search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்"

    • வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில்20சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது . அதனை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார்.
    • ஆக்கிரமிப்பை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில்20சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது . அதனை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். மேலும் அந்த நிலத்துக்கு வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் அவர் மனு கொடுத்துள்ளார்.

    இதனை அறிந்த கல்வார்பட்டி கிராம மக்கள் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் தாசில்தார் சக்திவேலன் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    மேலும் கிராம மக்கள் உடன் சேர்ந்து வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    ×