search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Museum"

    • கீழடி அருங்காட்சியகத்தை பார்த்து மெக்சிகோ தூதர் வியப்படைந்தார்.
    • கல்மண்டபம் முன்பு போட்டோ எடுத்து கொண்டார்.

    மதுரை-ராமேசுவரம் சாலையில் சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை இந்தியாவிற்கான மெக்சிகோ நாட்டு தூதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகம் மார்ச் 5 முதல் திறக்க பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் அருங்காட்சியகத்தில் ஆய்வின் போதுகிடைத்த காட்சிபடுத்தப்பட்ட அரிய பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர்.

    உலகதரத்தில் உள்ள கீழடி அகழ்வைப்பகத்தையும் அகழ்வாராய்ச்சி நடந்த அகரம், கொந்தகை, மணலூர் பகுதியை பார்வையிட்ட இந்தியாவுக்கான மெக்சிகோ நாட்டு துாதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி காட்சிப்படுத்தப்பட்டுள்ள 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களை கண்டு ரசித்து வியந்தார்.

    அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்த தூதர் கல்மண் டபம் முன்பு போட்டோ எடுத்து கொண்டார். பின்னர் 7-ம் கட்ட அகழாய்வு நடந்த தளம், திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற் றப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    அவரை கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்று அகழ்வைப்பகத்தில் உள்ள காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பற்றி எடுத்துக்கூறினார்.

    • ரூ.18.43 கோடி மதிப்பில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
    • எப்படி நம் தமிழினம் வாழ்ந்துள்ளது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மஹால் மற்றும் சரஸ்வதி மஹாலில் தமிழக அரசு பொது நூலகத் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி இலக்கியத் திருவிழாவை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்மொழியின் செழுமையினையும், நமது மரபு, பண்பாடு, கலை மற்றும் வரலாற்றினை போற்றிடவும் இவற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை மூலம் பொது நூலக இயக்ககம் வாயிலாக தமிழகத்தில் வைகை, காவிரி, பொருநை மற்றும் சிறுவாணி என நதி நாகரிக மரபு அடிப்படையில் நான்கு இலக்கிய திருவிழாக்களும், சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகின்றது.

    இதில் திருநெல்வேலி, சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏற்கனவே இலக்கிய திருவிழா நடந்து முடிந்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் காவிரி இலக்கியத் திருவிழா தொடங்ககியது. இன்று வரை இந்த விழா நடைபெறுகிறது.

    இவ்விழாவானது இலக்கியங்களை படைப்பு மற்றும், பண்பாட்டினை மையப்படுத்தி படைப்பரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம் என இரண்டு அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி மகாலில் படைப்பு அரங்க நிகழ்வுகளும், சங்கீத மகாலில் பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

    இவ்விழாவில் 45-க்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகள் 30-க்கு மேற்பட்ட தலைப்புகளில் இரண்டு நாட்களும் இலக்கிய விருந்தளித்தனர்.

    இத்திருவிழாவினை பற்றி விழிப்புணர்வினை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் வாசிப்பு சார்ந்த பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி என பல போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.

    முதல்-அமைச்சர் நடவடிக்கையால் ரூ.18.43 கோடி மதிப்பில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் அனைவரும் ஒருமுறை யாவது சென்று பார்க்க வேண்டும். சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலம் எப்படி நம் தமிழினம் வாழ்ந்துள்ளது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி.கே.ஜி. நீலமேகம் , தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி , மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன், சரஸ்வதி மஹால் நூலகம் நிர்வாக அலுவலர் முத்தையா, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் முத்து, பொறியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முருகானந்தம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் பலவித பாரம்பரிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
    • தஞ்ைச சுற்றுலா தலங்கள் வரிசையில் தற்போது இந்த அருங்காட்சியகமும் இடம்பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் கட்டிட வல்லுநர் ராபர்ட் சிஷோலம் என்பவர் தலைமையில் 1896-1900 கால கட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது.

    இந்தோ - சாராசனிக் கட்டிடக்கலை அம்சத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் தான் கடந்த 115 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இட நெருக்கடி காரணமாக தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது .

    இதையடுத்து பழமை வாய்ந்த பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தை பாதுகாத்து அருங்காட்சியமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது .

    அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்ப ட்டுள்ளது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இங்கு வந்து பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து உரிய ஆலோசனை வழங்கினார்.

    இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவு அடைந்ததால் அருங்காட்சியகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகத்தில் 7டி தியேட்டர், அரிய வகை பறவைகள் பூங்கா, இசைக்கு ஏற்றபடி நடனமாடும் செயற்கை நீரூற்று, சரஸ்வதி மகால் நூலக காட்சியறை, பழங்கால சிற்பங்கள் காட்சியறை, நில அளவீட்டு துறை காட்சியறை உள்பட பல்வேறு காட்சிக்கூடங்கள் உள்ளன. மேலும் இந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு அறையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற 10 பொருட்களும் மற்றும் பலவித பாரம்பரிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன. மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் தகவல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது.

    கட்டிடத்தின் வெளியே தரை தளம் முழுவதும் கருங்கல் பதிக்கப்பட்டுள்ளது. பழமை மாறாமல் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சுண்ணாம்பு கலவை பூச்சுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

    அந்தந்த அரசுத்துறைகள் சார்பிலும் பழமையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்படி அருங்காட்சியகம் முழுவதும் அரிய வகை பொக்கிஷங்களால் நிரம்பி உள்ளது. அருங்காட்சியத்துக்கு வரும் மாணவ -மாணவிகள் மிகவும் பயன்பெறுவார்கள். பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.

    இது தவிர தஞ்சைக்கு வரும் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அருங்காட்சியகத்தை பார்வையிடுவர். இதன் மூலம் தஞ்சை நகரில் பெரிய கோவில், மணிமண்டபம், அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வரிசையில் தற்போது இந்த அருங்காட்சியகமும் இடம்பெற்றுள்ளது.

    இந்த அருங்காட்சியக திறப்பு விழா நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் , மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, தாசில்தார் சக்திவேல், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், டாக்டர்கள் சிங்காரவேலு,ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 2000 வகையிலான பறவைகளின் இறகுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட அரிதான பொருட்களை சேகரித்து அருங்காட்சியகம் போல் வீட்டை மாற்றி உள்ளனர்.
    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பழமையான பொருட்களின் மகத்துவம் குறித்து எடுத்து கூறி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் 3 தலைமுறைகளாக பழமையான பொருட்களை சேகரித்தும் 2000 வகையிலான பறவைகளின் இறகுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட அரிதான பொருட்களை சேகரித்து கொடைக்கானலை சேர்ந்த ஜோஸ்வா, அவரது மகன் கேலப் ஆகியோர் அருங்காட்சியகம் போல் வீட்டை மாற்றி உள்ளனர்.

    பலருக்கும் பல வகையான பொழுதுபோக்குகள் உள்ளன. விளையாட்டில் ஆர்வம், புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளிட்ட பலவகையான பொழுதுபோக்குகள் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டும் அரிதான பொருட்களை சேகரித்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    உலகில் பல்வேறு இடங்களில் பல வகையான மனிதர்கள் அரிதான பொருட்களையும், பழமையான பொருட்களையும் சேகரித்து வருவதை பார்க்க முடிகிறது.இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 3 தலைமுறைகளாக அரிதான மற்றும் பழமையான பொருட்களை சேகரித்து வருகின்றனர். தனது தாத்தா காலத்தில் ஆரம்பித்து அவரது மகன் 20 ஆண்டுகளாக பொருட்களை சேகரித்து தற்போது 3-ம் தலைமுறையாக இருக்கக்கூடிய 3 வயது சிறுவன் உட்பட இதனை பொழுதுபோக்காக வைத்துள்ளனர்.

    குறிப்பாக இவர்கள் வீட்டையே அருங்காட்சியகம் போல் பழமையான பொருட்களை வைத்து நிரப்பி உள்ளனர். எளிதாக கிடைக்கக்கூடிய தீப்பெட்டியில் தொடங்கி அரிதாக கிடைக்கக்கூடிய ஓலைச்சுவடி வரை இவர்களது சேமிப்பு நீண்டு வருகிறது. பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட இவர்கள் உலகில் பல்வேறு மூலை முடுக்குகளில் கிடைத்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர்.

    இதே போன்று பல்வேறு இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய 2000 வகைகளுக்கும் மேலாக உள்ள பறவைகளின் இறகுகளும் உலகில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகளும் பழங்காலத்தில் கணக்கு எழுதிய ஓலைச்சுவடிகள் உலகில் அழிந்து போன பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட பத்திர தாள்கள், பல நூறு வருடங்களுக்கு முந்தைய கேமராக்கள், கடலில் கிடைக்கக்கூடிய அரிதான ஓடுகள் வரை இவர்கள் சேகரித்து வைத்துள்ளனர்.

    தாங்கள் வாழ்ந்து வரும் வீட்டையே அருங்காட்சியகம் போல் புத்தகங்கள், பழைய பொருட்களோடு நிரப்பி வைத்துள்ளனர். அரிதான பழமையான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வரக்கூடிய இவர்களது இந்த சேகரிப்பு தொடர்ந்து வருகிறது. இந்த சேகரிப்பின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பழமையான பொருட்களின் மகத்துவம் குறித்தும் எடுத்து கூறி வருகின்றனர். ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இது பெரிதும் உதவியாக உள்ளது. எனவே பழமையான பொருட்களை பாதுகாக்கும் இவர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

    • கைவினை கலைஞர்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை வேண்டும்.
    • பஞ்சலோக சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டு உள்ளது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன், தலைமை கொறடா கோவி. செழியன், ஏடுகள் குழு உறுப்பினர்கள் செல்வம் எம்.எல்.ஏ, பொன்னுசாமி எம்.எல்.ஏ, நல்லதம்பி எம்.எல்.ஏ, மாவட்ட துணை கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை கலைத்தட்டு, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட கைவினை படைப்புகளை பார்வையிட்டு இன்று பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தை ஆய்வு செய்தோம். ஆவின், எரிசக்தி, பூம்புகார் நிலையம், என அனைத்தையும் ஆய்வு செய்தோம்.

    இதில் ஆவின் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 88 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு அதில் 57 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு மீதி உள்ள பாலை முனையத்திற்கு அனுப்பப்படுகின்றன.

    பசுக்கள் நல்ல முறையில் பராமரித்து தரமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பஞ்சலோக சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அருங்காட்சியங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    கைவினை கலைஞர்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, கைவினை பொருட்களை உற்பத்தி செய்யும் கலைஞர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • கடந்த 2005 ஆம் ஆண்டு திடீரென இந்த பைபிள் மாயமானது. பைபிளை தேடும் பணி நடந்து வந்தது.
    • சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் லண்டனுக்கு விரைந்து சென்று மாயமான பைபிள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருங்காட்சியகத்தில் பல்வேறு சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் உள்ளன. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால் என்பவர் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு பைபிள் இந்த அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு திடீரென இந்த பைபிள் மாயமானது. இதையடுத்து பைபிளை தேடும் பணி நடந்து வந்தது.இந்த சூழ்நிலையில் லண்டனில் இந்த புதிய ஏற்பாடு பைபிள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் லண்டனுக்கு விரைந்து சென்று மாயமான பைபிள் இருப்பதை உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலம் பைபிளை தமிழத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    பைபிள் மீட்கப்பட்ட பிறகு பிறகு தஞ்சைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறித்து சிலை கடத்த தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடல்வாழ் உயிரினம் அமோனைட்சுக்கு பெரம்பலூரில் மையம் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.
    • இந்த பூமியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமோனைட்ஸ் தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    பெரம்பலூர்:

    6½ கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன கடல்வாழ் உயிரினம் அமோனைட்சுக்கு பெரம்பலூரில் மையம் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.

    41 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி சுமார் 6½ கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ் எனப்படும் தலைக்காலி (நத்தை போன்ற தோற்றமுடையது) குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட,

    அதன் தொல்லுயிர் எச்சங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக ''அமோனைட்ஸ் மையம்" பெரம்பலூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அமோனைட்ஸ் மையத்தை பொதுமக்களுடன் பார்வையிட்டார்.

    பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மையத்தில் அமோனைட்ஸ்களின் முழு உருவம் எவ்வாறு இருக்கும் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக அந்த உயிரினத்தின் மாதிரி தோற்றம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவில் அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தொல்லுயிர் எச்சங்களை பாதுகாத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்தில் தொல்லுயிர் பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் தொல்லுயிர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த பூமியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமோனைட்ஸ் தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அவற்றில் 150-க்கும் மேற்பட்ட தொல்லுயிர் எச்சங்கள் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்றவை என்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

    தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள அமோனைட்ஸ் மையத்தில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்துள்ள சில அரியவகை அமோனைட்ஸ்களின் எச்சங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களும், ஆராய்ச்சியாளர்களும், ஆய்வறிஞர்களும், மாணவ-மாணவிகளும் இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியங்களை உருவாக்க மத்திய அரசு ரூ. 195 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
    மணிப்பூர்:

    மணிப்பூர், தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள லுவாங்காவ் கிராமத்தில் ராணி கைடின்லியு பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

    இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பழங்குடியினர் நல விவகார அமைச்சகம் ரூ.15 கோடி நிதி ஒதுக்கி அனுமதி வழங்கி உள்ளது.

    இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-

    இந்தியாவின் சுதந்திரத்தில் பழங்குடியின மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் நகர்ப்புற மக்களுக்குத் தெரியாது.  அதனால்தான் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற அருங்காட்சியகங்களை உருவாக்க முடிவு செய்தார். இதற்காக மத்திய அரசு ரூ.195 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதில், ரூ.110 கோடி  வழங்கப்பட்டுள்ளது.

    பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்படுவதன் மூலம், நமது சமூகத்தை ஒருங்கிணைக்க உதவும்.

    குஜராத், ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மணிப்பூர் ஆகிய இடங்களில் அருங்காட்சியகங்கள் கட்டப்படும். இது தேசபக்தியை வளர்க்கும். பழங்குடியினர் மேம்பாட்டுக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.

    ஐதராபாத் நிஜாம் பயன்படுத்திய தங்க டிபன் பாக்ஸ், டீ-கப், ஸ்பூன் ஆகியவை அருங்காட்சியகத்தில் இருந்து திருடு போன நிலையில், நேற்றிரவு மேற்கண்ட பொருட்களை போலீசார் மீட்டனர். #HyderabadNizam
    ஐதராபாத்:

    சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பல குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது ஐதராபாத் நிஜாம் மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. கடைசியாக 7-வது நிஜாம்உஸ்மான் அலிகான் பகதூர் ஆவார். அவருக்கு பின் நாடு சுதந்திரம் பெற்று ஐதராபாத் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    நிஜாம் மன்னர்கள் அரண்மனையில் பயன்படுத்திய பொருட்கள் ஐதராபாத்தில் புரானி ஹவேலியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடைசி நிஜாம் பயன்படுத்திய தங்கத்தால் ஆன 5 அடுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் தங்க டீ கப்-சாசர், தங்க ஸ்பூன் ஆகியவையும் இடம்பெற்று இருந்தது. இவை விலைமதிப்பற்றது.

    இந்த தங்க டிபன் பாக்ஸ் மற்றும் டீ கப்-சாசர், ஸ்பூன் ஆகியவை கடந்த 4-ம் தேதி திருடு போனது. மியூசியத்தின் 2 அடி அகலம் கொண்ட வென்டிலேட்டர் வழியாக கயிறுகட்டி உள்ளே இறங்கி வந்த கொள்ளையர்கள் பொருட்களை கொள்ளையடித்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதனை அடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நேற்றிரவு 2 கொள்ளையர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து தங்க டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நண்பர்களான இரண்டு கொள்ளையர்களும் கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு திருடியுள்ளதாக போலீஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பொக்கி‌ஷங்களை அருங்காட்சியகத்தில் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சாமி கோவிலில் ரகசிய நிலவறைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நிலவறைகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகள் திறந்து பார்த்த போது விலைமதிப்பற்ற ஏராளமான தங்கம், வைரம், வைடூரிகம் போன்ற பழமையான நகைகள் அடங்கிய பொக்கி‌ஷம் இருப்பது தெரிய வந்தது.

    இங்குள்ள பெரிய நிலவறையான ‘பி’ நிலவறை மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அந்த நிலவறையில் மேலும் ஏராளமான பொக்கி‌ஷம் இருக்கும் என்று கருதப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகே இந்த நிலவறையை திறக்க முடியும்.

    பத்மநாபசாமி கோவிலில் பொக்கி‌ஷம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த கோவிலில் செய்யப்பட்டுள்ளது. கமாண்டோ பாதுகாப்பு படையினரும் அந்த கோவிலின் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பத்மநாபசாமி கோவிலில் கிடைத்த பொக்கி‌ஷங்களை பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக இவற்றை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக கேரள சட்டசபையிலும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேசியதாவது:-

    பத்மநாபசாமி கோவிலிலில் உள்ள பொக்கி‌ஷங்களை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்றால் அதற்கு சுப்ரீம் கோர்ட்டு மற்றும் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தின் அனுமதியுடன் மட்டுமே இதை செய்ய முடியும். அரசு அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    பத்மநாபசாமி கோவிலின் அருகிலேயே அமையுமாறு இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். உலகில் பல நாடுகளில் இது போன்ற அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த அருங்காட்சியகமும் அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பத்மநாபசாமி கோவில் பொக்கி‌ஷங்களை அருங்காட்சியகத்தில் வைப்பது தொடர்பாக ஏற்கனவே திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் கருத்து தெரிவித்து இருந்தனர். அப்போது பொக்கி‌ஷங்களை அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு பதில் அந்த அபூர்வ நகைகளை 3டி புகைப்படங்களாக எடுத்து அதை அருங்காட்சியகத்தில் வைப்பதே பாதுகாப்பாக இருக்கும் என்று கூறி இருந்தனர்.

    சிவகங்கை கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். #MinisterPandiarajan

    மதுரை:

    மதுரைக்கு விமானம் மூலம் வந்த அமைச்சர் மாபா. பாண்டியராஜன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த இரண்டு மாதமாக 4-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து முடிந்துள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய தொண்மையாக பொருட்கள் கிடைத்துள்ளன.

    ஆய்வில் தங்க ஆபரணம் கிடைத்துள்ளது. புதையல் எதுவும் கிடைக்கவில்லை. கீழடியில் கிடைத்த பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து விரிவான அறிக்கை வருகிற 25-ந்தேதி சட்டமன்றத்தில் வெளியிடப்படும்.

    கீழடியை விட திருவள்ளூரில் கற்கால ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    ஆதிச்சநல்லூர், கீழடி, திருவள்ளூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பொருட்களை வைத்து ரூ. 14 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ரூ. 50 லட்சம் செலவில் ஆய்வு மையம் உருவாக்கி உலகத் தரம்மிக்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterPandiarajan

    ×