என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நரசிம்மரின் கோபத்தை தணிக்க பிரத்தியங்கரா தேவியாக அவதாரமெடுத்த காளி
    X

    நரசிம்மரின் கோபத்தை தணிக்க பிரத்தியங்கரா தேவியாக அவதாரமெடுத்த காளி

    • அதுவே சரபரின் அஷ்டோத்ர சத நாமாவலியாகத் திகழ்கிறது.
    • நரசிம்மரை சாந்தப்படுத்திய சரபேஸ்வரரே சத்ருசைகர்.

    எட்டு கால்களும் இரண்டு முகங்களும் நான்கு கைகளும் கூர்மையான நகங்களும் நான்கு கைகளும் கூர்மையான நகங்களும் இருபுறத்திலும் இறக்கைகளும், சிம்மத்தின் வால்போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், காளியைப் போன்ற தெத்துப் பல்லும் கொண்டு தோன்றும் சரபேஸ்வரருக்கு இரு இறக்கைகளிலும் பத்ரகாளியும் துர்க்கையும் முறையே பிரத்தியங்கிரா, சூலினி என யந்திர வடிவில் சக்தியாக விளங்குகிறார்கள்.

    நீண்ட நாட்கள் நீடித்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர பிரத்தியங்கிரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார்.

    நரசிம்மத்தின் மூர்க்க குணமாக இருந்த கண்ட பெருண்டத்தை தன் வாயிலிட்டு விழுங்கினாள் பிரத்தியங்கிரா தேவி.

    அத்துடன் நரசிம்மர் சாந்தமானார். ஆனாலும், முழுவதும் நீங்கவில்லை.

    சரபத்தினை நரசிம்மம் தாக்கத் தொடங்கியது. சரபத்தின் தாக்குதல் நரசிம்மத்தினைச் சாந்தப்படுத்தவில்லை.

    முடிவில் நரசிம்மத்தின் பாதங்களை இருபுறமும் பிடித்து இரண்டாகக் கிழித்துவிட முயலுகையில் தன்னுணர்வு பெற்ற மகாவிஷ்ணு 18 சுலோகங்களால் சரபேசுவரரைத் துதிக்கிறார்.

    அதுவே சரபரின் அஷ்டோத்ர சத நாமாவலியாகத் திகழ்கிறது.

    நரசிம்மரைச் சாந்தப்படுத்திய சரபேஸ்வரரே சத்ருசைகர்.

    இவரைத் துதிப்போருக்கு எதிரான சக்தியெல்லாம் உடன் ஒழிவது மட்டுமின்றி சரணடைந்தோரின் பிறவிப் பிணியெல்லாம் கூட தீர்ந்துவிடும்.

    சரபேஸ்வரருடன் இருக்கும் பிரத்தியங்கிரா தேவியை வழிபடுவதால் பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்த்து கொள்ள முடியும்.

    பிரத்தியங்கிரா தேவி பிரத்தியங்கிரஸ், பால பிரத்தியங்கிரா, பிராம்பி பிரத்தியங்கிரா, ருத்திர பிரத்தியங்கிரா, உக்கிர பிரத்தியங்கிரா, அதர்வண பிரத்தியங்கிரா,பிராம்மி பிரத்தியங்கிரா, சிம்ம முகக் காளி, ஸ்ரீ மகா பிரத்யங்கிரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள்.

    Next Story
    ×