search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Payasam"

    • தேங்காய்ப்பால் போஹா கோவாவின் ஸ்பெஷல் ஐட்டம்.
    • பத்தே நிமிடங்களில் இந்த போஹாவை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள்

    அவல் - 200 கிராம்

    தேங்காய்ப்பால் - 1 கப்

    சர்க்கரை - தேவையான அளவு

    ஏலக்காய் - 3

    செய்முறை

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    அவலை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

    மிருதுவாக வந்தவுடன் அரை கப் சூடு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    அத்துடன் அவல் சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    அத்துடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

    பொடித்த ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறிவிடவும்.

    சுவையான தேங்காய்ப்பால் போஹா ரெடி. சுடச்சுட பரிமாறவும்.

    • கார்த்திகை தீபமான இன்று இறைவனுக்கு படைக்க தேங்காய் பால் பாயாசம் செய்யலாம்.
    • இந்த பாயாசம் செய்வது சுலபம், சுவையோ அருமை.

    தேவையான பொருட்கள் :

    தேங்காய் துருவல் - ஒரு கப்

    வெல்லம் - ஒரு கப்

    பச்சரிசி மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

    நெய் - 2 டீஸ்பூன்

    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

    முந்திரி பருப்பு - 10

    காய்ந்த திராட்சை - 10

    செய்முறை :

    முதலில், மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சேர்த்து அத்துடன் வெந்நீர் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், வெல்லம் சேர்த்து கரைத்து அந்த தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

    தற்போது, தேங்காய் பாலுடன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

    அதனுடன், வடிகட்டிய வெல்லம் சேர்த்து இந்த கலவையை அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு திக்கான பதம் வரும் வரை கிளறவும்.

    இறுதியாக, கடாயில் நெய்விட்டு சூடானதும் முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை போட்டு வறுத்து பாயாசத்துடன் சேர்த்து கலந்தால் சுவையான தேங்காய் பால் பாயாசம் ரெடி..!.

    • தென்னிந்திய விருந்துகளில் முக்கிய இடம் பிடிப்பது 'பாயாசம்'.
    • இதில் பொட்டாசியம், கால்சியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன.

    தேவையான பொருட்கள்:

    இளநீர் - 200 மில்லி லிட்டர்

    இளம் தேங்காய் - 200 கிராம்

    பால் - ½ லிட்டர்

    சர்க்கரை - 200 கிராம்

    மில்க்மெய்ட் - 1 கப்

    சாரைப்பருப்பு - 2 டீஸ்பூன்

    முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 8

    ஏலக்காய்த்தூள் - ¼ டீஸ்பூன்

    பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை

    நெய் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    பாதாம் பருப்பை ஊறவைத்து தோலுரிக்கவும்.

    பின்பு முந்திரி, பாதாம், பிஸ்தா இவற்றை பொடிதாக நறுக்கவும்.

    இளம் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு சிறிது பாலூற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் இளநீரை சேர்த்துக் கலக்கவும்.

    அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடுபடுத்தவும்.

    அதில் மில்க்மெய்ட் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.

    பிறகு அதில் பச்சைக்கற்பூரம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    வாணலியில் நெய் ஊற்றி சாரைப்பருப்பு, முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். பின்பு அவற்றைப் பாலில் சேர்த்து கலக்கவும்.

    10 நிமிடங்கள் கழித்து பாலை அடுப்பில் இருந்து இறக்கவும்.

    பால் அறை வெப்பநிலைக்கு வந்ததும், அதில் இளநீர் மற்றும் இளம் தேங்காய் கலவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    பிறகு இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, 2 மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான 'இளநீர் பாயாசம்' தயார்.

    • கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • தினமும் ஒரு கேரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்:

    கேரட் - 250 கிராம்

    வெல்லம் - கால் கப்

    தண்ணீர் - தேவையான அளவு

    தேங்காய் பால் - ஒரு கப்

    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்

    உப்பு - ஒரு சிட்டிகை

    நெய் - இரண்டு டீஸ்பூன்

    முந்திரி, திராட்சை - தேவையான அளவு

    செய்முறை:

    கேரட்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான கேரட் பாயாசம் ரெடி.

    • சர்க்கரை நோயாளிகளும் இந்த பாயாசத்தை குடிக்கலாம்.
    • இதை ரெசிபியை செய்வது மிகவும் எளிமையானது.

    தேவையான பொருட்கள்

    கோதுமை ரவை - 1 கப்

    ஜவ்வரிசி - அரை கப்

    தண்ணீர் - 3 கப்

    வெல்லம் அல்லது கருப்பட்டி - 2 கப்

    தேங்காய் பால் - 3 கப்

    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

    முந்திரி - விருப்பத்திற்கேற்ப

    நெய் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    ஜவ்வரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    ஒரு குக்கரில் வறுத்த கோதுமை ரவை, ஜவ்வரிசி மற்றும் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    விசில் போனதும், ஒரு வாணலியில் வேக வைத்துள்ள கோதுமை ரவையை ஊற்றி, அதில் வெல்லம் அல்லது கருப்பட்டையை போட்டு அடுப்பில் வைத்து, 10 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

    பின்பு அதில் தேங்காய் பாலை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கவும்.

    இறுதியில் மற்றொரு சிறு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி கிளறினால், சுவையான கோதுமை ரவை பாயாசம் தயார்.

    • பாஸ்தாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று பாஸ்தாவில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மக்ரோனி - 1 கப்

    பால் - 2 1/2 கப்

    சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்

    கண்டென்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

    முந்திரி - 2 டீஸ்பூன்

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    பின்னர் அதில் மக்ரோனியை சேர்த்து, மக்ரோனி பாதியாக வேகும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி நீரை வடித்து, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசிக்

    கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு நாண்ஸ்டிக் பேனில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதே பேனில், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிட வேண்டும்.

    அடுத்து அதில் மக்ரோனியை சேர்த்து, பாலில் மக்ரோனி நன்கு மென்மையாக வேக வைத்து, பின் அதில் கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி

    விட வேண்டும்.

    பாலானது நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால், பாஸ்தா பாயாசம் ரெடி!!!

    • பாயாசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன.
    • இன்று நட்ஸ் பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 20 கிராம்

    திராட்சை மற்றும் பேரீச்சை - 20 கிராம்

    பால் - 1/2 லிட்டர்

    சேமியா - 1/4 கப்

    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

    சர்க்கரை - 1/4 கப்

    நெய் - தேவையான அளவு

    செய்முறை :

    பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நட்ஸ் அனைத்தையும் தனித்தனியே நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்து சேமியாவையும் வறுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுப்பில் பால் வைத்து நன்கு கொதித்ததும் சேமியா சேர்த்து வேக விட வேண்டும்.

    சேமியாக வெந்ததும் சர்க்கரை தேவைக்கு ஏற்ப சேர்த்து கலக்க வேண்டும்.

    பின் அதில் வறுத்த பருப்பு வகைகள், திராட்சை, பேரீச்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.

    அவ்வளவுதான் நட்ஸ் பாயாசம் தயார்.

    • கேரட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • கேரட் கீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    கேரட் - 3

    பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி

    பால் - அரை கப்

    பாதாம் பருப்பு - 8

    சீனி - கால் கப் + 2 மேசைக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை

    * கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

    * பாதாம் பருப்பை பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய காரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

    * வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

    * அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சீனி, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

    * இதை அப்படியே குடித்தால் மேலே ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து குடிக்கவும், அல்லது ப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாக குடிப்பதாக இருந்தால் நெய் தேவையில்லை.

    * தனியாக துருவி வேக வைக்காமல் குக்கரிலேயே அப்படியே வேக வைத்து எடுத்து பிசைந்து விட்டுக் கொண்டு மற்ற பொருட்களையும் சேர்க்கலாம்.

    * சுவையான கேரட் கீர் தயார்.

    • ஓணத்தின் ஸ்பெஷலே அடை பிரதமன் தான் .
    • அதனை மிக எளிமையாக செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    அரிசி அடை - 100 கிராம்

    வெல்லம் - 200 கிராம்

    நீர்த்த தேங்காய் பால் - 200 மிலி

    கெட்டியான தேங்காய் பால் -200 மிலி

    தேங்காய் துண்டுகள்- தேவையான அளவு

    முந்திரி - தேவையான அளவு

    சுக்குத் தூள் - தேவையான அளவு

    ஏலக்காய் பொடி - தேவையான அளவு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    அரை கப் தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, அதிலுள்ள கசடுகளை நீக்கவும்.

    கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை வறுக்கவும்.

    அதே பாத்திரத்தில், மேலும் சிறிது நெய்யை சூடாக்கி, அடையை மிதமான அல்லது குறைந்த தீயில் 4-&5 நிமிடங்கள் வறுக்கவும்.

    இப்போது, வெல்லம் கரைத்த நீரை அடையில் சேர்த்து, மிதமான சூட்டில் அது கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

    கெட்டியானவுடன், அதில் நீர்த்த தேங்காய் பாலைச் சேர்க்கவும். அது மீண்டும் கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, கெட்டியான தேங்காய் பால், வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் துண்டுகளைச் சேர்க்கவும்.

    நன்றாகக் கலக்கிவிட்டதை உறுதி செய்த பிறகு, அடுப்பை அணைத்து விடலாம்.

    இப்போது ருசியான அடை பிரதமன் ரெடி.

    • கேரளா மட்டை அரிசி உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது.
    • இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கேரளா மட்டை அரிசி - 1 கப்

    பால் - 4 கப்

    சர்க்கரை - 1 கப்

    முந்திரி, திராட்சை, பாதாம் - விருப்பத்திற்கேற்ப

    நெய் - அரை டீஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை:

    * பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.

    * கேரளா மட்டை அரிசியை நன்றாக கழுவி மிக்ஸர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளுங்கள்.

    * ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    * பிறகு அதில் கழுவி வைத்துள்ள மட்டை அரிசியைப் போட்டு நன்கு கிளறி, அரிசி நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். அல்லது அடிபிடித்து விடும்.

    * அரிசி வேக சிறிது நேரம் எடுக்கும் என்பதால், குறைவான தீயில் வேக வைக்கவும்.

    * அரிசி நன்கு மென்மையாக வெந்த பின்பு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

    * இறுதியில் உப்பு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.

    * மேலே வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பரிமாறவும்.

    * இப்போது சுவையான கேரளா மட்டை அரிசி பால் பாயாசம் தயார்…

    குறிப்பு - சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்தும் இதை செய்யலாம்.

    • கேரட் கீர் செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
    • வீட்டிற்கு திடீரென விருந்தினர் வந்தால் இந்த கீர் செய்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    கேரட் - 3

    பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி

    பால் - அரை கப்

    பாதாம் பருப்பு - 10

    சர்க்கரை - கால் கப் + 2 மேசைக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை

    கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய கேரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

    வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

    அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    கீர் திக்கான பதம் வந்தவுடன் அதை இறக்கி சூடாகவோ, பிரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்.

    இப்போது சூப்பரான கேரட் கீர் ரெடி.

    • வீட்டில் குழந்தைகளுக்கு பாயாசம், கீர் செய்து கொடுத்து இருப்பீங்க.
    • இன்று வித்தியாசமாக ஆப்பிள் ரபடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - 2,

    பால் - அரை லிட்டர்,

    சர்க்கரை - ஒரு கப்,

    பாதாம் - 10 (துருவிக் கொள்ளவும்),

    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,

    முந்திரிப் பொடி - 2 டீஸ்பூன்.

    செய்முறை:

    பாலை நன்கு காய்ச்சி வைக்கவும்.

    ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

    துருவிய ஆப்பிளை வெறும் கடாயில் சூடுபட கிளறவும்… சர்க்கரை, பால் சேர்த்து, குறைவான தீயில் கொதிக்கவிடவும்.

    திக்கான பதம் வந்ததும், பாதாம் துருவல், முந்திரிப் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

    இதை சூடாகவோ… குளிர வைத்தோ பரிமாறலாம்.

    இப்போது சூப்பரான ஆப்பிள் ரபடி ரெடி.

    ×