search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
    X

    சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    சங்கராபுரம் அருகே போலீஸ் சப்-இ ன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலா ன போலீசார் மேலப்பட்டு, அரசம்பட்டு ஆகிய பகுதிகளில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியின் ஒரு வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோபால்(47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அரசம்பட்டு கிராமத்தை அஞ்சலை(58) என்பவர் சாராயம் விற்பனை செய்தார். அவரை கைது செய்து அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×