search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "patrolling"

    • போலீசார் மூக்கனூர் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர்.
    • வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மூக்கனூர் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது தும்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது27) என்பவர் மூக்கனூர் ஏரிக்கரை அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • பாவளம் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் லாரி டியூப்களில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 6 லாரி டியூப்பில் பதுக்கி வைத்திருந்த சுமார் 360 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சங்கரா புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாவளம் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் லாரி டியூப்களில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் துரை மணிகண்டன் (29) என்பவர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து துரைமணிகண்டனை கைது செய்த போலீசார், 6 லாரி டியூப்பில் பதுக்கி வைத்திருந்த சுமார் 360 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • அய்யனார் கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த சரவணன்.
    • 25 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலமும் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    கடலூர்:

    புதுப்பேட்டைபோலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உதவி ஆய்வாளர்செல்வம் ஆகியோர்திருவாமூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள அய்யனார் கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த சரவணன் (வயது25) சுமார் 15 லிட்டர் பிடிக்கக்கூடியபாலிதீன் கவரில் சுமார் 10 லிட்டர் விஷ நெடி உள்ளசாராயமும், சுமார் 25 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலமும் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்துவழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து அவனிடமிருந்து விஷ சாராயம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
    • பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊட்டி,

    பண்டிகை காலங்கள் மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக குற்ற செயல்களை முன்கூட்டியே தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. மகேஸ்வரன் மேற்பார்வையில் நேற்று முதல் காவல் துறையின் ரோந்து பணிகள் 24 மணி நேரமும் செயல்பட தொடங்கியது. ஊட்டி சேரிங்கிராஸ் சாலை, ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா சாலை என முக்கியமான சாலை சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கும் பணி நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தலா 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் கொசப்பாடி, பொய்க்குணம், செம்பராம்பட்டு, நெடுமானூர் ஆகிய கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர் . அப்போது அங்குள்ள வீடுகள், வயல்வெளிகளில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த கொசப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் (58), சேஷசமுத்திரத்தை சேர்ந்த முத்து (71), பூட்டை கிராமத்தை சேர்ந்த மார்க்ஸ் லெனின் (39), நெடுமானூரை சேர்ந்த முத்தம்மாள் (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    சங்கராபுரம் அருகே போலீஸ் சப்-இ ன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலா ன போலீசார் மேலப்பட்டு, அரசம்பட்டு ஆகிய பகுதிகளில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியின் ஒரு வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோபால்(47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அரசம்பட்டு கிராமத்தை அஞ்சலை(58) என்பவர் சாராயம் விற்பனை செய்தார். அவரை கைது செய்து அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அவரிடம் இருந்து 5 லிட்டர் ட சாராயத்தை கைப்பற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே தகரை கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது தகரை கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மனைவி செல்வி என்பவர் தனது வீட்டில் சாராயம் விற்றார். அவரிடம் இருந்து 5 லிட்டர் ட சாராயத்தை கைப்பற்றினர். அவர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    • பூலோக கைலாயம் என அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது.
    • இருள் சூழ்ந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சித்தர்கள் வாழ்ந்த பூமியாகும். பிரசித்தி பெற்ற சன்மார்க்க திருச்சபையை நிறுவிய வள்ளலார் சபையும், திருப்பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோவில், அப்பர் பெருமான் கரையேறிய கரைேயறவிட்ட குப்பம் அப்பர் கோவில், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான திருவந்திபுரம் தேவநா தசுவாமி, பண்ருட்டி திருவதிைக வீரட்டானேஸ்வரர் கோவில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், பூலோக கைலாயம் என அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. எனவேதான் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்குள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். ஆனால், இவ்வாறு பக்தர்கள் வந்து செல்வதால் கடலூர் நகர் பகுதியில் இரவு-பகல் பாராமல் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே தான் கடலூர் மாவட்டம் ஆன்மிக ஸ்தலம் என சிறப்பு பெற்று விளங்கி வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக கடலூர் நகர் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்களின் பிடியில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக கடலூர் வண்டிபாளையத்தில் இருந்து கேப்பர்மலை செல்லும் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது.

    முக்கி யமாக வண்டிப்பா ளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து வண்டிப்பாளையம் செல்லும் பகுதி இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த இடைப்பட்ட தூரத்தில் வழிப்பறி கொள்ளையர்கள் வாகன ஓட்டிகள் வருகைக்காக காத்து நிற்கின்றனர். அவ்வாறு வரும் வாகன ஓட்டிகளை பின்தொடர்ந்து அவர்கள் சட்டைப்பையில் இருந்து செல்போன் மற்றும் பணத்தை அலாக்காக பறித்து சென்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாளுக்குநாள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாளுக்கு நாள் கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. எனவே, இருள் சூழ்ந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். எரியாத மின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் கேட்டபோது, வழிப்பறி கொள்ளை சம்பவம் பற்றி எந்தவித புகாரும் இதுவரை வரவில்லை. அப்படி புகார் வந்தால் கொள்ளையர்களின் கொட்டம் அடக்கப்படும். இருப்பினும் அந்த பகுதியில் இரவு நேர ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும் என்றார்.

    • திண்டிவனம் அருகே மணல் ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • தப்பி ஓடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் மற்றும் அதனைச சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் அங்குள்ள ஏரி மற்றும் குளங்களில் மண் மற்றம் மணல் திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்று திண்டிவனம் அடுத்த மேல் பக்கத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த பகுதியில் உள்ள ஓடையில் வாகனம் ஒன்றில் மணல் திருடப்படுவது தெரிய வந்தது. .பின்பு போலீசார் அவர்களை நெருங்கும்போது, அவர்கள் அந்தப் பகுதியில் இருந்து வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடினர்.

    பின்பு அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் ரோசனை காவல் நிலையம் எடுத்து வந்து வாகனத்தின் பதிவு எண் கொண்டு விசாரணை செய்தபோது, அந்த வாகனம் திண்டிவனம் அய்யந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடைய வாகனம் எனத் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
    • அவர்களிடம் இருந்து மொத்தம் 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக சாராயம் விற்றதாக மூலக்காடு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது49), ஆனைமடுவு ஆனந்தன் (28), புளியங்கோட்டைபிரபு (31), ஏழுமலை (34) மற்றும் கொடியனூர் வெள்ளையன் (40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • விழுப்புரத்தில் குடானில் பதுக்கிய 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் குட்கா, பான்பராக், கஞ்சா உள்ளிட்ட போதை பொரு ட்கள் விற்பனையை தடை செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் ேபாலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் உள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் அருகே ராகவ ன்பேட்டை பகுதியில் ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸ் டி.எஸ்.பி. பார்த்தீபனுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அப்போது அங்குள்ள குடோனில் மூட்டை, மூட்டையாக குட்கா பதுக்கி இருப்பது கண்டு பிடி க்கப்பட்டது. அதன் எடை 200 கிேலா ஆகும். இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் என கணக்கிடபபட்டுள்ளது. இதனை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த குட்காவை அப்பாஸ் என்பவர் பதுக்கி வைத்துள்ளார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள். விழுப்புரம் மேற்கு போலீஸ் சரகம் விராட்டி க்குப்பம பகுதியில் அப்துல்மாலிக் என்ப வரது காலி மனையில் அமைக்கப்பட்டுள்ள குளியல் அறையில் குட்கா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை போலீசார் பறி முதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். தொடர்ந்து அதிரடி வேட்டை நடந்து வருகிறது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்ததாக அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (51) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (41) அதே பகுதியில் குன்று மேட்டு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து, அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்ததாக அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (51) என்பவரை போலீசார் கைது செய்து, 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் புதுப்பாலப்பட்டில் பூபதி (50), பாச்சேரி கிராமத்தில் சக்தி் (28), சங்கராபுரம் தாமோதரன் (21), ஊராங்காணியில் தண்ணீர் தொட்டி அருகே சாராயம் விற்றதாக வேலு (50) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×