search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்க்குட்டி"

    • அதிசய நிகழ்ச்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது.
    • நாயுடன் குரங்கு விளையாடுவதை காண சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குடிகாடு பகுதியில் ஒரு வீட்டில் நாய்க்குட்டி வளர்த்து வருகின்றனர். அந்த நாய்க்குட்டியை, பார்ப்பதற்கு ஒரு குரங்கு தினமும் குடிகாடு கிராமத்திற்கு வருகிறது.

    பின்னர் சாலையில் சுற்றித்திரியும் அந்த நாய்க்குட்டியை குரங்கு லாவமாக தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள உயரமான கட்டிடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்கிறது. பின்னர் அந்த நாய்க்குட்டியுடன் குரங்கு ஆனந்தமாக விளையாடி மகிழ்கிறது.

    இது மட்டுமின்றி குரங்கு தனது குட்டி குரங்குகளுக்கு எப்படி பேன் பார்க்குமோ அதேபோல் அந்த குட்டி நாய்க்கும் பேன் பார்ப்பது போல் பாவனை செய்கிறது. மேலும் உயரமான கட்டிடத்தில் நாய்க்குட்டி விளையாடுவது மட்டுமின்றி குரங்குடன் எந்தவித சண்டையும் போடாமல் ஆனந்தமாக இருப்பதை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆனந்தமாகவும், வியப்புடனும் பார்த்து வருகின்றனர்.

    தினமும் அந்த வீட்டு பகுதிக்கு வரும் குரங்கு, நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு தனக்கு பிடித்தமான இடத்தில் வைத்துக்கொண்டு ஆனந்தமாக விளையாடி மகிழ்கிறது.

    பெரும்பாலும் குரங்குகள் மற்ற பிராணிகளுடன் விளையாடுவதை விரும்பாமல் மரங்களை விட்டு மரங்கள் தாவியும் தனக்கான உலகத்தில் யாரையும் அண்டவிடாமல் பாதுகாப்பாக இருந்து வரும் நிலையில், குரங்கு ஒன்று நாய்க்குட்டியை தினமும் தூக்கி சென்று விளையாடி விட்டு மீண்டும் அதே பகுதியில் இறக்கி விட்டு செல்வது அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது இந்த அதிசய நிகழ்ச்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது. நாயுடன் குரங்கு விளையாடுவதை காண சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர். தங்களது செல்போன்களிலும் படம் பிடித்து கொள்கின்றனர்.

    பெருந்துறை அருகே 80 அடி கிணற்றுக்குள் விழுந்த நாய்க்குட்டி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள சின்ன மடத்து பாளையம் கோவை மெயின் ரோடு பகுதியில் முருகன் என்பவரது வீட்டுக்கு அருகே 80 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. அந்த பகுதியில் ஒரு நாய் குட்டி வந்தது.

    அப்போது அந்த கிணற்றுக்குள் நாய்க்குட்டி எதிர்பாராதவிதமாக விழுந்து விட்டது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி, கிணற்றுக்குள் இறங்கி நாய்க்குட்டியை உயிருடன் மீட்டனர்.

    ×