என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சின்னமனூரில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொங்கல் வைத்து போராட்டம்
- வேப்பம்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் நீர் தேங்கும் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வீடு மற்றும் கோவில்களை கட்டியிருந்தனர்.
- கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுவரை கோவிலை இடிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே வேப்பம்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் நீர் தேங்கும் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வீடு மற்றும் கோவில்களை கட்டியிருந்தனர். இதனை அகற்றுமாறு அதிகாரிகள் அவர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில் பொதுப்பணி துறையினர் நீர் நிலை பகுதியில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காக போலீசார் உதவியோடு வந்தனர்.
அப்போது அந்தப் பகுதி யில் உள்ள பொதுமக்கள் அங்குள்ள பட்டாளம்மன் கோவிலினை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட தொடங்கி னர். அதிகாரிகள் சமரசம் செய்தும் கேட்டகாமல் சுமார் 2 மணநேரத்திற்கும் மேலாக தர்ணா ேபாரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவிலை இடித்தால் இதே இடத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று பொதும்ககள் கூறிய தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 மாதங்களுக்குள் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுவரை கோவிலை இடிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.
இதனால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்