்கு வார்பட்டி ஊராட்சி சீரகம்பட்டி கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வரு கின்றனர். இக்கிராமத்தில் உள்ள குழந்தைகள் படிப்பத ற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
இந்த கட்டிடத்திற்குள் தற்போது மழை பெய்வதால் தண்ணீர் புகுந்து பள்ளி நடத்த முடியாத நிலை உள்ளது. மேலும் கட்டிடம் தற்போது பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதனை உடனடியாக அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிலக்கோட்டை ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க ப்பட்டது. இந்நிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் சென்று சீரகம் பட்டியில் அமைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்ற முயன்றனர். இதற்கு சீரகம்பட்டியைச் சேர்ந்த ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சீரகம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு நில க்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உடனடியாக அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம்நில க்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அண்ணாதுரை பேச்சு வார்த்தை நடத்தினார். உடனடியாக அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டனர்.
- அம்பேத்கர் நற்பணி மன்றம் என்ற பதாகை வைத்து தனித்தனியாக குச்சிகளை நட்டு சாலை அமைப்பதற்கு முயன்றனர். .
- வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் நம்பியாம்பாளையம் ஊராட்சி எ.டி.காலனியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 40 பெண்கள் உள்ளிட்ட 60 க்கு மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள 99/3 என்புறம்போக்கு இடத்தில் அம்பேத்கர் நற்பணி மன்றம் என்ற பதாகை வைத்து வீட்டுமனை பட்டா வேண்டும் என்று அவர்கள் தனித்தனியாக குச்சிகளை நட்டு சாலை அமைப்பதற்கு முயன்றனர்.
இது பற்றி அவர்கள் கூறுகையில், நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம்.எங்களுக்கு குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லை. ஏற்கனவே வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இங்கு பட்டா கேட்டு வந்துள்ளோம் என்றனர். தகவல் அறிந்து அவினாசி தாசில்தார் ராஜேஸ், கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, உதவியாளர் நடராஜ், அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து அவர்களிடம் இது குட்டை புறம்போக்கு இடம். இங்கு வீட்டுமனை பட்டா தருவதற்கு சாத்தியமில்லை .வேறு இடம் பார்த்து தருவதாக கூறினர். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து பலகாலமாக எங்கள் மூதாதையர் இங்கு குடிசை போட்டு வாழ்ந்துள்ளனர். எனவே இந்த இடத்தில் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டும் என்று நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வருவாய்துறையினரும் போலீசாரும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவசியம் வேறு நல்ல இடத்தில் வீட்டுமனை பட்டா தருவதாக வலியுறுத்தி கூறிய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தேவாலயத்தில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஒன்றுகூடி வெள்ளோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
- போலீசார் இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு பகுதியில் புனித தெரசா சந்தியாகப்பர் கோவில் உள்ளது. இங்கு பழைய நிர்வாகக்குழுவினருக்கு போட்டியாக புதிய குழு உருவானது. அவர்கள் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் இதற்கு பழைய நிர்வாகக்குழு மறுத்தது. இந்தநிலையில் ரூ.40 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்தனர்.
பழைய நிர்வாகக்குழு மற்றும் புதிய குழுவினருக்கு இடையே பிரச்சிைன ஏற்பட்டதால் கோவிலில் இருதரப்பினர் சார்பாகவும் 2 பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டன. அதன் சாவிகள் வி.ஏ.ஓவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று வெள்ளோடு பகுதியில் ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த கோவில் நிர்வாகம் சார்பாக சென்றபோது அங்கிருந்த 2 பூட்டுகளுமே உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஒன்றுகூடி வெள்ளோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தனமேரி கீதா மற்றும் அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பழைய நிர்வாகக்குழு தங்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என புதிய குழுவினர் தெரிவித்தனர். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் முடிவு எட்டப்படவில்லை. உயர் அதிகாரிகள் முன்னிலையில் மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
- வேப்பம்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் நீர் தேங்கும் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வீடு மற்றும் கோவில்களை கட்டியிருந்தனர்.
- கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுவரை கோவிலை இடிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே வேப்பம்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் நீர் தேங்கும் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வீடு மற்றும் கோவில்களை கட்டியிருந்தனர். இதனை அகற்றுமாறு அதிகாரிகள் அவர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில் பொதுப்பணி துறையினர் நீர் நிலை பகுதியில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காக போலீசார் உதவியோடு வந்தனர்.
அப்போது அந்தப் பகுதி யில் உள்ள பொதுமக்கள் அங்குள்ள பட்டாளம்மன் கோவிலினை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட தொடங்கி னர். அதிகாரிகள் சமரசம் செய்தும் கேட்டகாமல் சுமார் 2 மணநேரத்திற்கும் மேலாக தர்ணா ேபாரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவிலை இடித்தால் இதே இடத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று பொதும்ககள் கூறிய தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 மாதங்களுக்குள் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுவரை கோவிலை இடிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.
இதனால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்