search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Payasam"

    திருக்கார்த்திகை தீபமான இன்று மாலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போது தேங்காய் பால் அரிசி பாயாசத்தை நைவேத்தியமாக இறைவனுக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    தேங்காய் - ஒன்று (பெரியது)
    பச்சரிசி - அரை ஆழாக்கு
    ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
    வெல்லம் - கால் கிலோ
    காய்ந்த திராட்சை - 10 கிராம்
    முந்திரி - 10 கிராம்

    செய்முறை:
     
    சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும்.

    தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும்.

    மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேக விடவும்.

    நன்கு வெந்ததும் வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து கரையவிட்டு வெந்த அரிசியில் கொட்டவும்.

    கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றி முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி போட்டு 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    கடைசியாக முதல் பாலை ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும்.

    சுவையான தேங்காய் பால் அரிசி பாயாசம் தயார்.

    தீபாவளி அன்று ஆரோக்கியமான இனிப்பு வகைகளை செய்து, சுவைத்து கொண்டாடுவோம். அந்த வகையில் இன்று கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை ரவை - 50 கிராம்
    தேங்காய் துருவல் - அரை கப்
    கருப்பட்டி - முக்கால் கப்
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு
    சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
    ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
    காய்ச்சிய பால் - ஒரு தம்ளர்
    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வாணலியில் நெய்விட்டு உருகியதும், முந்திரி, உலர்ந்த திராட்சை, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே வாணலியில், கோதுமை ரவை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    ரவை வறுப்பட்டதும் 4 கப் வெந்நீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டியுடன், தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.

    கோதுமை ரவை நன்றாக வெந்ததும், கருப்பட்டி ஜீரா சேரத்து கிளறிவிடவும்.

    கோதுமை ரவையுடன், கருப்பட்டி சேர்ந்து வெந்ததும் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி, வறுத்து வைத்த முந்திரி கலவையை சேர்க்கவும்.

    இறுதியாக, பால் சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும்.

    சுவையான கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் ரெடி..!.

    இதையும் படிக்கலாம்...தீபாவளி ஸ்பெஷல்: பாதாம் பர்ஃபி
    வாழைப்பழம் சேர்த்து செய்யும் பாயாசம் சூப்பராக இருக்கும். இன்று இந்த பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பழத் துண்டுகள் - 1 கப்
    பாசிப்பருப்பு - 1 கப்
    பால் - 1/2 கப்
    தேங்காய் பால் - 2 கப்
    வெல்லம் - முக்கால் கப்
    ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு
    நெய் - ஒரு ஸ்பூன்



    செய்முறை :

    பாசிப் பருப்பை நன்றாக குழைய வேக வைத்து மசித்த கொள்ளவும்.

    முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும்.

    வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும்

    வேக வைத்து மசித்த பாசிப்பருப்பில் வடிகட்டிய வெல்லத்தை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    வாழைப்பழத் துண்டுகளை நெய்யில் நன்றாக வதக்கி வைத்துக் கொள்ளவும்.

    பிறகு வேக வைத்த பாசிப்பருப்புடன் வதக்கிய வாழைப்பழம், தேங்காய் பால் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

    பிறகு ஏலக்காய், திராட்சை, வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான வாழைப்பழ பருப்பு பாயாசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கீர் என்றால் விரும்பி குடிப்பார்கள். இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து சூப்பரான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - 5 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - சுவைக்கு
    சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1
    முந்திரி பருப்பு (தோல் நீக்கியது) - தேவையான அளவு
    பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) - தேவையான அளவு
    பால் - 3 கப்
    ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    முந்திரி, பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் ஜவ்வரிசி சேர்க்கவும்

    நன்றாக கலக்கி அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஜவ்வரிசியை வேக விடவும்.

    ஜவ்வரிசி வெந்தவுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் வைக்கவும்.

    வேக வைத்து நறுக்கி வைத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும்

    பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்

    அடுப்பை அணைத்து விட்டு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

    அப்படியே பாதாம் பருப்பை அதன் மேல் தூவி அலங்கரித்து சூடாக அல்லது ஆறின பிறகு பரிமாறுங்கள்.

    சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் ரெசிபி ரெடி

    குறிப்பு :

    ஜவ்வரிசியை முன்பே ஊற வைத்து கொண்டால் பாயசத்துக்கு மென்மையான பதம் கிடைக்கும். வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை துருவிக் கொண்டால் பாயசம் ரொம்பவும் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிஸ்தா பருப்பை வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாயாசம் செய்வது மிகவும் எளிமையானது.
    தேவையான பொருட்கள் :

    பிஸ்தா - கால் கிலோ
    ரவை - 50 கிராம்
    சர்க்கரை - தேவைக்கு
    பால் - 1 லிட்டர்
    கன்டென்ஸ்ட் மில்க் - 2 டேபிள்ஸ்பூன்
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    பிஸ்தா எசன்ஸ் - சிறிதளவு
    நெய் - தேவைக்கு



    செய்முறை:

    பாதி அளவு பிஸ்தாவை பிரித்தெடுத்து அதில் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    மீதமுள்ள பிஸ்தாவை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் நறுக்கிய பிஸ்தாவை கொட்டி வறுத்தெடுக்கவும்.

    பின்பு அதனுடன் ரவையை சேர்த்து கிளறவும்.

    பின்னர் பாலில் அரைத்துள்ள பிஸ்தா விழுதை கொட்டி கிளறவும்.

    அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக வெந்ததும் கண்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான பிஸ்தா பாயசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். பேரீச்சம் பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பேரீச்சம் பழத்தில் கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம்பழம் - ஒரு கப்
    கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்
    உலர்திராட்சை - அரை கப்
    பனை வெல்லம் - அரை கப்
    பாதாம், முந்திரி கலவை - அரை கப்
    தேங்காய்ப்பால் - 2 கப்
    சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்



    செய்முறை:

    பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேரீச்சம் பழத்தை கொட்டையை எடுத்து விட்டு தனியாக வைக்கவும்.

    பனை வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

    சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

    வெறும் வாணலியில் கசகசாவை வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.

    பேரீச்சம்பழத்தினை உலர் திராட்சை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருகியதும் பாதாம், முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே பாத்திரத்தில் அரைத்த பேரீச்சம் விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

    பின்பு அதனுடன் பனை வெல்லம் சேர்த்துக் கிளறவும்.

    பிறகு சோள கரைசல், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும்.

    கசகசா பவுடர் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும்.

    திக்கான பதம் வந்தவுடன் மேலே வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து அலங்கரித்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.

    சூப்பரான பேரீச்சம்பழ கீர் ரெடி.

    அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பை, சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான கீர் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாசுமதி அரிசியை வைத்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர்
    பாசுமதி அரிசி - 2 கைப்பிடி
    ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை
    பாதாம் பருப்பு - 100 கிராம்
    சர்க்கரை - 300 கிராம்
    நெய் - 4 டீஸ்பூன்
    முந்திரிப் பருப்பு - 10



    செய்முறை :

    பாதாம் பருப்பை ஊறவைத்துத் தோலுரித்து, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    பாசுமதி அரிசியை இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு நன்கு வறுத்து, இரண்டாக உடைத்துக்கொள்ளுங்கள்.

    குக்கரில் பாலை ஊற்றி, பொடித்த அரிசியைச் சேர்த்து மீதமான தீயில் 15 நிமிடம் வேகவிடுங்கள்.

    பின் அதை வாணலியில் ஊற்றி ஏலக்காய்ப் பொடி, நறுக்கிய பாதம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேகவிடுங்கள்.

    அரிசி வெந்து பால் சிறிது கெட்டியானவுடன் நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்த்து இறக்குங்கள்.

    சூப்பரான பாசுமதி அரிசி கீர் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளா கோயில்களில் வழங்கப்படும் பிரத்யேகப் பிரசாதம், இந்தப் பாயாசம். இந்த அரவணப் பாயாசத்தை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கலரிசி - 200 கிராம் (சின்ன அரிசியாக இருக்க வேண்டும்)
    வெல்லம் - 1 கிலோ
    தண்ணீர் - தேவையான அளவு
    நெய் - 250 மில்லி
    ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்.



    செய்முறை :

    புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டிய பாயாசத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும்.

    இத்துடன் அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.. அதிகம் குழையாமலும், அதிகம் வெந்து போகாமலும் பார்த்துக்கொள்ளவும்.

    அரிசி உடைய ஆரம்பிக்கும் போது நெய்யை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    பார்ப்பதற்கு வேகாதது போல இருக்கும் இந்தப் பாயசம் சாப்பிடும் போது கரகரவென்றிருக்கும்.

    சூப்பரான அரவணப் பாயாசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் வாழும் நாடோடிகள் மற்றும் பழங்குடியினரின் முக்கிய உணவாகும். இன்று மூங்கில் அரிசிப் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மூங்கில் அரிசி - 100 கிராம்
    வெல்லம் - 100 கிராம்
    தேங்காய்ப்பால் - 1 லிட்டர் (நன்கு முற்றிய தேங்காய்களாக இருக்க வேண்டும்)
    ஏலக்காய் - 2
    நெய் - 1 டீஸ்பூன்
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு.



    செய்முறை :

    மூங்கில் அரிசியை நன்கு கழுவி, ஊறவைக்க வேண்டும்.

    நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.

    தேங்காயில் 3 முறை பால் எடுத்து கடைசியாக எடுத்த தேங்காய்ப்பாலுடன் அரிசியை சேர்த்து வேகவைக்கவும்.

    அரிசி பாதி வெந்ததும் மீதமுள்ள தேங்காய்ப்பாலையும் சேர்த்து, மூங்கில் அரிசி முழுமையாக வேகும் வரை கொதிக்க விடவும்.

    இத்துடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து ருசிபார்த்து வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான பல்வேறு உணவுகளை தயாரிக்கலாம். இன்று மாம்பழத்தை வைத்து பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நன்கு பழுத்த மாம்பழம் - ஒன்று,
    பால் - ஒரு லிட்டர்,
    சர்க்கரை - தேவையான அளவு,
    பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் - தலா 3 டீஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    மாம்பழத்தின் தோல், கொட்டைகளை நீக்கி விட்டு துண்டுகளாக்கி மிக்சியில் கூழாக அரைத்தெடுக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறு தீயில் வைத்து காய்ச்சவும்.

    பால் பாதியாக சுண்டிய பிறகு ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

    பாலை நன்கு ஆற விடவும்.

    கடைசியாக அதனுடன் அரைத்த மாம்பழ கூழ் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிரவைத்து பரிமாறலாம்.

    சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×