80 அடி கிணற்றுக்குள் விழுந்த நாய்க்குட்டி

பெருந்துறை அருகே 80 அடி கிணற்றுக்குள் விழுந்த நாய்க்குட்டி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
80 அடி கிணற்றுக்குள் விழுந்த நாய்க்குட்டி
Published on

பெருந்துறை:

பெருந்துறை அடுத்துள்ள சின்ன மடத்து பாளையம் கோவை மெயின் ரோடு பகுதியில் முருகன் என்பவரது வீட்டுக்கு அருகே 80 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. அந்த பகுதியில் ஒரு நாய் குட்டி வந்தது.

அப்போது அந்த கிணற்றுக்குள் நாய்க்குட்டி எதிர்பாராதவிதமாக விழுந்து விட்டது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி, கிணற்றுக்குள் இறங்கி நாய்க்குட்டியை உயிருடன் மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com