search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monkey"

    ஜெயங்கொண்டம் தா.பழூர் அருகே நாய்குட்டிக்கு தாயாக மாறிய குரங்கை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கூத்தங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குட்டி போட்டு 5 நாட்களே ஆன கண் திறக்காத நாய்க்குட்டியை குரங்கு ஒன்று 3 நாட்களாக தூக்கி கொண்டு தனது குழந்தையை போல் பார்த்து கொள்கிறது. மேலும் அந்த குட்டியுடன் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது. அப்பகுதியில் உள்ள வீட்டு மாடி, ஓட்டு வீடுகளில் மேலே நாய்க்குட்டியை வைத்து கொண்டு, அந்த குரங்கு சுற்றி வருகிறது. மேலும் அந்த நாய் குட்டிக்கு குரங்கு பால் கொடுத்து, மடியில் போட்டு பேன் பார்க்கிறது. இதையடுத்து ஒரு குழந்தையை போல் நாய்க்குட்டியை தோளில் போட்டு தூங்க வைப்பதும், நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றி திரிவது, மரங்களில் தாவி கொண்டிருக்கின்றது. மேலும் அந்த குரங்கு, நாய்க்குட்டியை பார்த்து கொள்ளும் பாவனைகளை மக்கள் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்து வருகின்றார்கள்.

    இந்நிலையில் அந்த குரங்கிற்கும், கிராம மக்கள் தினமும் ரொட்டி மற்றும் சாதம் கொடுத்து ஆச்சரியமாக பார்த்து ரசித்து வருகின்றனர். விலங்குகளுக்குள் இருக்கும் நேயம் மனிதர்களிடத்தில் இருப்பதில்லை. தாயை பிரிந்து தவிக்கும் கண் திறக்காத நாய்க்குட்டியை அனைத்தபடி தாய்பால் மற்றும் பாசத்தையும் ஊட்டி வளர்க்கும் குரங்கு ஒன்று தா.பழூர் பகுதியில் சுற்றி வருவதை பொதுமக்கள் பார்த்து அதிசயித்து வருகின்றனர். குரங்கும், நாயும் எதிரிகளாக இருந்த காலம் மாறி தற்போது மனிதனுக்கு மாறாக மனித நேயத்துடன் இனக்கமாகவும் இருக்கின்றன. இதனை பார்த்த பின் மனிதர்கள் மத்தியில் சாதி, மதம், இனம் கடந்த மனித நேயம் காணப்படுமா? என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வியந்து பார்க்கின்றனர். 
    மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு, உடல் நலம் தேறிய பின் குரங்கை யசோதா தத்தெடுத்து கொண்டு தனது வீட்டில் வளர்த்து வருகிறார். #Yashodha #Monkey #SaviourMother
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கலபுரகி (மாவட்டம்) டவுன் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் யசோதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள எல்லம்மா கோவில் அருகே உள்ள மைதானத்துக்கு சென்றார். அப்போது, அந்த மைதானத்தில் ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.



    இதனால், அங்கு என்ன நடக்கிறது? என்பதை அறிய யசோதா அங்கு சென்றார். அப்போது, குரங்கு ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்தப்பகுதியில் உள்ள மின்வயரில் சென்றபோது அந்த குரங்கை மின்சாரம் தாக்கியதும் தெரியவந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக குரங்கை மீட்டு அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். உடல் நலம் தேறிய குரங்கை யசோதா தத்தெடுத்து கொண்டு தனது வீட்டில் வளர்த்து வருகிறார். குரங்கு அவருடன் நன்றாக பழகி, அவர் கூறுவதை கேட்டு நடந்து கொள்கிறது. தனது குழந்தையை இடுப்பில் சுமந்து செல்வது போல் குரங்கையும் அவர் தூக்கி செல்வது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.



    இதுகுறித்து யசோதா கூறுகையில், ‘மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. காப்பாற்ற முயன்றால் குரங்கு கடித்து விடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உதவி செய்யவில்லை. நான் குரங்கை மீட்டு சிகிச்சை அளித்தேன். தற்போது குரங்கு நன்றாக உள்ளது. குழந்தை போல் பாசமாக என்னிடம் குரங்கு உள்ளது’ என்றார்.  #Yashodha #Monkey #SaviourMother
    உத்தர பிரதேசத்தில் வங்கி நுழைவு வாயிலில் நடந்து சென்றவரிடம் இருந்து ரூ. 2 லட்சம் பணப்பையை குரங்கு பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ஆக்ரா:

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் ‘நை மண்டி’ பகுதியைச் சேர்ந்தவர் விஜய் பன்சால். அங்கு கடை வைத்திருக்கும் அவர் தனது மகள் நான்சியுடன் இரு தினங்களுக்கு முன்பு உள்ளூரில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்றார். வங்கியில் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து, பிளாஸ்டிக் பையில் வைத்து கொண்டு தனது மகளிடம் கொடுத்துள்ளார் விஜய் பன்ஸால்.

    பின்னர் இருவரும் நடந்தபடியே வெளியே வந்துள்ளனர். அப்போது திடீரென சில குரங்குகள் அவர்களை சூழ்ந்து கொண்டன. அந்த குரங்குகள் அவர்களை தாக்க முயன்றன. அதில் ஒரு குரங்கு நான்சி கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை சுற்றப்பட்ட பிளாஸ்டிக் பையை பறித்துக் கொண்டு ஓடியது.

    அந்த குரங்கை விரட்டியபடி விஜய் பன்சால் சென்றார். வங்கி ஊழியர்கள் சிலரும், அந்த பகுதி மக்களும் அவருக்கு உதவி செய்ய ஓடி வந்தனர். ஆனால் குரங்கு அருகில் இருந்த கட்டடத்தின் மாடிக்கு தாவிச் சென்று அமர்ந்து கொண்டது. அனைவரும் அந்த குரங்கிடம் கெஞ்சினர்.

    சற்று நேரத்திற்கு பிறகு பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்து அதில் இருந்து ரூபாய் நோட்டுக்களை கிழித்தபடியே வீசி ஏறிந்தது. சுமார் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இதுபோலவே வீசி எறிந்த குரங்கு, பின்னர் மீண்டும் பணத்துடன் அங்கிருந்து ஓடியது.

    அனைவரும் குரங்கை விரட்டிச் சென்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து குரங்கு ஓடி மறைந்தது. 60 ஆயிரம் ரூபாயை குரங்கிடம் இருந்து மீட்ட விஜய் பன்சால், மீதமுள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார். பின்னர் இதுபற்றி போலீஸில் புகார் கொடுக்கச் சென்றார்.

    ஆனால் போலீசாரோ, இந்த சம்பவம் தொடர்பாக எப்படி வழக்கு பதிவு செய்வது என குழம்பிபோயுள்ளனர். குரங்கு தாக்கியதாக வழக்கு பதிவு செய்ய முடியும், குரங்கு கொள்ளையடித்ததாகவோ அல்லது பணத்தை பறித்துச் சென்றதாகவோ வழக்கு பதிவு செய்ய முடியாது எனக் கூறினர்.

    இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து விஜய் பன்சால் புகார் அளித்துள்ளார். உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குரங்கை தேடி பணத்தை மீட்டு தருமாறு கோரியுள்ளார்.
    ×