search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pariharam"

    • நந்தா விளக்கு தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
    • தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதில் பல வகைகள் உள்ளது.

    நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்த காலங்களிலிருந்து, இன்றைய காலம் வரை தீபமேற்றி வழிபாடு செய்யும் பழக்க வழக்கங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கடைபிடித்து வருகின்றார்கள். தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதில் பல வகைகள் உள்ளது. எல்லா தீப வழிபாட்டிற்கும் முதன்மையாக இருப்பது அந்த அக்னிதேவன் தான். நம்மிடம் இருக்கும் கஷ்டங்களை விளக்கக் கூடிய சக்தி இந்த விளக்கிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. தீபவழிபாட்டில் முதன்மையாக சொல்லப்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த அகண்ட தீப வழிபாடு. இந்த தீபத்தினை நந்தா தீபம், ஜோதி தீபம், அணையா தீபம் என்று கூட சொல்லுவார்கள்.

    நந்தா விளக்கு தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது. நந்தா விளக்கு என்பது திரிந்து நந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்பது திரிந்து தூங்காமணி விளக்கு என்றும் அறியப்பெறுகிறது.

    சாதாரணமாக ஒரு வீட்டில் அணையா தீபம் எரிந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் கெட்ட சக்தி நெருங்குவதற்கு ஒரு துளி அளவும் வாய்ப்பு கிடையாது. நல்ல தேவதைகள் வீடு தேடி வர, இந்த அணையா தீபம் துணை நிற்கும். சரி இந்த அகண்ட தீபத்தினை நம்முடைய வீட்டில் எப்படி ஏற்றுவது என்பதை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோமா?

    அகண்ட தீபம், ஜோதி தீபம், நந்தா தீபம் என்று கேட்டாலே கொஞ்சம் பெரிய அளவில் விளக்குகள் உங்களுக்கு கடைகளில் கிடைக்கும். வீட்டில் அணையா தீபம் ஏற்றிவைக்க வேண்டும் என்றால், அதில் திரி நடுவில் எரிய வேண்டும். அதாவது ஜோதி வடிவத்தில்! சாதாரண விளக்கில் திரியை பக்கவாட்டில் தான் போடுவோம். ஆனால் அணையா தீபத்திற்கு திரி நடுவே எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

    இந்த தீபத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம். அணையா தீபம் என்பதால் எண்ணெய் கொஞ்சம் கூடுதலாகத்தான் தேவைப்படும். அதேசமயம் பஞ்சு திரி, நூல் திரி இப்படிப்பட்ட திரிகளை இந்த தீபத்திற்கு பயன்படுத்த கூடாது. கடைகளில் விற்கும் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும் காட்டன் துணியை வாங்கி, வெட்டி திரி போல் திரித்து, அதை இந்த அகண்ட தீபத்தில் போட்டு தான் தீபம் ஏற்ற வேண்டும்.

    24 மணி நேரமும் அணையாமல் தீபம் எரிய வேண்டும் என்பதால் இந்த விளக்கை கொஞ்சம் பெரிய அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். முதன் முதலாக இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் நீங்கள் ஏற்று போகும் அந்த நாள் நல்ல முகூர்த்த நாளாக (வளர்பிறை) இருக்க வேண்டும். முதலில் இந்த தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரமாக இருக்க வேண்டும்.

    ஒரு நல்ல முகூர்த்த நாள் பார்த்து வீட்டில் இருக்கும் பெண்களின் கையால் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் சொல்லிவிடுங்கள். அதன் பின்பு உங்களுக்கு எவ்வளவு தான் கெட்ட நேரம் இருந்தாலும், அதையும் தாண்டி உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற கூடிய வேலைகளை இந்த அகண்ட தீபம் பார்த்துக் கொள்ளும்.

    குழந்தை வரம் வேண்டுமா? பிறவி முக்தி அடைய வேண்டுமா? திருமணம் கைகூட வேண்டுமா? மனை வாங்க வேண்டுமா? பெருக வேண்டுமா? எண்ணிய காரியம் கைக்கூட வேண்டுமா? இந்த தீபத்தை தொடர்ந்த ஏற்று. உன் கோரிக்கை நிறைவேறும் வரை கடவுளின் காலை விடாதே. இதுவே இந்த தீபத்தின் சிறப்பு

    இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அதை அணையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சிறிய தீயில் இந்த தீபத்தை ஒளிர வைத்தால் போதும். எண்ணெய் குறைவாக எடுத்துக் கொள்ளும். எதிர்பாராத சூழ்நிலையில் இந்த தீபம் அணைந்து விட்டால் அது தவறு கிடையாது. வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அந்த தீபத்தில் இருக்கும் கருப்பு நிறத்தை நீக்கிவிட்டு, மீண்டும் தீபத்தை பொருத்திவிட வேண்டும்.

    திரையில் இருந்து எடுத்த அந்த கருப்பு நிற சாம்பலை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்துக்கொண்டு தினம்தோறும் நெற்றியில் இட்டுக்கொண்டால் துஷ்ட சக்தி அண்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றளவும் நிறைய கோவில்கள், பெரிய பெரிய சமாதிகள், பல வீடுகளில் இந்த அகண்ட தீபம் எரிந்து கொண்டுதான் வருகின்றது. இந்த விளைக்கை ஏற்றுவதால் இல்லத்தில் செல்வம் தங்கும். எதிர்மறை சக்திகள் அண்டாது. குடும்பத்தில் அமைதி நிலவும்.

    அந்த ஜோதியின் நிழல் இல்லத்தில் இருக்கும் எல்லா கெட்ட சக்திகளையும் ஒழித்து விடும். அனைத்து தேவதைகளின் அருளும் கிட்டும். மிகவும் எளிமையாக அனைவரும் பின்பற்றக் கூடிய சிறப்பு மிகு வழிமுறையும் தான். வீட்டில் இறையருள் முழுமையாக நிறைந்திருக்கும். அந்த ஜோதியை பார்ப்பதால் மனதில் ஒருவித சாந்தம் குடிகொள்ளும். மனம் ஒருநிலைபடும். மன இறுக்கம் தளர்ந்துவிடுவதை நீங்களே உணர்வீர்கள். குடும்பத்தில் எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுபீட்க்ஷம் உண்டாகும்.

    எந்த பூஜையையும் நாம் முழு மனதுடன் ஆத்மார்த்தமாக பக்தி சிரத்தையுடன் மேற்கொள்வதால் மட்டுமே அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். குடும்பம் நோய் நொடி இன்றி நலமுடன் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விளக்கேற்றுங்கள்.

    ஜல தீபத்தின் முக்கியத்துவம் முன்னோர்களுக்கு தெரிந்ததால்தான் அந்த காலத்தில் நதிகளில் மற்றும் குளங்களில் முக்கியமான நாட்கள் அன்று ஜலதீபத்தை ஏற்ற எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தார்கள். இன்னும் சில கோவில்கள் இந்த பழக்கம் மறக்காமல் கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த தீபத்தை ஏற்றி கஷ்டத்தில் இருந்தவர்கள் பலபேர் சுபிட்சம் அடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பலன் பெறலாம்

    • குளிகை நேரத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் விரைவில் கடன் பிரச்சனை தீரும்.
    • எந்த கிழமையில் வரும் குளிகை நேரத்தில் கடனை அடைக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.

    தீராதக் கடன் தொலையில் தவிப்பவர்களுக்கு தினமும் வரும் குளிகை நேரத்தில் கடனை அடைத்தால் அதாவது நீங்கள் ஒருவருக்கு பத்தாயிரம்ரூபாய் தர வேண்டும் என்றால் அதில் 2000 ரூபாய் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள் என்றால் அந்தத் தொகையை நீங்கள் இந்த குளிகை நேரத்தில் கொடுத்தால் கடன் விரைவில் அடைக்கப்படும். இது அனுபவபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

    இந்தக் குளிகை நேரத்தில் கடன் அடைக்கலாம், சுப காரியங்களை செய்யலாம். சவ அடக்கம் செய்யக்கூடாது. கடன் வாங்க கூடாது. காரணம் இந்த நேரத்தில் நீங்கள் இது போன்ற காரியங்களை செய்தால் அது மறுபடி, மறுபடி நடக்கும். எனவே மன உளைச்சல் தரும் கடன் தொல்லை இருப்பவர்கள் இந்த தினமும் வரும் குளிகை நேரத்தை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

    குளிகை நேரம்

    ஞாயிற்றுக்கிழமை : மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

    திங்கட்கிழமை : மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை

    செவ்வாய்க்கிழமை : மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை. முடிந்தவரையில் செவ்வாய்க்கிழமைகளில் கடன் வாங்குவதை தவிர்க்கவேண்டும். ஆனால் செவ்வாய்க் கிழமையில் மட்டும் எந்த நேரத்திலும் கடனை அடைக்கலாம்.

    புதன்கிழமை : காலை 10.30 மணிமுதல் 12 மணிவரை

    வியாழக்கிழமை : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    வெள்ளிக்கிழமை : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சனிக்கிழமை : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • குலதெய்வம் ஒரு குடும்பத்திற்கு மிகவும் முக்கியம்.
    • நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வம் குலதெய்வம் என்கிறோம்.

    நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வம் குலதெய்வம் என்கிறோம். நம்முடைய முன்னோர்களாகிய இவர்கள் தெய்வமாக மாறி பின் ஒவ்வொரு சந்ததியினரையும் தொடர்ந்து பாதுகாக்கிறார்கள். அவர்களை வழிநடத்தி சென்று நன்மை செய்கிறார்கள். எல்லா தெய்வங்களை காட்டிலும் குலதெய்வம் ஒரு குடும்பத்திற்கு மிகவும் முக்கியம். அந்த குலதெய்வம் அறியாதவர்கள் என்ன வழிபாட்டு முறையை செய்தால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

    ஏதாவது ஒரு பெளர்ணமி அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்யவேண்டும்.

    மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு தலைவாழை இலை போட்டு வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், இனிப்பு, பலகாரம், காதோல கருகமணி, காரவகை, பொரிகடலை மற்றும் சர்க்கரை அல்லது வெண் பொங்கல் வைத்து படையல் போடவேண்டும்.

    செம்பு நிறைய தண்ணீர்வைத்து மாவிலை வைத்து மேலே தேங்காய் வைக்கவேண்டும். தேங்காய் வைத்த செம்பை சுற்றி பிள்ளையார் துண்டினை சுற்றிவிடவும்.

    மஞ்சள் தூள் மூலம் பிள்ளையார் பிடித்துவைத்து அதற்கு குங்குமம் பொட்டிடவேண்டும். இதன் மீது ஜவ்வாது, புனுகு சந்தனம், பச்சைக்கற்பூரம் தெளிக்க வேண்டும். இவைகளை செய்து முடித்தபிறகு எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டாக வெட்டி குங்குமம் தடவி நான்கு பக்கம் வைக்கவேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைத்து தேங்காய் உடைத்து பின் வரும் மந்திரம் சொல்லவேண்டும்.

    ஓம்ஸ்ரீம் அம்உம் வம்லம்சிங்

    ஐயும் கிலியும் சவ்வும்ஜம்ஜம்

    பம் யம் ரம் மஹா குலதெய்வமே

    எங்கு நீ இருந்தாலும் உன் ரூபத்தை என் கண்முன் காட்டு. எதிரிகள் உன்னை கட்டிஇருந்தாலும் கட்டை உடைத்து குலம் காக்க ஓடிவா முப்பாட்டன், பாட்டன், தந்தைவழி குலதெய்வமே குலம் காக்க ஓடிவா

    சர்வதனமே சர்வஜனமே வா வா

    குலதெய்வமே வசிவசி ஹீம்பட் சுவாகா

    இதை 48 முறை சொல்லி பிறகு தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கி பூஜையை நிறைவு செய்யவேண்டும்.

    இதை மூன்று பெளர்ணமி நாட்களில் செய்துவர குலதெய்வம் ஏதோ வழியில் கனவில் கூட தெரியவரும் நம்பிக்கையுடன் செய்யவேண்டும்.

    • அரச மரத்தை சுற்றி வந்தால் அதிக நன்மைகள் அடையலாம்.
    • குழந்தை பாக்கியத்தைப் பெற அரச மரத்தை சுற்றிவரலாம்.

    பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அந்த வகையில் அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகமுண்டு. மரத்தடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ, நிறைவான பலனை அடையலாம். அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள். மூம்மூர்த்திகளின் வடிவமான அரச மரத்தை பூஜை செய்வதும், பிரதட்சணம் செய்து வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாவங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும்.

    சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.30 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று, நமது உடலுக்கு நன்மையைத் தரும். அந்த நேரத்தில் அரச மரத்தை சுற்றி வந்தால் அதிக நன்மைகள் அடையலாம்.

    மற்ற நாட்களைவிட , சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும். அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு. குறிப்பாக, பல நாட்களாக குழந்தை பாக்கியமில்லாதவர்களின் தோஷத்தைப் போக்கி குழந்தை பாக்கியத்தைப் பெற அரச மரத்தை சுற்றிவரலாம்.

    கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் காலை சுமார் 8.00 மணிக்குள், உடல் மற்றும் உள்ளத் தூய்மையுடனும், பக்தியுடனும் அரச மரத்தை 108, 54 அல்லது 12 முறை பிரதட்சணம் செய்ய (வலம் வர) வேண்டும். எல்லா நாட்களிலும் அரச மரத்தை பூஜைகள் பிரதட்சணம், நமஸ்காரம் செய்யலாம். நடுப்பகல், மாலை, இரவு போன்ற நேரங்களில் அரச மரத்தை வழிபாடு செய்வதை தவிர்த்தல் நல்லது.

    • பணக்கஷ்டம் இருந்தால் வீட்டில் நிம்மதியே இருக்காது.
    • பணக்கஷ்டம் தீர இந்த பரிகாரம் பயனுள்ளதாக இருக்கும்.

    இன்றைய நாட்களில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பல பிரச்சனைகள் இருந்தாலும் அதில் நாம் எதிர் கொள்ளும் 90% பிரச்சனைகள் பண பிரச்சனையாக தான் இருக்கும் அல்லது பண சம்பந்தமான பிரச்சனைகளாக இருக்கும். உங்கள் வீட்டில் இந்த ஐந்து பொருட்களும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் வீட்டில் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையே வராது ஏன் பணக்கஷ்டம் என்ற வார்த்தை கூட உங்கள் வாயிலிருந்து வராது அந்த அளவிற்கு பணம் உங்கள் வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்கும்.

    விநாயகர் சிலை : நாம் பொதுவாக எந்த விஷயங்களையும் செய்யும் போது முதலில் வணங்கி விட்டு செய்யும் மூலக்கடவுள் தான் விநாயகர். அப்படிப்பட்ட விநாயகர் நடனம் ஆடுவது போன்ற அமைப்பில் இருக்கும் நடனமாடும் விநாயகர் சிலையை வாங்கி உங்கள் வீட்டின் கதவை பார்த்தவாறு இருக்கும் திசையில் வைத்தால் உங்கள் வீட்டின் பண வரவு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்குமே தவிர ஒரு நாளும் பணக்கஷ்டம் என்ற வார்த்தையை உங்கள் வாயிலிருந்து வராது.

    புல்லாங்குழல் : பொதுவாக நம்மிடம் பணம், செல்வங்கள், தங்கம் சேர வேண்டும் என்றால் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். லட்சுமி கடாட்சம் இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பதற்கு சமம். லட்சுமி கடாட்சத்துடன் விளங்கக்கூடிய பொருள் புல்லாங்குழல். இதை உங்கள் வீட்டில் வைத்திருக்கும் போது உங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து சம்பந்தமான தோஷங்களும் விலகி பணவரவு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

    தேங்காய் : நாம் எந்த கடவுளுக்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்தாலும் அந்த பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய மகத்துவம் வாய்ந்த பொருள் தேங்காய். இந்த தேங்காயில் நேர்மறை ஆற்றலை வெளியிடும் சக்தி அதிகமாக உள்ளது. இந்த தேங்காயை நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்திலும், உங்கள் வீட்டிலும் எப்போதும் இருக்கும்படி செய்து கொண்டே இருந்தால் பண பிரச்சினை என்பதை உங்களுக்கு இருக்காது. உங்களுக்கு பல வழிகளில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

    குபேரன் சிலை : இந்த உலகில் உள்ள ஒட்டு மொத்த செல்வங்களுக்கும் சொந்தக்காரி லட்சுமி தாயார் என்றால் இந்த செல்வங்களை எல்லாம் பாதுகாக்கும் அதிபதி குபேரர் ஆவார். அதனால் செல்வங்களின் அதிபதி குபேரரின் சிலையை வாங்கி உங்கள் வீட்டின் வடக்கு பக்கம் பார்த்தவாறு இந்த திசையில் வைத்தால் உங்கள் வீட்டில் உள்ள பணம் சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

    சங்கு : பொதுவாக நம் சாதாரணமாக ஒரு சங்கை எடுத்து அதை காதில் வைத்து கேட்டாலே அதிலிருந்து ஓம் என்ற ஒலி வருவதை நம்மால் கேட்க முடியும். அப்படி அந்த சங்கில் இருந்து வெளிவரும் ஒலியானது கெட்ட சக்திகளை அழிக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றனர். மேலும் சங்கு லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு பொருள் என்பதாலும் சங்கை வீட்டின் பூஜை அறையில் வைத்து இருந்தால் உங்கள் வீடு செழிப்பதோடு உங்கள் வீட்டில் சகல செல்வங்களும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

    • பலபேருக்கு இந்த பொருள் தெரிந்திருக்கலாம்.
    • இந்த விளக்கு ஏற்றுவது லட்சுமிநாராயண பூஜை செய்ததற்கு சமமானது

    பசும்பாலில் சந்திரனும், பசுந்தயிரில் வாயு பகவானும், கோமியத்தில் வருண பகவானும், பசுஞ்சாணத்தில் அக்னி தேவனும், பசு நெய்யில் சூரியபகவானும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் இந்துக்களின் பல்வேறு சடங்குகளிலும், பூஜைகளிலும், ஆலயங்களிலும் இதற்கென தனித்துவமான இடம் இருக்கிறது.

    பசுவிலிருந்து பெறப்படும் இந்த ஐந்து மூலப் பொருட்களும் ஒன்று கலக்கும் பொழுது அது தெய்வீக தன்மையை அடைகின்றது. அவ்வைந்து பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

    ஒன்று : பசுஞ்சாணம்

    இரண்டு : பசுவின் கோமியம்

    மூன்று : பசும்பால்

    நான்கு : பசுந்தயிர்

    ஐந்து : பசுநெய்

    பலர் தங்களது வீட்டில் வருடத்திற்கு ஒரு முறையாவது கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் என்று சிறிய ஹோமங்களை புரோகிதர்களை அழைத்து செய்து கொள்வார்கள். ஆனால் இதற்கான பணச்செலவும் வேலைப்பளுவும் சற்று அதிகம் தான். காலத்தின் மாற்றத்தால் இப்போதெல்லாம், வீடு கட்டும்போது முதன்முறையாக யாகம் நடத்தியதோடு சரி.

    வீட்டில் ஹோமம் நடத்தும் சூழ்நிலையானது தற்சமயம் இல்லை. என்ன செய்வது? அதற்கு ஈடு இணையாக வேறொரு பரிகாரத்தை தான் கட்டாயம் நாம் செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். ஹோமங்களின் பலன்களையும், புண்ணியங்களையும் தரக்கக்கூடிய ஒரு விளக்கு பஞ்சகவ்ய விளக்கு. பலபேருக்கு இந்த பொருள் தெரிந்திருக்கலாம். இந்த விளக்கைப் பற்றியம் அதன் பலன்கள் பற்றியும் ஒரு சிலர் அறிந்திருப்பார்கள்.

    இந்தப் பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம், இவைகளால் மட்டும் செய்யப்பட்டது.

    வாரம்தோறும் வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை போன்ற தினங்களில் வீட்டை துடைத்து சுத்தப்படுத்திவிட்டு, வீட்டில் ஏதாவது ஒரு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அங்கு சிறிது பன்னீர் தெளித்து, நன்றாக துடைத்துவிட்டு, அரிசிமாவில் கோலம் போட்டு, காவி தீட்டி, ஒரு தாம்பூலத்தின் மேல் பஞ்சகவ்ய விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி இறைவனை வணங்க வேண்டும்.

    இவ்வாறு தீபம் ஏற்றுவதால் ஒரு ஹோமம் செய்வதால் எவ்வளவு பலன்கள் கிடைக்குமோ அவ்வளவு பலனும் இந்த ஒரு விளக்கினை ஏற்றுவதில் கிடைத்துவிடும். பஞ்சகவ்ய விளக்கு ஏற்றி பூஜை செய்த பின் அந்த விளக்கின் சாம்பலை நெற்றியில் வைத்துக்கொள்ளலாம். மீதம் உள்ள சாம்பலை செடியில் சேர்ப்பதன் மூலம் செடிக்கு உரமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த விளக்கு ஏற்றுவது லட்சுமிநாராயண பூஜை செய்ததற்கு சமமானது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது...

    இந்த விளக்கு ஏற்றுவதால் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீரும். செல்வம் பெருகும்.

    • ஏழரை ஆண்டு காலம் சனிபகவான் ஒருவருக்கு பாதிப்பை தருவார்.
    • கண்டக சனி என்பது கழுத்தைப் பிடிக்கும் சனி என்பார்கள்.

    ஏழரை சனியும் அஷ்டமத்து சனியும் ஒரு மனிதனை ஆட்டி படைத்து விடும். கண்டச்சனியும் அர்த்தாஷ்டம சனியும் மனிதர்களை அசர வைத்து விடும். சனியால் சங்கடத்திற்கு ஆளானவர்கள் சில பரிகாரங்களைச் செய்தால் போதும் சனிபகவானை சந்தோஷப்படுத்த முடியும்..அள்ளிக்கொடுப்பாராம் சனிபகவான்.

    ஏழரை ஆண்டு காலம் சனிபகவான் ஒருவருக்கு பாதிப்பை தருவார். ராசிக்கு 12ஆம் வீட்டில் வரும் போது விரைய சனியாகவும் ராசியில் அமரும் போது ஜென்ம சனியாகவும், ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமரும் போது பாத சனியாகவும் மொத்தம் ஏழரை ஆண்டு காலம் உலகத்தின் உண்மை நிலையை உணர வைத்து விடுவார். அதே போல சனி பகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமரும் போது கண்டச்சனியாகவும்..8ஆம் வீட்டில் அமரும் போது அஷ்டமத்து சனியாகவும் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்யும் போது அர்த்தாஷ்டம சனியாகவும் பலன்களைத் தருவார் சனிபகவான்.

    நம்முடைய ஜாதகத்தில் எத்தகைய சனி நிகழ்ந்தாலும் நம்முடைய வினை பயன் மூலமே நன்மையோ தீமையோ நிகழ்கிறது. ஜாதகத்தில் என்ன வகையான சனிகள் இருக்கின்றன.. அவை என்னவெல்லாம் பலன்களை நமக்குக் கொடுக்கும் என்பதைப்பற்றி தான் நாம இந்தக் கட்டுரையில் பார்க்கப்போறோம்.

    ஏழரை சனி

    ஏழரை சனி என்பதனை தோஷமாக கருதுவது தவறு என்பதனை நாம் முதலில் உணர வேண்டும். ஏழரை சனியை ஒருவர் தன் வாழ்நாளில் மூன்று முறை சந்திப்பார்கள். 22 வருடங்களுக்கு ஒருமுறை ஒருவருடைய ஜாதகத்தை ஏழரை சனி ஆட்சி செய்கிறது. இந்த சனி காலத்தில் சிறு சிறு தடங்கல்கள் மட்டுமே ஏற்படுமே தவிர, பெரிய தடங்கல்கள் ஏதும் ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது தற்காலிகமே தவிர நிரந்தரமானது இல்லை. ஏழரை சனி ஏற்படும் ஜாதககாரர்களுக்கு ஏற்படும் பெரிய ஆபத்தை சிறிய தடைகள் மூலம் தடுத்து நிறுத்துவதே ஏழரை சனியின் வேலையாகும். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் சனிபகவான் ஆட்சி செய்யும் போது ஏழரை சனியானது பிறக்கிறது. சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து எள்ளுபொடி கலந்த தயிர் சாதத்தைக் காக்கைகளுக்கு படைத்துவர ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

    ஜென்ம சனி

    ஜென்ம சனி என்பது, ஒருவரின் ராசியில் சனிபகவான் ஒன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது பிறக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்மசனி நிகழும் போது, பல்வேறு இழப்புகள் அல்லது அதற்கு ஏற்றார்போல துன்பங்கள் ஏற்படும் என்பது ஜோதிட வல்லுநர்கள் சொல்லும் வாக்கு. ராகு கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும், சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் ஜென்ம சனியின் தாக்கத்தைக் கட்டுபடுத்த உதவும். வியாழக்கிழமை தோறும் தஷிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை சாத்தி வழிபட்டால் நன்மை உண்டாகும்.

    அஷ்டம சனி

    அஷ்டம சனி என்பது, முன் ஜென்மத்தில் ஒருவர் செய்யும் வினைகளைப் பொறுத்து சனி பகனான் அவர்களுக்கென தண்டனையை கொடுப்பதாகும். வயதிற்கேற்ப அஷ்டமத்து சனி பிரச்னைகளைக் கொடுக்கும். அந்த வகையில், 4 முதல் 15 வயதுள்ளோருக்கு அஷ்டமத்து சனி நிகழ்ந்தால் படிப்பில் சற்று மந்தமாக இருப்பார்கள் மற்றும் 40 வயட்திற்குட்பட்டவர்களுக்கு அஷ்டமத்து சனி நிகழ்ந்தால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும் என்றும் கூறுகிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். அஷ்டமத்து சனியில் இருந்து தங்களை பாதுக்காத்துக்கொள்ள சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய், எள் சேர்த்து விளக்கேற்ற வேண்டும்.

    அர்த்தாஷ்டம சனி

    அர்த்தாஷ்டம சனியானது சனிபகவான் ராசியின் நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பிறக்கிறது. பொருள் மற்றும் நிதி செலவுகளை ஏற்படுத்தும் சனியாகும். தொழில் பாதையை இச்சனியானது பார்ப்பதனால் தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியமாகும். இச்சனியின் தாக்கத்தை தாங்குவதற்கு ஞாயிற்றுகிழமைகளில் சொர்ண ஆகர்ஷண பைரவரையும் சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்கு சென்றும் வழிபடுதல் வேண்டும்.

    கண்டக சனி

    கண்டக சனி என்பது கழுத்தைப் பிடிக்கும் சனி என்பார்கள். குரல்வளையை இறுகப்பிடித்தால் நாம் எப்படி திணறுகிறோமோ அதே போல் ராசியில் ஏழாம் இடத்தில் வரும் இந்த கண்டக சனியால் வரும் இடர்பாடுகள் இருக்கும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால் யோசித்து செயல்பட்டால் இச்சனிகாலத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

    • முருகனுக்கு உகந்தது செவ்வாய்க்கிழமை.
    • செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன் கோவிலும், பழனியும் கருதப்படுகின்றன.

    * செவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன்.

    * பிரபலமான செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன் கோவிலும், பழனியும் கருதப்படுகின்றன.

    * வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி சன்னிதிக்கும், பழனி தண்டாயுதபாணி சன்னிதிக்கும் சென்று வந்தால் மன ஆறுதல் கிடைப்பதுடன் செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

    * இது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

    * முருகனுக்கு உகந்தது செவ்வாய்க்கிழமை. இந்த நாளில் விரதமிருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம்.

    * இவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை) விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    -கு.அருணாசலம், தென்காசி.

    • இஷ்டப்பட்டு செய்யும் வேலையில் தான் நம்மால் முன்னேற்றம் காண முடிகிறது.
    • ஆசைப்பட்ட திருப்தியான வேலை நமக்கு கிடைக்க பிள்ளையாருக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்க்கலாம்.

    எல்லோருக்கும் ஆசைப்பட்ட வேலை கிடைப்பது கிடையாது. மேலும் கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருப்பார்கள். மனதிற்கு பிடித்த வேலை செய்யும் பொழுது தான் அந்த வேலையில் இருக்கும் சுமை நமக்கு தெரியாமல் இருக்கும். இஷ்டப்பட்டு செய்யும் வேலையில் தான் நம்மால் முன்னேற்றம் காண முடிகிறது. எனவே நல்ல வேலையும், ஆசைப்பட்ட திருப்தியான வேலை நமக்கு கிடைக்க பிள்ளையாருக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.

    பிள்ளையாருக்கு கற்பூரவள்ளி இலையின் மீது அதீத பிரியம் உண்டு. இந்த கற்பூரவள்ளி இலையில் பிள்ளையாரின் ஸ்வரூபம் இருக்கிறது. 9 கற்பூரவள்ளி இலைகளை மாலையாக கோர்த்து பிள்ளையாருக்கு போட்டு வாரம் தோறும் புதன் கிழமையில் வழிபடலாம். ஆசைப்பட்ட வேலை வேண்டி பிரார்த்திப்பவர்கள் புதன்கிழமையில் வழிபடுவது நல்லது.

    கற்பூரவல்லி இலைகளுக்கு பதிலாக 9 செவ்வாழை பழங்களை மாலையாக கோர்த்தும் 12 வாரங்கள் விநாயகருக்கு சாற்றி வழிபடலாம். கற்பூரவல்லி இலையை விட செவ்வாழைக்கு அதிக சக்தி உண்டு. இந்த 9 செவ்வாழை பழங்களை இடைவெளி விட்டு நூலில் மாலை போல கட்டிக் கொள்ளுங்கள்.

    இதை விநாயகப் பெருமானுக்கு மாலையாக போட்டு வாரம் தோறும் புதன்கிழமையன்று வழிபட்டு வர வேண்டும். தொடர்ந்து 12 வாரங்கள் வழிபட்ட பின்பு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபாட்டை முடித்துக் கொள்ள வேண்டும்.

    இது போல நீங்கள் ஒவ்வொரு வாரமும் தவறாமல் செய்து வரும் பொழுது 12 வாரத்திற்குள் உங்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். வேலை தேடி ஒவ்வொரு வாரமும் நேர்காணலுக்கு சென்று அலைந்து, திரிந்து, ஓய்ந்து போனவர்களுக்கு விநாயகப் பெருமான் நல்லாசி வழங்குகிறார்.

    வாரம் தோறும் விரதம் இருந்து அசைவ உணவு எடுத்துக் கொள்ளாமல் பிள்ளையாரை முழுமனதாக ஏற்று நம்பி இந்த 9 செவ்வாழை பழ

    மாலையை சாற்றி உண்மையான பக்தியுடன் மனதிற்குள் வேண்டி வணங்கிக் கொள்ளுங்கள். நிச்சயம் எதிர்பார்த்த வேலையும், இஷ்டப்பட்ட வேலையும் மன நிறைவுடன் உங்களுக்கு கிடைக்கும்.

    • ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.
    • 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

    திருமண தடை பெற்றோரை மட்டுமல்லாமல், பிள்ளைகளையும் மன ரீதியாக மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. சரியான வயதில் திருமணம் நடக்காதவர்கள், சில தோஷங்களால் திருமண தடையை எதிர் கொள்ளக்கூடியவர்கள் ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரித்தால் திருமண தோஷம் நீங்கும். ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.

    ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் நடந்தால் தான், அவரின் வாழ்க்கையை சரியாக வழிநடத்திச் செல்ல முடியும். திருமண தடைக்கான தோஷத்தை நீக்கக்கூடிய 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

    மேஷம் :

    தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    ரிஷபம் :

    தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மிதுனம் :

    தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கடகம் :

    தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    சிம்மம் :

    தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கன்னி :

    தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    துலாம் :

    தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    விருச்சிகம் :

    தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    தனுசு :

    தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மகரம் :

    தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் 'ஓம் சோம் சோமாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கும்பம் :

    தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மீனம் :

    தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    • அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    • சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும்.

    முற்பிறவியில் செய்த பாவத்தால் இப்பிறவியில் தீராத துன்பங்களை அனுபவித்து அவதிப்படுபவர்கள், சிவாலயங்களுக்கு சென்று முறையாக வழிபட்டால் தங்கள் முற்பிறவி பாவங்களில் இருந்து விடுபடலாம் என்பது முன்னோர் கூற்று.

    முற்பிறவி பாவங்களை போக்கும் சிவாலயங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் இதில் முக்கிய இடத்தை பிடிக்கும் சிவாலயமாக நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

    குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வை அடைந்து அனைத்து பேறுகளையும் பெற சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வழிபட வேண்டும்

    மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சீயாத்தமங்கை சிவாலயம் ஆகும். மேற்கு நோக்கி உள்ள சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர்.

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனுக்கும், அன்னைக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நாளில்தான். எனவே மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இந்த கோவில் ஆகும்.

    ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பவுர்ணமியில் இந்த கோவிலில் உள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    குழந்தை பாக்கியம், கல்வி, திருமணம் வேண்டுவோர் 5 பவுர்ணமிகளில் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும்.

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகை- கும்பகோணம் சாலையில் உள்ள திருமருகலுக்கு சென்று திருமருகலில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடையலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் நாகப்பட்டினத்துக்கு வந்த மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    • சிவன் பார்வதி படத்திற்கு விளக்கேற்றி வணங்க வேண்டும்.
    • இந்த பரிகாரத்தை 40 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

    களத்திர தோஷத்தால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் திருமணம் நடைபெறாமல் அவதிப்படுகின்றனர். திருமண தடை நீங்க இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும் என்று நிச்சயம்.

    சந்தன கட்டிகள் 7, வெள்ளை கற்கண்டு 7, ஒரு ரூபாய் நாணயம் 7, பச்சரிசி சரியாக 70 கிராம், லவங்கம் 7, பூநூல் 7 மச்சள் தடவாமல் , வெள்ளை மலர் 7, வெள்ளை பட்டு 70 cm

    மேற்கண்ட பொருள் அனைத்தையும் மஞ்சள் துணியில் முடிந்து சிவன் பார்வதி இணைந்த படத்திற்கு முன்பாக வைத்து நெய் தீபம் ஏற்றி தனக்கு திருமணம் விரைவாக அமைய வேண்டும் என்று மானசீகமாக வேண்டிய பின் , அந்த முடிச்சினை சிவன் பார்வதி படத்திற்கு பின்புறம் வைக்க வேண்டும்.

    40 நாட்கள் தொடர்ந்து அந்த சிவன் பார்வதி படத்திற்கு விளக்கேற்றி வணங்க வேண்டும். 40-து நாள் நாள் காலை குளித்து விநாயகரை வணங்கி சிதறு தேங்காய் ஒன்று உடைத்து, குலதெய்வத்தை மனதார எண்ணி, குலதெய்வம் அருகில் இருந்தால் கோவிலுக்கு சென்று வரவும். பின் காணிக்கை முடிச்சை சிவன் பார்வதி இணைந்து(தனித்தனி சந்நிதியில் இருந்தாலும் செய்யலாம்) உள்ள கோவில் அர்ச்சகருக்கு தரலாம் அல்லது கோவில் விருட்சத்தின் கிளையில் கட்டலாம்.

    இதனை காலை நேரத்தில் செய்வது சிறப்பு. நிச்சயமாக எப்பேற்பட்ட களத்திர தோஷமும் நீங்கி திருமண பாக்கியத்தை பெறலாம்.

    ×