search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு மனு அளிக்க வந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
    X

    கோப்பு படம்

    செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு மனு அளிக்க வந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

    • பழனி நகராட்சி குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
    • எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழனி நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டனர்.

    பழனி:

    பழனி நகராட்சியில் 1வது வார்டுக்கு உட்பட்ட பெரியப்பா நகர் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது போலீஸ் பாதுகாப்புடன் செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதைய டுத்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழனி நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்ட னர்.

    அப்போது பழனி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் மீட்டிங்கில் இருப்பதாகவும், பிறகு வருமாறும் தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து அதிகாரிகளை சந்தித்து விட்டுதான் செல்வோம் என்று கூறி பழனி நகராட்சி அலுவலக வாயிலிலேயே காத்திருந்த னர்.

    நீண்ட நேரம் ஆகியும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை சந்திக்க மறுத்ததாக கூறி ஆவேச மடைந்த பொதுமக்கள், நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தெரிவித்ததாவது:-

    பழனி பெரியப்பா நகரில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதியில் தற்போது 5ஜி அலைக்கற்றைக்கான கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. குடியிரு ப்புகள் மட்டுமின்றி மருத்து வமனை, அங்கன்வாடி உள்ளிட்டவை உள்ள பகுதியில் அமைக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ள நிலையில் அதை மீறி டவர் அமைக்கப்படுவதாகவும், இதனால் ஏற்படும் கதீர்வீச்சு காரணமாக கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்பட பலரும் பாதிக்கப்படுவர்.

    மேலும் தற்போது அமை க்கப்படும் கோபுரமானது முதல் முப்பது அடி உயரத்திற்கு மட்டுமே அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து ஆரம்பம் முதலே பலமுறை தங்களது எதிர்ப்பை தெரிவித்தும், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே செல்போன் டவர் அமை க்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்ததாக கூறினர்.

    தங்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் செய்தால் விரைவில் கடுமையான போராட்டத்தில் ஈடு படப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளை சந்திக்க வைப்பதாக கூறியதை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    Next Story
    ×