search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி அருகே வெடிமருந்து ஆலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
    X

    கோப்பு படம்

    பழனி அருகே வெடிமருந்து ஆலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாதநாயக்கன்பட்டியில் வெடிமருந்து ஆலை அமைக்க கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    பழனி அருகே உள்ள தாதநாயக்கன்பட்டியில் வெடிமருந்து ஆலை அமைக்க கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி அருகே உள்ள தாதநாய க்கன்பட்டி கிராமப்பகுதியில் வெடிமருந்து ஆலை அமைக்க தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்கு பாப்பம்பட்டி, கரடிக்கூட்டம், சித்திரை க்குளம், தாதநாயக்கன்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய த்தின் மூலம் வெடிமருந்து ஆலை அமைப்பது தொட ர்பான கருத்துகேட்பு கூட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் மண்டப த்தில் நேற்று நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிைல வகித்தனர். கூட்டத்தில் பாப்பம்பட்டி, தாதநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்ேவறு கிராமமக்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், இயற்கை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆலை அமைப்பது தொடர்பாக கிராமமக்களி டம் கருத்து கேட்கப்பட்டது.

    அப்போது கிராமமக்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்டடோர் ஆலை அமைய உள்ள இடத்திற்கு அருகே உள்ள பழமை வாய்ந்த ஐவர் மலை, கோவில்கள் மற்றும் விவசாய நிலம் ஆகியவை உள்ளது. இங்கு வெடிமருந்து தயாரிப்பு ஆலை அமை ந்தால் நிலம், நீர், காற்று மாசடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    எனவே ஆலை அமைக்க கூடாது என அவர்கள் தெரிவித்தனர். மேலும் ஆலை அமைய எதிர்ப்பு தெரிவித்து மனுக்களையும் அளித்தனர்.

    Next Story
    ×