search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweet Potato Recipes"

    குழந்தைகளுக்கு கீர் என்றால் விரும்பி குடிப்பார்கள். இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து சூப்பரான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - 5 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - சுவைக்கு
    சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1
    முந்திரி பருப்பு (தோல் நீக்கியது) - தேவையான அளவு
    பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) - தேவையான அளவு
    பால் - 3 கப்
    ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    முந்திரி, பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் ஜவ்வரிசி சேர்க்கவும்

    நன்றாக கலக்கி அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஜவ்வரிசியை வேக விடவும்.

    ஜவ்வரிசி வெந்தவுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் வைக்கவும்.

    வேக வைத்து நறுக்கி வைத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும்

    பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்

    அடுப்பை அணைத்து விட்டு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

    அப்படியே பாதாம் பருப்பை அதன் மேல் தூவி அலங்கரித்து சூடாக அல்லது ஆறின பிறகு பரிமாறுங்கள்.

    சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் ரெசிபி ரெடி

    குறிப்பு :

    ஜவ்வரிசியை முன்பே ஊற வைத்து கொண்டால் பாயசத்துக்கு மென்மையான பதம் கிடைக்கும். வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை துருவிக் கொண்டால் பாயசம் ரொம்பவும் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வட இந்தியாவில் ஷக்கர்கந்தி என்று அழைக்கப்படும் சக்கரைவள்ளிக் கிழங்கு சாட் மிகவும் பிரசித்தம். சுவையான ஷக்கர்கந்தி சாட் ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 250 கிராம்
    சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்
    சாட் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பாத்திரத்தின் தண்ணீர் ஊற்றி சூடானதும், சர்க்கரைவள்ளிக் கிழங்கை முக்கால் பதம் வேகவைக்க வேண்டும்.

    வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோலுரித்து சதுரங்களாக துண்டுகள் போடவும்.

    அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் தூவி பிசிறிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிழங்கு துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பிறகு எடுத்து, சாட் மசாலாத்தூள் தூவி பரிமாறவும்.

    இது வட மாநிலங்களில் குளிர்காலத்தில் விற்கப்படும் பிரபலமான சாட். சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு... இந்தப் பருவத்தில் அதிகம் விளையக் கூடியது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இன்று இந்த கிழங்கை வைத்து சத்தான சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 1
    வெள்ளைபூண்டு - 4  பல்
    சர்க்கரை வள்ளி கிழங்கு - 1/4 கிலோ
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு.
    தேங்காய் பால் - 3 கப்
    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை:

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி வெட்டிக்கொள்ளவும்.

    கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி முதலில் வெங்காயம் பின் பூண்டினைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சர்க்கரை வள்ளி கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு (5 நிமிடங்கள்) வதக்கவும்.

    இதில் தேங்காய் பால் சேர்த்து 25 நிமிடங்கள் மிக மிக சிறிய தீயில் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.

    பின் அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறிய பின் மிக்சியில் நன்கு சுற்றி மீண்டும் லேசான சூடு செய்து உப்பு, மிளகு தூள் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×