search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணப்பை"

    • மருத்துவ செலவுக்கு கொளத்தூரில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றார்.
    • சாலையில் சென்றபோது, ஹெல்மெட் தவறி விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு பார்த்தபோது, வண்டியில் இருந்த பணப் பையை காணவில்லை.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர், கத்திரிப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராஜா (வயது 55). இவர் நேற்று முன்தினம் மருத்துவ செலவுக்கு கொளத்தூரில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றார். அந்த பணத்தை, மொபட்டில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    கொளத்தூர் ஒன்றிய அலுவலகம் பின்புற சாலையில் சென்றபோது, ஹெல்மெட் தவறி விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு பார்த்தபோது, வண்டியில் இருந்த பணப் பையை காணவில்லை. இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில், கொளத் தூர் போலீசார் அப்பகுதி யில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.

    • பையில் 2000 ரூபாய் பணம், ஆதார் கார்டு, ஏ.டி.எம் கார்டு இருந்தது.
    • போலீசார் உரியவரை வரவழைத்து ஒப்படைத்தனர்

    அரவேணு,

    கோத்தகிரி தினசரி மார்க்கெட்டில் பணப்பை ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற கெட்சிகட்டி யை சேர்ந்த மணி என்பவர் பார்த்தார். பின்னர் அதனை எடுத்த பார்த்தார். அப்ேபாது அந்த பையில் 2000 ரூபாய் பணம், ஆதார் கார்டு, ஏ.டி.எம் கார்டு இருந்தது.

    அதனை ஒப்படைப்பதற்காக நீண்ட நேரமாக அங்கேயே காத்திருந்தார். ஆனால் யாரும் வராததால் நேராக, கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.

    அங்கு இருந்த போலீசாரிடம் இந்த பணப்பை கீழே கிடந்தது. யாருடையது என்று தெரியவில்லை என கூறி அதனை ஒப்படைத்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த பணப்பை யாருடையது என்பதை கண்டறிய அதில் இருந்த பொருட்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த ஆதார்கார்டு மூலம், பணப்பையை தவறவிட்டது, கூடலூர் ஒவேலியை சேர்ந்த கலாதேவி என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர்.

    உடனடியாக அதில் இருந்த போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அந்த பெண்ணும் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    போலீசார் அவரிடம் விசாரித்த போது, தனது உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் கூடலூர் திரும்பிய போது பணப்பையை தவற விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து குன்னூர் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் ஆகியோர் கலாதேவியிடம் பணப்பையை ஒப்படைத்தனர். மேலும் பணப்பையைக் கண்டெடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மணியை போலீஸ் துணை சூப்பிரண்டு பாராட்டி ஊக்குவித்தார்.

    கீழே கிடந்த பணப்பையை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த மணிக்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    உத்தர பிரதேசத்தில் வங்கி நுழைவு வாயிலில் நடந்து சென்றவரிடம் இருந்து ரூ. 2 லட்சம் பணப்பையை குரங்கு பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ஆக்ரா:

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் ‘நை மண்டி’ பகுதியைச் சேர்ந்தவர் விஜய் பன்சால். அங்கு கடை வைத்திருக்கும் அவர் தனது மகள் நான்சியுடன் இரு தினங்களுக்கு முன்பு உள்ளூரில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்றார். வங்கியில் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து, பிளாஸ்டிக் பையில் வைத்து கொண்டு தனது மகளிடம் கொடுத்துள்ளார் விஜய் பன்ஸால்.

    பின்னர் இருவரும் நடந்தபடியே வெளியே வந்துள்ளனர். அப்போது திடீரென சில குரங்குகள் அவர்களை சூழ்ந்து கொண்டன. அந்த குரங்குகள் அவர்களை தாக்க முயன்றன. அதில் ஒரு குரங்கு நான்சி கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை சுற்றப்பட்ட பிளாஸ்டிக் பையை பறித்துக் கொண்டு ஓடியது.

    அந்த குரங்கை விரட்டியபடி விஜய் பன்சால் சென்றார். வங்கி ஊழியர்கள் சிலரும், அந்த பகுதி மக்களும் அவருக்கு உதவி செய்ய ஓடி வந்தனர். ஆனால் குரங்கு அருகில் இருந்த கட்டடத்தின் மாடிக்கு தாவிச் சென்று அமர்ந்து கொண்டது. அனைவரும் அந்த குரங்கிடம் கெஞ்சினர்.

    சற்று நேரத்திற்கு பிறகு பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்து அதில் இருந்து ரூபாய் நோட்டுக்களை கிழித்தபடியே வீசி ஏறிந்தது. சுமார் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இதுபோலவே வீசி எறிந்த குரங்கு, பின்னர் மீண்டும் பணத்துடன் அங்கிருந்து ஓடியது.

    அனைவரும் குரங்கை விரட்டிச் சென்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து குரங்கு ஓடி மறைந்தது. 60 ஆயிரம் ரூபாயை குரங்கிடம் இருந்து மீட்ட விஜய் பன்சால், மீதமுள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார். பின்னர் இதுபற்றி போலீஸில் புகார் கொடுக்கச் சென்றார்.

    ஆனால் போலீசாரோ, இந்த சம்பவம் தொடர்பாக எப்படி வழக்கு பதிவு செய்வது என குழம்பிபோயுள்ளனர். குரங்கு தாக்கியதாக வழக்கு பதிவு செய்ய முடியும், குரங்கு கொள்ளையடித்ததாகவோ அல்லது பணத்தை பறித்துச் சென்றதாகவோ வழக்கு பதிவு செய்ய முடியாது எனக் கூறினர்.

    இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து விஜய் பன்சால் புகார் அளித்துள்ளார். உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குரங்கை தேடி பணத்தை மீட்டு தருமாறு கோரியுள்ளார்.
    ×