search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபானக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு"

    • குழந்தைகள் மற்றும் பெண்கள் வந்து செல்லும் இடத்தில் மதுபானக்கடை வைத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்
    • மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-செந்துறை சாலையில் பெட்ரோல் பங்க் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர்.

    இப்பகுதியில் தனியார் மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் வந்து செல்லும் இடத்தில் மதுபானக்கடை வைத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்று அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    எனவே செட்டியார்குளம், அம்மன்குளம், பொதுமக்கள் சார்பில் அப்பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மதுபானக்கடை அமைக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த நேரிடும் என்றும் மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

    ×