search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padalathri Girivalam"

    • சிவாலயங்களைப் போன்று நரசிம்மருக்குத் திருமஞ்சனம் நடக்கிறது.
    • "பாடலம்" என்ற சொல்லுக்கு "சிவப்பு" என்றும்"அத்ரி" என்பதற்கு "மலை" என்றும் பொருளாகும்.

    சென்னைக்கும் செங்கல்பட்டிற்கும் இடையே உள்ள சிங்கபெருமாள் கோவில் தலத்தில் எழுந்தருளி வலது காலை மடித்து

    இடது காலைத் தொங்கவிட்டபடி சங்கு சக்கரத் துடன் வலது கரம் அபயக்கரத்துடன் இடது கையைத் தொடை மீது வைத்தப்படி

    காட்சி தரும் பாடலர்தரி நரசிம்மர்.

    ஜாபாலி மகரிஷி தனக்கு மகாவிஷ்ணு நரசிம்மர் வடிவில் காட்சி தர வேண்டும் என்று தவமிருந்தார்.

    இவரது தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர் பிரதோஷ வேளையில் ஜாபாலி மகரிஷிக்குக் காட்சி கொடுத்ததால் பிரதோஷ நேரத்தில்

    சிவாலயங்களைப் போன்று நரசிம்மருக்குத் திருமஞ்சனம் நடக்கிறது.

    "பாடலம்" என்ற சொல்லுக்கு "சிவப்பு" என்றும்"அத்ரி" என்பதற்கு "மலை" என்றும் பொருளாகும்.

    மூலவர் எழுந்தருளியுள்ள சிறிய குன்றைப் பவுர்ணமி நாளில் கிரி வலம் வந்தால் கடன் வாங்க வேண்டிய நிலையே ஏற்படாது.

    செவ்வாய் தோஷம் விலகும், திருமணத் தடை விலகி திருமணம் கைகூடும்.

    சுவாதி மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் ராகு திசையல் உள்ளவர்களும்

    சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பவுர்ணமி நாளில் பாடலாத்ரி மலையைக் கிரிவலம் வந்தால்

    நன்மை ஏற்படும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.

    ×