search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MWC 2019"

    ஒப்போ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. #MWC2019 #5GSmartphone



    ஒப்போ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது.  புதிய 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்கிறது. 

    ஸ்மார்ட்போன் வெளியாகும் வரை அதன் பெயரை ரகசியமாக வைக்க ஒப்போ முடிவு செய்துள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் பார்க்க ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் ஃபைண்ட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் 5ஜி ப்ரோடோடைப் மாடல் ஒன்றையும் ஒப்போ அறிமுகம் செய்தது.

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 5ஜி ப்ரோடோடைப் மாடல் டெவலப்பர் வெர்ஷன் என்றும் இதில் தகவல் பரிமாற்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. 5ஜி சேவையை வழங்குவதற்கென ஒப்போ நிறுவனம் ஸ்விஸ்காம், டெல்ஸ்ட்ரா, ஆப்டஸ் மற்றும் சிங்டெல் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.



    இதுதவிர ஒப்போ 5ஜி லேண்டிங் ப்ராஜெக்ட் எனும் திட்டத்தை ஒப்போ அறிவித்திருக்கிறது. இத்துடன் மென்பொருள் டெவலப்பர்களுடன் இணைந்து 5ஜி கிளவுட் கேமிங் சேவையை வழங்கவும் ஒப்போ திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒப்போ பிரீனோ என்ற பெயரில் ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை தனது சாதனங்களில் வழங்க இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போன் மட்டுமில்லாமல் வரும் நாட்களில் குவால்காம் மற்றும் எரிக்சன் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஒப்போ அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போனுடன் 5ஜி மொபைல் கிளவுட் கேமிங் சேவையும் அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டுள்ளது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வைபை சான்று பெற்றிருக்கிறது. #Nokia #Smartphone



    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. நோக்கியா நிறுவனம் TA-1157 என்ற மாடல் நம்பர் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் சமீப காலமாக ஈடுபட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் மாடல் நம்பர் உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும் போது நோக்கியா 3.1 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 3.2 என்று அழைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது. அதன்படி நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் ஒன்றும் வழங்கப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: SlashLeaks

    தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் வைபை அலையன்ஸ் சான்று பெற்றிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் மேலும் சில விவரங்கள் கிடைத்திருக்கிறது. அதன்படி நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் வைபை 802.11 b/g/n மற்றும் வைபை டைரக்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரியும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் அறிமுகமாகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என தெரிகிறது. 

    நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யலாம்.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Nubia #FoldableSmartphone



    நுபியா நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 25 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனின் டீசர்களை வெளியிட்டு வந்த நுபியா தற்சமயம் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஹூவாய் நிறுவனத்தைத் தொடர்ந்து நுபியா தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்ற அறிவித்திருக்கிறது. நுபியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீனா யுனிகாம் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி இருப்பது உறுதியாகியிருக்கிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நுபியா நிறுவனம் நுபியா α என அழைக்கிறது. ஏற்கனவே 2018 ஐ.எஃப்.ஏ. விழாவில் நுபியா தனது அதிநவீன மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக நுபியா α இருக்கும் என்றும் இதில் வளைந்த OLED ஸ்கிரீன் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்திருந்தது.



    நுபியா நிறுவன தலைமை செயல் அதிகாரி நி ஃபெய் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை அதன் ப்ரோடோடைப் சார்ந்த வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிவித்திருக்கிறார். மேலும் புதிய சாதனம் அன்றாட பயன்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

    பார்சிலோனாவில் அடுத்த வாரம் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் சாம்சங், ஹூவாய், சியோமி போன்ற நிறுவனங்களும் தங்களது மடிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றன. அந்த வரிசையில் தற்சமயம் நுபியாவும் இணைந்திருக்கிறது.

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தவிர 5ஜி தொழில்நுட்பமும் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவி்ல் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #Xiaomi #MWC2019
     


    சியோமி நிறுவனம் பிப்ரவரி 24 ஆம் தேதி புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ்களை அந்நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி பிப்ரவரி 24 ஆம் தேதி காலை 10.30 CET மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 3.00 மணி) துவங்குகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் சியோமி நிறுவனம் தனது Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என தெரிவித்திருந்தன. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் சியோமி Mi9 ஸ்மார்ட்போனினை இவ்விழாவில் காட்சிப்படுத்தலாம் என கூறப்படுகிறது.



    இம்மாத துவக்கத்தில் நடந்து முடிந்த சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சியோமி எவ்வித சாதனங்களையும் அறிமுகம் செய்யவில்லை என்பதால், சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தனது சாதனங்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் விழாவில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்வது பற்றி சியோமி சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    எனினும், சியோமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சியோமி தனது 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என தெரிவித்திருந்தது.



    Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நுகர்வோர் மின்சாதன விழாவில் குவால்காம் தனது 5ஜி மோடெம் 2019 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக சுமார் 30 சாதனங்களில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 X 5ஜி ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் சாம்சங் 2019 ஆண்டிற்கான தனது முதற்கட்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் லைவ் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. #Nokia9PureView #Smartphone
     


    நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா லென்ஸ் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக நோக்கியா 9 பியூர் வியூ மாடல் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    நோக்கியா பவர்யூசர் சார்பில் வெளியாகி இருக்கும் புதிய லைவ் புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதும் கிளாஸி பேக் பேனல் கொண்டிருப்பதும் உறுதியாகியிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறம் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: NokiaPowerUser

    ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே நாட்ச் எதுவும் காணப்படவில்லை, இதன் பெசல்கள் தடிமனாகவும் அதில் செல்ஃபி கேமரா, இயர்பீஸ் மற்றும் இதர சென்சார்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக வெளியான ரென்டர்களிலும் நோக்கியா 9 பியூர்வியூ மாடலில் டிஸ்ப்ளே நாட்ச் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் ஐந்து கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் வட்ட வடிவம் கொண்ட டெப்த் சென்சார் இடம்பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ரிஃப்ளெக்டிவ் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 5.99 இன்ச் QHD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, HDR10 வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் ஹெச்.எம்.டி. குளோபல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் மேம்பட்ட கேமரா மோட்களை வழங்கும் என தெரிகிறது.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய டி.வி. மற்றும் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #OnePlus7 #OnePlusTV



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது ஸ்மார்ட்போன்களை மே முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ள ஒன்பிளஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவ்விழாவில் ஒன்பிளஸ் புதிய டி.வி.யை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஒன்பிளஸ் டி.வி.யில் 4K டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி மற்றும் ஏ.ஐ. அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய டி.வி. பற்றி ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரியான பீட் லௌ ஏற்கனவே தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



    ஒன்பிளஸ் டி.வி. தவிர ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    இதே பிராசஸர் லெனோவோ இசட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒன்பிளஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன்களின் கேமரா எதிர்பார்த்த அளவு சிறப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு பெருமளவு எழுந்திருந்ததால், புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் அதிகளவு மேம்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    அந்தவகையில் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் சோனியின் 48 எம்.பி. IMX 586 சென்சார் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுவது வாடிக்கையாகி இருப்பதால், புதிய ஸ்மார்ட்போனில் ஒன்பிளஸ் இதேபோன்ற கேமரா வழங்கலாம்.
    எனெர்ஜைசர் மொபைல் நிறுவனம் நான்கு நாட்களில் அதிகபட்சமாக 26 மொபைல் போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. #EnergizerMobile #MWC 2019



    எனெர்ஜைசர் மொபைல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் மொத்தம் 26 மொபைல் போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஃபீச்சர் போன்களும் அடங்கும். புதிய மொபைல் போன்கள் வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    அந்த வகையில் எனெர்ஜைசர் மெபைல் அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போன்களில் டூயல் பாப்-அப் செல்ஃபி கேமராக்கள், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றொரு ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்ச பேட்டரி கொண்டு இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும்.

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழா நடைபெறும் பார்சிலோனாவில் பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை எனெர்ஜைசர் மொபைல் அரங்கில் மொத்தம் 26 புதிய மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 


    புகைப்படம் நன்றி: GSMArena

    புதிய ஸ்மார்ட்போன்கள் டூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல், ஸ்கேனிங் வசதி மற்றும் 18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என எனெர்ஜைசர் மொபைல் தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது. புதிய எனெர்ஜைசர் மொபைல்கள் நான்கு வெவ்வேறு சீரிஸ்களில் வெளியாக இருக்கின்றன.

    இவை ஹார்டுகேஸ், எனெர்ஜி, பவர் மேக்ஸ் மற்றும் அல்டிமேட் என அழைக்கப்பட இருக்கின்றன. இதில் ஹார்டுகேஸ் சீரிஸ் ரக்கட் ரக ஸ்மார்ட்போன்களாகவும், எனெர்ஜி சீரிஸ் விலை குறைவாகவும், பவர் மேக்ஸ் சீரிஸ் அதிக பேட்டரி திறனும், அல்டிமேட் சீரிஸ் உயர்-ரக ஸ்மார்ட்போன்களாக உருவாகிறது.
    எல்.ஜி. நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் மற்றும் சில சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. #MWC2019 #5G



    எல்.ஜி. நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் ஜி8 ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படாது என தகவல் வெளியானது. இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 24 ஆம் தேதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் வேப்பர் சேம்பர் பயன்படுத்தப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் வேப்பர் சேம்பர் ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

    இந்த வேப்பர் சேம்பர் எல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனின் ஹீட் பைப்-ஐ விட 2.7 மடங்கு பெரியது என்றும் இதில் இருமடங்கு அதிகளவு நீர் இருப்பதாக எல்.ஜி. தெரிவித்துள்ளது. வேப்பர் சேம்பரில் செம்பு பகுதி பெரியதாக இருப்பதால் ஸ்மார்ட்போனில் ஏற்படும் வெப்பம் அதிவேகமாக குறைக்கப்படும்.



    சேம்பரில் இருக்கும் நீர் செம்பு பகுதியில் ஏற்படும் வெப்பத்தை குறைத்து ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்து கொள்ளும். இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இது எல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருப்பதை விட 20% அதிகம் ஆகும்.

    புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 5ஜி வழங்கப்படுகிறது என்றாலும், ஸ்மார்ட்போனின் பேட்டரி அதிகளவு பயன்படுத்தப்படாது என எல்.ஜி. தெரிவித்துள்ளது. கொரியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதில் எல்.ஜி. கவனமாக இருக்கிறது.
    ×