என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நத்தம் அருகே தனியார் மதுபானக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

- குழந்தைகள் மற்றும் பெண்கள் வந்து செல்லும் இடத்தில் மதுபானக்கடை வைத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்
- மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-செந்துறை சாலையில் பெட்ரோல் பங்க் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் தனியார் மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் வந்து செல்லும் இடத்தில் மதுபானக்கடை வைத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்று அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே செட்டியார்குளம், அம்மன்குளம், பொதுமக்கள் சார்பில் அப்பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மதுபானக்கடை அமைக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த நேரிடும் என்றும் மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
