search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narasimmar"

    • புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
    • சிவகங்கை ஸ்ரீ மகாபஞ்சமி பிரத்யங்கராதேவி கோவிலில் இந்த பூஜை நடைபெறுகிறது.

    ராமாயண காலத்தில் அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜனுக்கு பல ஆண்டு காலமாக குழந்தை இல்லாமல் மனம் புழுங்கி வந்தாராம்.

    புத்திய காமேஷ்டி யாகத்தை நடத்தினால் குழந்தை செல்வம் கண்டிப்பாக கிடைத்து விடும் என ஏராளமான ரிஷிகள் கூறியதை அடுத்து நம்பிக்கையுடன் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினாராம்.

    அதன்பின் 3 மனைவிகளுக்கு ராமர், லெட்சுமணன், பரதன், சத்துகென் ஆகியோர் பிறந்தார்கள் என ராமாயண வரலாறு கூறுகிறது.

    தற்போது ஏராளமான குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை வேண்டி கோவில் மற்றும் புன்னியஸ்தலங்களுக்காக செல்கின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஸ்ரீமகாபஞ்சமி பிரத்தியங்கரா தேவி கோவிலில் ஆண்டு தோறும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்காக ஸ்ரீமகாபுத்திர காமேஷ்டி யாகம் நடக்கிறது.

    • அதுவே சரபரின் அஷ்டோத்ர சத நாமாவலியாகத் திகழ்கிறது.
    • நரசிம்மரை சாந்தப்படுத்திய சரபேஸ்வரரே சத்ருசைகர்.

    எட்டு கால்களும் இரண்டு முகங்களும் நான்கு கைகளும் கூர்மையான நகங்களும் நான்கு கைகளும் கூர்மையான நகங்களும் இருபுறத்திலும் இறக்கைகளும், சிம்மத்தின் வால்போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், காளியைப் போன்ற தெத்துப் பல்லும் கொண்டு தோன்றும் சரபேஸ்வரருக்கு இரு இறக்கைகளிலும் பத்ரகாளியும் துர்க்கையும் முறையே பிரத்தியங்கிரா, சூலினி என யந்திர வடிவில் சக்தியாக விளங்குகிறார்கள்.

    நீண்ட நாட்கள் நீடித்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர பிரத்தியங்கிரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார்.

    நரசிம்மத்தின் மூர்க்க குணமாக இருந்த கண்ட பெருண்டத்தை தன் வாயிலிட்டு விழுங்கினாள் பிரத்தியங்கிரா தேவி.

    அத்துடன் நரசிம்மர் சாந்தமானார். ஆனாலும், முழுவதும் நீங்கவில்லை.

    சரபத்தினை நரசிம்மம் தாக்கத் தொடங்கியது. சரபத்தின் தாக்குதல் நரசிம்மத்தினைச் சாந்தப்படுத்தவில்லை.

    முடிவில் நரசிம்மத்தின் பாதங்களை இருபுறமும் பிடித்து இரண்டாகக் கிழித்துவிட முயலுகையில் தன்னுணர்வு பெற்ற மகாவிஷ்ணு 18 சுலோகங்களால் சரபேசுவரரைத் துதிக்கிறார்.

    அதுவே சரபரின் அஷ்டோத்ர சத நாமாவலியாகத் திகழ்கிறது.

    நரசிம்மரைச் சாந்தப்படுத்திய சரபேஸ்வரரே சத்ருசைகர்.

    இவரைத் துதிப்போருக்கு எதிரான சக்தியெல்லாம் உடன் ஒழிவது மட்டுமின்றி சரணடைந்தோரின் பிறவிப் பிணியெல்லாம் கூட தீர்ந்துவிடும்.

    சரபேஸ்வரருடன் இருக்கும் பிரத்தியங்கிரா தேவியை வழிபடுவதால் பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்த்து கொள்ள முடியும்.

    பிரத்தியங்கிரா தேவி பிரத்தியங்கிரஸ், பால பிரத்தியங்கிரா, பிராம்பி பிரத்தியங்கிரா, ருத்திர பிரத்தியங்கிரா, உக்கிர பிரத்தியங்கிரா, அதர்வண பிரத்தியங்கிரா,பிராம்மி பிரத்தியங்கிரா, சிம்ம முகக் காளி, ஸ்ரீ மகா பிரத்யங்கிரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள். 

    • சரபபட்சி என்பது சிங்கங்களை கொன்று உண்ணும் பெரிய பறவையாகும். அவர் தான் ஸ்ரீ சரபேஸ்வரர்.
    • இவர் சிவபெருமானின் மறு அவதாரமாக கருதப்படுகிறார்.

    இரணியனைக் கொன்று அவனுடைய ரத்தத்தை உட்கொண்டதால் அவனுடைய ஆணவம் இவரிடம் வந்து சேர்ந்தது, அதுமட்டுமல்ல, இரணியனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷமும் நரசிம்மத்திற்கு வந்து சேர்ந்து விட்டபடியால் கோபம் தணிவதற்குப் பதில் மேலும் கோபம் மேலிட கர்ஜனை செய்து கொண்டே அண்ட சராசரங்களையும் நடுநடுங்க வைத்தார்.

    நரசிம்மத்தின் கோபத்தைத் தணிவிக்க பிரகலாதனும் தேவர்களும் என்னென்னவோ செய்து பார்த்தார்கள்.

    ஆனால், அவரின் கோபம் தணிந்த பாடில்லை.

    இறுதியாகத் தேவர்கள் எல்லோரும் சிவபெருமானைச் சரண் அடைந்தார்கள்.

    தேவர்களின் முறையீட்டைக் கேட்ட சிவபெருமான் தன் பூதகணங்களின் தலைவனாம் தன் வடிவேயான அகோர மூர்த்தியை அனுப்பி வைக்கிறார்.

    ஆனால், நரசிம்மத்தின் ஆவேச சக்தியை அவராலும் தணிக்க முடியாமல் போக வீரபத்திர வடிவத்திலிருந்து ருத்ர மூர்த்தியாம் சிவபெருமான் சரபபட்சியும், மனித உடலும், மிருகமும் கலந்து ஒரு மகா பயங்கர வடிவெடுக்கின்றார்.

    சரபபட்சி என்பது சிங்கங்களை கொன்று உண்ணும் பெரிய பறவையாகும். அவர் தான் ஸ்ரீ சரபேஸ்வரர்.

    இவர் சிவபெருமானின் மறு அவதாரமாக கருதப்படுகிறார்.

    • பார்த்தாயா உன் நாராயணனை! தூள் தூளாகி விட்டான் என்று கூறி ஆணவமாகச் சிரித்தான் இரணியன்.
    • மறுகணம் அந்தப் பிளந்து விழுந்த தூணில் இருந்து திருமால் நரசிங்க வடிவமாக இரணியனின் முன் தோன்றினார்.

    அப்படியானால் அவனை என் கதையாலே அடித்து அவன் கதையை முடிக்கிறேன் பார் என்றவாறே தன் வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி தூணை ஓங்கி அடித்தான்.

    தூண் இரண்டாகப் பிளந்து விழுந்தது.

    பார்த்தாயா உன் நாராயணனை! தூள் தூளாகி விட்டான் என்று கூறி ஆணவமாகச் சிரித்தான் இரணியன்.

    மறுகணம் அந்தப் பிளந்து விழுந்த தூணில் இருந்து திருமால் நரசிங்க வடிவமாக இரணியனின் முன் தோன்றினார்.

    என்ன, ஏது என்று நிதானிப்பதற்குள் இரணியன் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கியது.

    விலங்காகவும் இல்லாமல், மனிதனாகவும் இல்லாமல், தேவனாகவும் இல்லாமல் கூட்டுக் கலவையாகத் தோன்றிய அந்த நரசிங்கம்.

    இரவும் பகலுமற்ற மாலை வேளையில், பூமியில் கொல்லாமல் தன்னுடைய மடியில் இரணியகசிபுவைச் சாய்த்து அவன் உடலைத் தன் கை நகங்களால் பிளந்து ரத்தத்தைக் குடித்துக் கொன்றது.

    தேவர்களும் மக்களும் முனிவர்களும் பெரு மகிழ்ச்சி கொண்டார்கள்.

    ஆனால், அவர்கள் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.

    அதிபயங்கரமான நீண்ட கோரைப் பற்களுடன், தொங்குகின்ற நீண்ட நாக்குடன் கோபத்தினால் சிவந்த கண்களுடனும் கூர்மையான நீண்ட நகங்களுடன் தோன்றிய நரசிம்மம் இரணியனைக் கொன்று முடித்த பின்னும் கோபம் குறையாதவராகவே காணப்பட்டது.

    • இரணியனுக்குக் கோபம் உச்சமடைந்தது. என்னிலும் வலிமையான இறைவன் எங்கிருக்கிறான் என்றான்.
    • பிரகலாதனும் ““எங்கும் இருக்கிறார், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றான்.

    குருகுலத்தில் இருந்து வந்த செய்து கேட்டு இரணியன் கொதித்துப் போனான். தன்னை மூவுலக வாசிகளும் தலைவனாக ஏற்றுக் கொண்ட நிலையில் தன் மைந்தனே தன்னுடைய கருத்துக்கு மாறுபடுவதா என்று பொங்கினான்.

    பிரகலாதனை நயமாக அழைத்து தானே இறைவன் என்பதை ஒப்புக் கொள்ளும்படிச் சொன்னான்.

    ஆனாலும் பிரகலாதன் சர்வ வல்லமை படைத்த கடவுள் எங்கே, இந்த நாட்டுக்கு மட்டுமே அதிபதி யான நீங்கள் எங்கே, என்று மறுமொழி கூறினான்.

    இரணியனுக்குக் கோபம் உச்சமடைந்தது. என்னிலும் வலிமையான இறைவன் எங்கிருக்கிறான் என்றான்.

    பிரகலாதனும் ""எங்கும் இருக்கிறார், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார். அவர் இல்லாத பொருளே இல்லை"" என்றான்.

    "அப்படியானால் நீ சர்வ வல்லமை பொருந்தி யவராக நினைக்கும் உன் நாராயணன் இந்தத் தூணில் இருக்கிறானா?"" என்று இரணியன் கோபமாகக் கேட்டான்.

    நிச்சயமாக என்றான் பிரகலாதன்.

    • கல்வி துவங்குவதற்கு முன் கடவுள் வணக்கம் சொல்ல சொன்னார்கள்.
    • அந்த நாட்டில் இரண்யன் அல்லவா கடவுள். ஆகவே, “ஓம் இரண்யாய நம” என்று கூறச் சொன்னார்கள்.

    இரணிய கசிபுவுக்கு பிரகலாதன் என்ற ஒரு மகன் பிறந்தான்.

    குழந்தைப் பருவம் முதலே அவன் திருமாலின் தீவிர பக்தனாக விளங்கினான்.

    உரிய வயதில் கல்வி கற்க குருகுலம் அனுப்பினார்கள்.

    கல்வி துவங்குவதற்கு முன் கடவுள் வணக்கம் சொல்ல சொன்னார்கள்.

    அந்த நாட்டில் இரண்யன் அல்லவா கடவுள். ஆகவே, "ஓம் இரண்யாய நம" என்று கூறச் சொன்னார்கள்.

    ஆனால், குரு தவறாகக் கூறுகின்றார் என்று சொல்லி உண்மையான கடவுளான நாராயணனின் பெயரை "ஓம் நமோ நாராயணாய நம" என்று சொன்னான் பிரகலாதன்.

    குழந்தைக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை என்று மறுபடியும் "ஓம் இரண்யாய நம" என்று சொன்னார் குரு. மறுபடியும் பிரகலாதன் "ஓம் நமோ நாராயணாய நம" என்று சொன்னான்.

    மறுபடியும் திருத்திச் சொன்னார். ஆனாலும், பிரகலாதன் முன்பு சொன்ன மாதிரியே "ஓம் நமோ நாராயணாய நம" என்று உறுதிபடக் கூறினான்.

    பிரகலாதன் சொல்வது உண்மையான கருத்தாக இருந்தாலும் நமக்கேன் அரசாங்கத்து வீண் பொல்லாப்பு என்று எண்ணி அரண்மனைக்குச் செய்தி சொல்லி பிரகலாதனைத் திருப்பி அனுப்பினார்.

    • இந்த ஆணவத்தால் தானே இறைவனாகக் கருதித் தன்னை வணங்க ஆணையிட்டான்.
    • இறுதியில் தங்கள் துயரத்திற்கு முடிவு கட்டுபவர் திருமாலே என்று முடிவு செய்து அவரிடம் தங்கள் குறையினைத் தெரிவித்தனர்.

    இறவா வரம் பெற்றமையால் தன்னை இறைவனாகவே கருதி அனைவரையும் அடக்கியாள முற்பட்டான். மானுடர்கள், தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் அவன் அதிகாரத்திற்கு அஞ்சினர்.

    இந்த ஆணவத்தால் தானே இறைவனாகக் கருதித் தன்னை வணங்க ஆணையிட்டான்.

    இறைவன் பெயரைக்கூட உச்சரிக்கக்கூடாது என்றும், அதற்குப் பதில் தன்னுடைய பெயரான "இரண்யாய நம" என்பதையே சொல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டான்.

    இறைவனிடம் வரம் வாங்கி மேனிலை அடைந்தவன் அந்த இறைவனின் பெயரைக்கூட சொல்லக்கூடாது என்று ஆணையிடுகிறானே என்று வருந்தினர்.

    இறுதியில் தங்கள் துயரத்திற்கு முடிவு கட்டுபவர் திருமாலே என்று முடிவு செய்து அவரிடம் தங்கள் குறையினைத் தெரிவித்தனர்.

    திருமாலும், அவர்களை நோக்கி வருத்தம் வேண்டாம். இரண்யனுக்குப் பிறக்கும் அவன் மகன் என் தீவிர பக்தனாவான்.

    அவன் மூலமே அவனுக்கு மரணம் சம்பவிக்கும். தகுந்த நேரத்தில் நான் அவனை சம்ஹாரம் செய்வேன் என்றார்.

    அவர்களும் ஆறுதலடைந்து திரும்பிச் சென்றார்கள்.

    • “இரணிய கசிபு” அரக்கர் குலத் தலைவன். இவன் தேவர்களை வெல்வதற்கு வரம் வேண்டி, கடுமையான தவம் செய்தான்.
    • அதற்கு இரணிய கசிபு தனக்கு மரணமே வரக்கூடாது என்ற வரத்தைக் கோரினார்.

    "இரணிய கசிபு" அரக்கர் குலத் தலைவன். இவன் தேவர்களை வெல்வதற்கு வரம் வேண்டி, கடுமையான தவம் செய்தான்.

    அவனுடைய கடும் தவத்தினை மெச்சி சிவபெருமான் அவன்முன் தோன்றினார். ""என்ன வரம் வேண்டும்?"" என்று கேட்டார்.

    அதற்கு இரணிய கசிபு தனக்கு மரணமே வரக்கூடாது என்ற வரத்தைக் கோரினார்.

    ஆனால், சிவபெருமான் அந்த வரத்தைத் தராது உன் விருப்பப்படியே இறக்கும் வரத்தைத் தருகிறேன்.

    நீ எப்படி இறக்க விரும்புகிறாய் என்று கேட்டார்.

    இரணிய கசிபும், "ஐம்பூதங்கள், ஆயுதக் கருவிகள், வானவர், மனிதர், பறவை, விலங்கு யாராலும் எனக்கு மரணம் நேரக்கூடாது. இரவு நேரத்திலும் மரணம் வரக்கூடாது.

    பகலிலும் மரணம் வரக்கூடாது" என்ற வரத்தினைக் கேட்டான்.

    சிவபெருமானும் அவன் கோரியபடியே வரத்தினை அளித்தார்.

    • ஆயிரம் கரங்களிலும் ஆயிரம் ஆயுதங்கள். இவள் மூல மந்திரம் 20 அட்சரங்கள் கொண்டது.
    • நரசிம்மரை அடக்க எழுந்த சரப மூர்த்திக்கு உதவ முன் வந்தவள் பத்ரகாளி என்னும் பிரத்தியங்கிரா தேவி.

    நரசிம்மரை அடக்க எழுந்த சரப மூர்த்திக்கு உதவ முன் வந்தவள் பத்ரகாளி என்னும் பிரத்தியங்கிரா தேவி.

    இவள் பயங்கரத் தோற்றம் கொண்டவள். இவளை சரபத் தீ என்றும் கூறுவார்கள்.

    இவளுடைய பெருமையை விளக்கும் ருக் மந்திரங்கள் ஒன்பது வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

    அதாவது 48 ருக் மந்திரங்கள் இவர் புகழை வெளிப்படுத்துவதால் இவள் அதர்வண பத்ரகாளி என்றும் அழைக்கப்படுவாள்.

    பொதுவாக இந்த மந்திரங்கள் எதிரிகளை வீழ்த்தவே பயன்படுபவையாக உள்ளன.

    நம்மீது பிறரால் ஏவி விடப்படும் தீய சக்திகள் இவள் பேரருளால் ஏவியவர்களைச் சென்று அழிக்கும் என்று ருக் மந்திரம் கூறுகின்றது.

    சிம்ம ரூபம் கொண்டவள். சிம்ம முகம் உடையவள். இறைவன் ஸ்ரீ பைரவரின் துணைவி.

    சூலம், பெரிய கபாலம், பாசம், டமருகம் இவை கொண்ட கரகமலங்கள்.

    கோடிக்கணக்கில் தெற்றுப் பற்கள் நிறைந்த பொந்து போன்ற முகம்.

    சிவப்பேறிய முக்கண்கள். பிறைச்சந்திரன் ஒளி வீசும் தலை. இப்படிப்பட்ட பிரத்தியங்கிரா எட்டு சர்ப்பங்களை அணிந்திருப்பாள்.

    ஆயிரம் கரங்களிலும் ஆயிரம் ஆயுதங்கள். இவள் மூல மந்திரம் 20 அட்சரங்கள் கொண்டது.

    இத்தகைய சிறப்புடைய பிரத்தியங்கிரா தேவியின் அவதாரத்தை அடுத்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    • சிவாலயங்களைப் போன்று நரசிம்மருக்குத் திருமஞ்சனம் நடக்கிறது.
    • "பாடலம்" என்ற சொல்லுக்கு "சிவப்பு" என்றும்"அத்ரி" என்பதற்கு "மலை" என்றும் பொருளாகும்.

    சென்னைக்கும் செங்கல்பட்டிற்கும் இடையே உள்ள சிங்கபெருமாள் கோவில் தலத்தில் எழுந்தருளி வலது காலை மடித்து

    இடது காலைத் தொங்கவிட்டபடி சங்கு சக்கரத் துடன் வலது கரம் அபயக்கரத்துடன் இடது கையைத் தொடை மீது வைத்தப்படி

    காட்சி தரும் பாடலர்தரி நரசிம்மர்.

    ஜாபாலி மகரிஷி தனக்கு மகாவிஷ்ணு நரசிம்மர் வடிவில் காட்சி தர வேண்டும் என்று தவமிருந்தார்.

    இவரது தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர் பிரதோஷ வேளையில் ஜாபாலி மகரிஷிக்குக் காட்சி கொடுத்ததால் பிரதோஷ நேரத்தில்

    சிவாலயங்களைப் போன்று நரசிம்மருக்குத் திருமஞ்சனம் நடக்கிறது.

    "பாடலம்" என்ற சொல்லுக்கு "சிவப்பு" என்றும்"அத்ரி" என்பதற்கு "மலை" என்றும் பொருளாகும்.

    மூலவர் எழுந்தருளியுள்ள சிறிய குன்றைப் பவுர்ணமி நாளில் கிரி வலம் வந்தால் கடன் வாங்க வேண்டிய நிலையே ஏற்படாது.

    செவ்வாய் தோஷம் விலகும், திருமணத் தடை விலகி திருமணம் கைகூடும்.

    சுவாதி மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் ராகு திசையல் உள்ளவர்களும்

    சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பவுர்ணமி நாளில் பாடலாத்ரி மலையைக் கிரிவலம் வந்தால்

    நன்மை ஏற்படும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.

    • தாமிரபரணி கரையில் முத்தாலங்குறிச்சி தவிர வேறு எங்கேயும் லட்சமி நரசிம்மர் தனிச்சன்னத்தியில் இல்லை.
    • லட்சுமி தேவி கூட நரசிம்மரின் கோபத்தினை தணிக்க முடியவில்லை.

    தாமிரபரணி கரையில் முத்தாலங்குறிச்சி தவிர வேறு எங்கேயும் லட்சமி நரசிம்மர் தனிச்சன்னத்தியில் இல்லை.

    நரசிம்ம அவதாரத்தின் போது பெருமான் மிகுந்த கோபத்துடன் இரணியனை வதம் செய்தார்.

    வதம் முடிந்த பிறகும் கூட அவரின் கோபம் தணிந்தபாடில்லை.

    லட்சுமி தேவி கூட நரசிம்மரின் கோபத்தினை தணிக்க முடியவில்லை.

    அந்த சமயம் சிறுவனான பிரகாலாதன் தைரியமாக பகவானை நோக்கி சென்றான்.

    பின் பகவானின் மடியில் போய் தைரியமாக ஏறி அமர்ந்துக்கொண்டான்.

    அவரின் முகத்தினை நோக்கி தனது கையை கொண்டு போய் வருடி விட்டான்.

    வெப்பம் கக்கும் கோபத்தில் இருந்த பகவானின் நாக்கு ஏதோ நீண்ட நெடுங்கை போல் நீட்டிக் கொண்டு பாலன் பிரகலாதன் முதுகில் தேய்த்து தனது சூட்டைத் தணித்தார்.

    கொஞ்சம் கொஞ்சமாக கோபம் தணிந்தது. பகவான் தன் பழைய நிலைக்கு வந்தார்.

    பகவானின் கோபம் தணிந்தபிறகே தேவர்கள், முனிவர்கள் ஏன் லட்சமிதேவியே அருகில் செல்ல முடிந்தது.

    முத்தாலங்குறிச்சி சிவன் கோவில் அருகே உள்ள சன்னதியில் லட்சுமி நரசிம்மர் உள்ளார்.

    இதில் நரசிம்மரின் தொடையில் லட்சுமி அமர்ந்துள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் லட்சுமி நரசிம்மர் கேட்ட வரம் தரும் தெய்வமாக இங்கே அமர்ந்து உள்ளார்.

    இந்த கோவிலை எப்போது வேண்டும்மென்றாலும் திறந்து பக்தர்களுக்கு காட்ட உள்ளூரில் குணவதியம்மன் கோவில் பூசாரி வீட்டில் சாவி உள்ளது.

    ஆகவே இந்த ஊருக்கு சென்றால் உடனே சுவாமி தரிசனம் செய்து விடலாம்.

    இந்த கோவிலுக்கு செல்ல நெல்லை சந்திப்பில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு.

    நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 16 வது கிலோ மீட்டரில் உள்ள செய்துங்கநல்லூரில் இறங்கினால்

    அங்கிருந்து ஆட்டோ மூலம் 6 கிலோ மீட்டரில் உள்ள முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தினை அடையலாம்.

    • தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.
    • சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    1. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் தச அவதாரங்களில் மிக முக்கியமானது, தீமைகளை அழித்து நன்மையை வாழவைத்த ஸ்ரீ நரசிம்ம அவதாரமாகும்.

    இந்த நரசிம்ம அவதாரமே, இத்திருக் கோயிலின் மூல மூர்த்தியாக அமையப்பெற்றுள்ளது.

    2. பதினாறு திருக்கரங்களுடன் அமையப்பெற்ற ஸ்ரீ நரசிம்மர் தமிழ்நாட்டில் இத்தலம் தவிர வேறெங்கும் இல்லை என்பது மிகசிறப்பான ஒன்றாகும்.

    3. இரணியனின் மகன் பிரகலாதனுக்காக இரணியனின் கொடுமைகளை அழிக்க தூணிலிருந்து தோன்றிய அவதாரம் நரசிம்ம அவதாரமாகும்.

    இது சிங்கிரிகுடி நரசிம்மர் வரலாறு குறித்து மார்கண்டேய புராணத்துள் நரசிம்ம வன மாயுத்மியம் என்ற பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

    4. இத்திருக்கோயிலில் அமையப்பெற்ற அனைத்து கல்வெட்டுகளுமே முற்றுபெறாத நிலையில் காணப்படுகிறது.

    இராஜ கோபுரவாயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடைய ஒரு கல்வெட்டு செய்யுள் வடிவில் அமைந்துள்ளது.

    மகா மண்டபத்தின் தெற்கு சுவரில் கி.பி. 12 ம் நூற்றாண்டின் எழுத்தமைதியுடைய கல்வெட்டு ஒன்று உள்ளது.

    5. நீண்ட சதுரமான மாடவீதிகளை கொண்ட சிங்கிரிகுடி எனும் ஊரில் நடுநாயகமாக அமையப் பெற்றுள்ளது இத்திருக்கோயில்.

    6. இத்திருக்கோயில் மேற்குதிசை நோக்கி அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாகும்.

    7. ஐந்து நிலைகளை கொண்ட கம்பீரமான இராஜ கோபுரமும் வைணவ சிந்தாத்தப்படியான 24 தூண்களை கொண்ட வசந்த மண்டபமும் அமைந்துள்ளது.

    8. வைணவத் திருக்கோயிலான இத்திருக்கோயில் இராஜ கோபுரத்தை அடுத்து பிள்ளையார் திருகோயிலும் அமையப்பெற்றது. வேறெங்கும் காண இயலாத தனிச்சிறப்பாகும்.

    9. இத்திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்மர், திருவகீந்திரபுரத்து தேவ நாதனே என திருமங்கை ஆழ்வாரது பாசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

    10. இத்தலத்தில் 1. ஸ்ரீ நரசிம்மர் சன்னதி, 2. ஸ்ரீ கனகவல்லி தாயார் சன்னதி, 3. ஸ்ரீ ஆண்டாள் சன்னதி, 4. ஸ்ரீ ராமர் சன்னதி, 5. ஆழ்வார்கள் சன்னதி, 6. ஸ்ரீ விநாயகர், 7. ஸ்ரீ துர்க்கா சன்னதி ஆகியவை முக்கிய சன்னதிகளாகும்.

    11, சன்னதி திறந்திருக்கும் நேரங்கள்:

    காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை

    மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரை

    12. பூஜை காலங்கள்:

    காலை 9.00 மணி காலைசந்தி

    பகல் 12.00 மணி உச்சிக்காலம்

    மாலை 6.00 மணி நித்தியாணு

    மாலை 6.30 மணி சாயரட்சை

    இரவு 8.30 மணி அர்த்தசாமம்

    13. இத்தலத்து தாயார் பெயர் ஸ்ரீ கனகவல்லித் தாயார்

    14. விமானத்தின் பெயர் ஸ்ரீ பாவன விமானம்

    15. ஜமத்க்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் சிங்கிரிகுடியில் உள்ளன.

    16. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    17. தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.

    18. சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    19. புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்தும் திருப்பாதிரிப்புலியுர் ரயில் நிலையத்திலிருந்து சமதொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

    20. இத்தலம் கடலூர், புதுச்சேரியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

    ×