search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்"

    • பொங்கல் விழா கொண்டா டிய போது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
    • சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் வைகை அணை போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே வைகைஅணை முதலக்க ம்பட்டி இந்திராநகர் காலனியை சேர்ந்தவர் அஜித்குமார்(29). இவருக்கும் கர்ணன் மற்றும் பால முருகன் ஆகியோரிடையே பொங்கல் விழா கொண்டா டிய போது தகராறு ஏற்பட்டது.

    இதில் அவர்கள் 2 பேரும் தன்னை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக போலீசில் புகார் அளித்தார்.

    சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் வைகை அணை போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி டி.எஸ்.பி ராமலிங்கம் தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    மேலும் அஜித்குமாரை தாக்கியதாக 2 பேர் மீது வழக்குபதிவு செய்து கர்ணனை கைது செய்தனர்.

    ×